search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manohar Lal Khattar"

    • ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் ராஜினாமா.
    • கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அரியானாவில் கர்னூல் சட்டமன்ற எம்எல்ஏ பதவியை முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.

    விரைவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது.
    • டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 13-ந்தேதி) புறப்பட்டனர்.

    விவசாயிகள் 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் டீசல் உடன் புறப்பட்டனர். இதனால் டெல்லி எல்லையில் கடந்த 2020-2021-ல் ஏற்படுத்தியது போன்று இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதி அரியானா அரசு விவசாயிகள் டிராக்டரில் செல்லாத வண்ணம் சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:-

    கோரிக்கைகளை எழுப்புவதற்கும், டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களின் நோக்கத்தை பார்க்க வேண்டும். கடந்த வருடம் என்ன நடந்தது என்பதை நான் அனைவரும் பார்த்தோம். விவசாயிகள் பல்வேறு எல்லைகளை ஆக்கிரமித்து பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.

    அவர்கள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும். விவாதம் ஜனநாயக முறையில் நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும்.

    இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    • அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்றார் முதல் மந்திரி.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

    வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கை எதுவும் நடைபெறாமல் இருக்க 20 துணை ராணுவ படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. எனவே போராட்டக்காரர்கள் அமைதி வழியில் திரும்ப வேண்டும்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் அறிவித்த போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், விளை பொருட்களை விற்காவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என அரியானா முதல்வர் தெரிவித்துள்ளார். #farmersstrike #kisanakvash
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளின் அவல நிலையை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் அம்மாநில விவசாயிகள் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

    இதனால் அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை அரியானா மாநில விவசாயிகள் கையில் எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக கிசான் அக்வாஷ் என்ற பெயரில் அரியானா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

    மேலும் அரியானா மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும், போராட்டத்தின் இறுதி நாளான ஜூலை 10-ம் நாள் பேரணி நடத்தப்படும் எனவும் அம்மாநில விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, விவசாயிகளுக்கு இங்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரித்தார்.

    மேலும், விளை பொருட்களை விற்பனை செய்யாமல் இருப்பதால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்றும் முதல்மந்திரி மனோகர் லால் கத்தாரி கூறியுள்ளார். மாநில முதல் மந்திரியின் இந்த சர்ச்சை கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 800 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #farmersstrike #kisanakvash
    ×