search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haryana violence"

    • நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்.
    • அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று மகா பஞ்சாயத்து கமிட்டி குற்றச்சாட்டு.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ஜலாபிஷேக யாத்திரையின்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நூ மட்டுமின்றி அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்திற்கும் பரவியது. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், பிரச்சனை காரணமாக தடைபட்ட யாத்திரையை நிறைவு செய்வதற்காக விஷ்வ இந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வால் மாவட்டத்தில் இன்று மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்தினர். வெறுப்பு பேச்சு பேசக்கூடாது, வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின்பேரில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின்போது போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    எனினும் நிபந்தனைகளையும் மீறி, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேச்சாளர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்சசை வெடித்துள்ளது. ஒரு பேச்சாளர் பேசும்போது, "நீங்கள் ஒரு விரலை உயர்த்தினால், உங்கள் கைகளை வெட்டுவோம்" என்று கூறியியதாகவும், மற்றொருவர் சுய பாதுகாப்புக்காக மக்களுக்கு துப்பாக்கிகளுக்கு உரிமம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அப்பகுதியில் நடக்கும் அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று கூறிய மகா பஞ்சாயத்து கமிட்டி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நூ பகுதியில் துணை ராணுவப் படை தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    மேலும், ஜூலை 31ல் நடந்த வன்முறை குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும், வகுப்புவாத மோதல்களில் கொல்லப்பட்ட தங்கள் சமுதாய மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கமிட்டி கோரியது. மேலும், கலவரத்தின் போது ஏற்பட்ட இழப்புகளை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரும் 28ம் தேதி நூ மாவட்டத்தில் மீண்டும் ஜலாபிஷேக யாத்திதையை நடத்த மகா பஞ்சாயத்து கமிட்டி முடிவு செய்துள்ளது. மேலும் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

    • அரியானா வன்முறையில் 2 ஊர்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
    • வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது.

    கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 2 ஊர்க்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 142 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அங்குள்ள எதிர்கட்சியான அரியானா காங்கிரஸ் சார்பில் 10 பேர் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டு, வன்முறை நடந்த நூ பகுதிக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

    அவர்கள் நேற்று அங்கு செல்ல முயன்றபோது ரோஜ்கா மியோ கிராமத்தின் எல்லையில் அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதை அரியானா அரசு உறுதி செய்யவேண்டும்.

    சென்னை:

    அரியானாவில் நடந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    அரியானாவில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன். உண்மையான பலம் என்பது அமைதி, அகிம்சை மற்றும் இணக்கமாக வாழ்வதில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.

    கலவரக்காரர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி அரியானா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதை அரியானா அரசு உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    • அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்றார் முதல் மந்திரி.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

    வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கை எதுவும் நடைபெறாமல் இருக்க 20 துணை ராணுவ படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. எனவே போராட்டக்காரர்கள் அமைதி வழியில் திரும்ப வேண்டும்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×