search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மூர்த்தி"

    • மதுரை சூர்யா நகரில் 2 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக நிறுவப்பட்டது.
    • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யாநகர் அருண்சிட்டி பகுதியில் மின் பகிர்மான கழகம் சார்பில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

    இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தின்போது இந்த பகுதியில் சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி தற்போது இந்த பகுதியில் உள்ள அருண் சிட்டியில் 2 புதிய மின்மாற்றி கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.

    அதேபோல சுத்தமான குடிநீர் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டு களில் இந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அதன்பிறகு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பத்திரபதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த், பதிவுத்துறை தலைவர் சிவனருள், மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சப்-கலெக்டர் குணால் யாதவ், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை பொருத்தவரை 39 புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் பத்திரப்பதிவுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிக வரித்துறையில் ரூ.21 ஆயிரத்து 500 கோடியும், பதிவு துறையில் ரூ.3 ஆயிரம் கோடியும் வருவாய் உயர்ந்து உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பத்திரப்பதிவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3 அடி முதல் 4 அடியில் மட்டுமே பாதைகள் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு உள்ளோம்.

    மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். அந்த இடத்தின் அமைப்பு எந்த மாதிரியாக உள்ளது? என்பதை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

    'டெஸ்ட் பர்சேஸ்' என்ற பெயரில் வணிகர்களிடம் தமிழக அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை. வணிகர்களுக்கு பாதுகாவலனாக இந்த அரசு விளங்கி வருகிறது. நியாயமாக, நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    மக்களிடம் வாங்கக்கூடிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதில் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 'டெஸ்ட் பர்சேஸ்' குறித்து வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வணிக வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
    • வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

    மதுரை

    மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

    முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
    • வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.

    அவனியாபுரம்:

    மதுரை அருகே ஒத்தக்கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் போலி பத்திரம் ரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. யாரெல்லாம் நிலத்தை பறிகொடுத்துள்ளார்களோ, அவர்கள் அதிகாரிகளிடம் மனுவாக அளித்து தன்னுடைய நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.

    வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித்துறை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி வருவாயும் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ. 8300 கோடி வருவாயும் என மொத்தம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    நடிகர் சூரி எனது தொகுதிக்காரர் என்னுடைய நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையிடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.

    யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளவில்லை. வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    • அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பத்திரங்களை பதிவு செய்ய வருவோர் ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

    கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவண பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ந்தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

    இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21-ந்தேதி வரை 16 லட்சத்து 59 ஆயிரத்து 128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2,325 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
    • வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும்.

    அவனியாபுரம்:

    மதுரை குலமங்கலம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. அதில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 479 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். பின்பு அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

    வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும். பத்திரப்பதிவுத்துறையில் ஒரே நாளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்தது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    இந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்திரப்பதிவுத்துறையில் அதுபோன்று எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலக தயார்.

    பத்திரப்பதிவுத் துறையில் இந்தியாவிலேயே முன் உதாரணமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு இன்னும் கையெழுத்திடாமல் 7 மாதமாக கிடப்பில் போட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்.

    அவனியாபுரம்

    மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு இன்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசை இரட்டை மாட்டு வண்டிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 99 ரொக்கப் பரிசை அவனியாபுரம் மோகனசாமிகுமார் வண்டி பெற்றது.

    2-வது பரிசை தூத்துக்குடி விஜயகுமார் வண்டி ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 99-ஐ பெற்றது. 3-வது பரிசை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வேப்பங்குளம் கண்ணன் மாட்டுவண்டி ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ஐ பரிசாக பெற்றது.

    சிறிய மாட்டு பிரிவில் முதல் பரிசு பெற்ற மாட்டு வண்டிக்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ம், 2-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ.ஒரு லட்சத்து 99-ம், 3-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ. 75 ஆயிரத்து 99 ரூபாயும் வழங்கப்பட்டன.

    விறுவிறுப்பாக நடந்த இந்த பந்தயத்தை திரளானோர் கண்டு களித்தனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், வெற்றிக் கோப்பை மற்றும் நாட்டு மாடு கன்றுக்குட்டிகளை அமைச்சர் பி.மூர்த்தி பரிசாக வழங்கினார். ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், இலக்கிய அணி நேருபாண்டியன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், நிர்வாகிகள் வக்கீல் கலாநிதி, சசிக்குமார், ஆசைக்கண்ணன், பூமிநாதன், ராஜவேல் சரண்யா, பூங்கோதை மலைவீரன், ஒத்தக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×