search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசிகொம்பன்"

    • பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
    • யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

    • முத்துக்குளி வயல் என்னும் வன பகுதியில் தான் அரிக்கொம்பனை விட்டுள்ளார்கள்.
    • அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.

    தமிழக-கேரள மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தது சந்தோஷம் தான் என மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது அதனை வனத்தில் விட்ட பகுதி மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களுக்கு விரைவில் செல்லும் வகையில் உள்ள முத்துக்குளி வயல் என்னும் வன பகுதியில் தான் அரிக்கொம்பனை விட்டுள்ளார்கள்.

    நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாரில் இருந்து 13 கி.மீ.தூரத்தில் தான் முத்துகுளி வயல் உள்ளது. இதனால் சில மணி நேரத்திலேயே அப்பர் கோதையார் மின்வாரிய குடியிருப்புக்கு, அரிசிக்கொம்பன் நினைத்தால் வந்து விட முடியும். அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மா ஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.

    முத்துகுளியில் இருந்து அப்படியே அந்த பக்கமா கொஞ்சதூரம் நடந்தால் குமரி மாவட்டம் பாலமோர் எஸ்டேட் குடியிருப்பிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அங்கிருந்து மாறாமலை, காளிகேசம், கீரிப்பாறை வரைக்கும் வந்தாலும் வரலாம் அரிசிக்கொம்பன். குறுக்கு வெட்டு சரிவுகளை கடந்து சென்றால் ஒரு மணி நேரத்தில் அரிசிக்கொம்பனால் லோயர் கோதையாரை அடைந்துவிட முடியும். கோதையாரை சுற்றி குற்றியாறு, கிழவியாறு, மோதிரமலை என்று 10-க்கும் மேற்பட்ட வன கிராமங்கள் உள்ளன.

    சரி, தமிழ்நாடு பக்கமே இனி தலைவைத்து படுக்க மாட்டேன்னு அரிசிக்கொம்பன் நினைத்தால் வனத்தின் தெற்கு பக்கமா கொஞ்சம் காலார நடந்தால் போதும்.... கேரளாவின் நெய்யாறு வனப்பகுதி வந்துவிடும். அப்படியே விதுரா, நெடுமங்காடு, காட்டா கடைன்னு ஊருக்குள்ள புகுந்து போகவும் வாய்ப்பிருக்கு.

    எங்கே செல்ல வேண்டும் என்று ஒருவனால் மட்டுமே முடிவெடுக்க முடியும். அவன்.... அரிசி கொம்பன் மட்டுமே...!

    ×