search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யாராவது விரலை நீட்டினால் இதுதான் நடக்கும்.. நிபந்தனையை மீறி அரியானா இந்து அமைப்பு கூட்டத்தில் வெறுப்பு பேச்சு
    X

    யாராவது விரலை நீட்டினால் இதுதான் நடக்கும்.. நிபந்தனையை மீறி அரியானா இந்து அமைப்பு கூட்டத்தில் வெறுப்பு பேச்சு

    • நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்.
    • அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று மகா பஞ்சாயத்து கமிட்டி குற்றச்சாட்டு.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ஜலாபிஷேக யாத்திரையின்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நூ மட்டுமின்றி அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்திற்கும் பரவியது. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், பிரச்சனை காரணமாக தடைபட்ட யாத்திரையை நிறைவு செய்வதற்காக விஷ்வ இந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வால் மாவட்டத்தில் இன்று மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்தினர். வெறுப்பு பேச்சு பேசக்கூடாது, வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின்பேரில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின்போது போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    எனினும் நிபந்தனைகளையும் மீறி, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேச்சாளர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்சசை வெடித்துள்ளது. ஒரு பேச்சாளர் பேசும்போது, "நீங்கள் ஒரு விரலை உயர்த்தினால், உங்கள் கைகளை வெட்டுவோம்" என்று கூறியியதாகவும், மற்றொருவர் சுய பாதுகாப்புக்காக மக்களுக்கு துப்பாக்கிகளுக்கு உரிமம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அப்பகுதியில் நடக்கும் அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று கூறிய மகா பஞ்சாயத்து கமிட்டி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நூ பகுதியில் துணை ராணுவப் படை தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    மேலும், ஜூலை 31ல் நடந்த வன்முறை குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும், வகுப்புவாத மோதல்களில் கொல்லப்பட்ட தங்கள் சமுதாய மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கமிட்டி கோரியது. மேலும், கலவரத்தின் போது ஏற்பட்ட இழப்புகளை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரும் 28ம் தேதி நூ மாவட்டத்தில் மீண்டும் ஜலாபிஷேக யாத்திதையை நடத்த மகா பஞ்சாயத்து கமிட்டி முடிவு செய்துள்ளது. மேலும் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

    Next Story
    ×