என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "City"
- மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.
- நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.
சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் நுண்ணறிவு பிரிவு சார்பில் தலா ஒரு சப்- இன்ஸ்பெக்டர் நியமிக் கப்பட்டு, இவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களின் உண்மை தன்மை குறித்த தக வல்களை திரட்டி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லது உதவி கமிஷனர் மூலம் நேரடி யாக போலீஸ் கமிஷனருக்கு தகவல்களை தெரி விப்பார்கள். இந்த நிலையில் சேலம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக் டராக இருந்த கற்பகம், ஆட்சி மாற்றத்திற்கு பின் மாறுதல் செய்யப் பட்டார். அதை த்தொடர்ந்து இன்று வரை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இப்பிரிவு செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.
- ராமநாதபுரம் நகரில் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
- ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக இந்த மின்தடை ஏற்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள மின்வாரிய டிரான்ஸ் பார்மர்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் லேசான காற்று, மழை பெய்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து புகார் அளித்தால் மின்வாரிய ஊழியர்கள் அந்த நேரத்தில் சரிசெய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை என்று மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.
நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் 3 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியது. இதனால் காலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. தற்காலிக தீர்வாக பட்டணம்காத்தான், ராமநாதபுரம் உப மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சிறிது நேரம் முறை வைத்து மின்வினியோகம் வழங்கினர்.
ராமநாதபுரத்தில் அடிக்கடி 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்படுவதால் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் அன்றாட பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில், லாட்ஜ்களில் சேரும் குப்பைகளை அவர்களே அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பாலையம்பட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தீவிர தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், நகர் நல அலுவலர் ராஜ நந்தினி, துணைத் தலைவர், பழனிசாமி முன்னிலையில், சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் ''எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், வீட்டிலேயே குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பேன்'' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில், லாட்ஜ்களில் சேரும் குப்பைகளை அவர்களே அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கும்பகோணம்:
சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்கள் செய்தித்தாள்களை படித்து குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். செல்போன் பயன்பாட்டை மாணவிகள் முழுவதும் குறைக்க வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரத்தில் இன்னும் அதிகளவில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும். ஒரே நாளில் படித்து ஐ.ஏ.எஸ். ஆக முடியாது. ஆரம்ப நாட்களிலிருந்து படித்து வந்தால்தான் சாத்தியமாகும். இதற்காக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனால் நீட் தேர்வுக்கு தகுந்தாற்போல் நாம் படிக்க வேண்டும். அதற்கு நமது மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும். ரெயில்வே மற்றும் மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதில், அந்தந்த மாநிலங்கள் மாணவர்களை ஊக்குவித்து தயார்படுத்துகிறது.
ஆனால் தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்க உந்து சக்திகள் இல்லை. நாம் என்ன மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கனவு காண வேண்டும். கனவு நிறைவேறாமல் போனாலும், கனவு காணுவதை விட்டுவிடக் கூடாது. கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்.
நகர பகுதிகளில் உள்ள வயல்கள், வெட்ட வெளிகளை அழித்து விட்டு வீடுகளை கட்டியுள்ளனர். பிளாட் போடப்பட்டு வருகிறது. இதனால்தான் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் இன்னமும் வெப்பம் அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #MeteorologistRamanan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்