search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரான்ஸ்பார்மர்கள்"

    • பரமக்குடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர்களை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரத்தில் நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனிடம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் மின்வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சோமநாதபுரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தெளிச்சத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மங்களேசுவரி சேதுபதி, செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி முன்னிலை வகித்தனர்.

    அதேபோல் கமுதக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரையும் முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கமுதக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா மோகன் வரவேற்றார்.

    • மதுரை சூர்யா நகரில் 2 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக நிறுவப்பட்டது.
    • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யாநகர் அருண்சிட்டி பகுதியில் மின் பகிர்மான கழகம் சார்பில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

    இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தின்போது இந்த பகுதியில் சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி தற்போது இந்த பகுதியில் உள்ள அருண் சிட்டியில் 2 புதிய மின்மாற்றி கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.

    அதேபோல சுத்தமான குடிநீர் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டு களில் இந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் நகரில் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
    • ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக இந்த மின்தடை ஏற்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள மின்வாரிய டிரான்ஸ் பார்மர்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் லேசான காற்று, மழை பெய்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

    இதுகுறித்து புகார் அளித்தால் மின்வாரிய ஊழியர்கள் அந்த நேரத்தில் சரிசெய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை என்று மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் 3 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியது. இதனால் காலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. தற்காலிக தீர்வாக பட்டணம்காத்தான், ராமநாதபுரம் உப மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சிறிது நேரம் முறை வைத்து மின்வினியோகம் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் அடிக்கடி 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்படுவதால் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் அன்றாட பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    • குளம் போல் தேங்கிய தண்ணீரில் டிரான்ஸ்பார்மர்கள் மிதக்கிறது.
    • குறிப்பிட்ட அளவு தண்ணீர் வடிந்தபின் மீதமுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் 3 நாட்களாக தேங்கி உள்ளது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு 95 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. வாடிப்பட்டி மயானம் முன்பு தாதம்பட்டிக்கு செல்லும் சாலையோரம் 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.

    அந்த டிரான்ஸ்பார்மர்களுக்கு கீழ் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதன் எதிர்புறம் சாலையில் தண்ணீர் வடிந்து செல்ல தற்காலிகமாக வடிகால் அமைக்கப்பட்டது. அந்த வடிகால் சாலையின் மட்டத்திற்கு உள்ளது. அதனால் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வடிந்தபின் மீதமுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் 3 நாட்களாக தேங்கி உள்ளது. 

    ×