search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாபிஷேக விழா"

    • அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து பரமேஸ் வரர் திருமேனியில் உள்ள அன்னத்தை எடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    மீதமுள்ள சாதத்தை அருகிலுள்ள காவிரி ஆறு மற்றும் நீர் நிலை களுக்கு கொண்டு சென்று நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினார்கள். அன்னாபிஷேக விழா வில் கலந்து கொண்டு இறைவனை வழிபடுபவர் களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதே போல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பழைய காசிவிஸ் வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள மருந்தீ ஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவபெரு மான் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அருகே உள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், விலாரி பாளையம் மோட்டூர் சொர்ணாம்பிகை உடனுறை ஈஸ்வரமூர்த்தீஸ்வரர் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கைலாசநாதர் கோவில்

    திருச்செங்கோடு நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பழமையான சுகுந்தகுந் தலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    கைலாசநாதர் சாமிக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னம் சாற்றப்பட்டு அன்னாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு 8 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்குமம், உள்ளிட்ட 18 வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் .

    • கொடுமுடி மகுடேஸ்வரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.
    • பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    கொடுமுடி:

    ஜப்பசி மாதம் பவுர்ண மியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.

    கொடுமுடி மகுடேஸ்வ ரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் மகுடேஸ்வர ருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷே கம் நடந்தது.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகுடே ஸ்வரரை வழிபட்டனர். பின்னர் கோவில் அர்சகர் பிரபு குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடத்த ப்பட்ட பின்னர் காவிரி ஆற்றில் அர்ப்பணம் செய்ய ப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

    பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு மாலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் அபி ேஷகமும், இரவு மகாபிேஷ கம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்ய அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்தது.

    சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் திருமேணி 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாசநாதருக்கு பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதே போல் சென்னி மலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள மிக பழைமையான மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.

    கைலாசநாதர் திருமேணி 25 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு பூஜைகள் நடந்தது.

    புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், சுப்பிரமணியர், கோவில், காமாட்சி அம்மன் கோவில், மருந்தீஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் சிவபெரு மான் மற்றும் அம்மைக்கு அன்னாபிஷே சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் அன்னத்தினால் தெய்வங்களை அலங்க ரிக்கப்பட்டு காய்கறி, பழங்க ளால் மாலை அணிவிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பத்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள உலக புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் பவுர்ணமி யையொட்டி நேற்று அதி காலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

    இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    இதில் பவானிசாகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • இறைவனின் அற்புத ரூபத்தை தரிசிக்கக் கூடிய நாள் என்றால் அது ஐப்பசி மாத பவுர்ணமி தான்.
    • பலகாரங்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி,

    ஐப்பசி மாதம் பெளர்ணமி திதி சிவ பெருமானின் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அபிஷேக பிரியரான சிவ பெருமானுக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் அற்புத ரூபத்தை தரிசிக்கக் கூடிய நாள் என்றால் அது ஐப்பசி மாத பவுர்ணமி தான்.

    அதனால் தான் இறைவனுக்கு அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து, ஒவ்வொரு பிடி அன்னத்திலும் சிவலிங்கத்தை காணும் வழக்கத்தை நமது முன்னோர்கள் வகுத்துள்ள னர்.

    உணவை வீணடிப்பது என்பது மிகப் பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கி றார்கள்.

    அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் அனைத்திலும் அன்னா பிஷேகம் நடைபெற்றது. தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சிவாலயத்தில் 30 கிலோ அரிசி சாதத்தால் அண்ணா அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் மகாலிங்கேஸ்வரர் அன்னத்தால் அலங்கரிக் கப்பட்டு சிறப்பு தீபாரா தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அபிஷேகம் செய்த சாதத்தில் தயிர் சாதம் செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது.

    புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது.

    இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டது. பின்னர் சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

    தருமபுரி குமார சாமிப் பேட்டை சிவகாம சுந்தரி உடனா கிய ஆனந்த நடராஜர் கோவி லில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

    இதேபோல் தருமபுரி ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னம் மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி பூபதி திருமண மண்டபம் பின்புறம் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், பழைய தருமபுரி கருணை நாதர் கோவில், புட்டி ரெட்டிபட்டி சோமநாதர் கோவில் ஆகிய கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி அடுத்த சவுலுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • ஆலயத்தில் நேற்று இரவு அன்னாபிஷேக பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
    • சிவபெருமானுக்கு 12 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    பென்னாகரம்,

    பென்னாகரம் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை த்ரியம்பிகேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு அன்னாபிஷேக பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    சிவபெருமானுக்கு 12 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. லிங்க வடிவிலான சிவபெருமான் அண்ண அலங்காரத்தில் சிறப்புற காட்சி அளித்தார்.

    தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து, சிவ பெருமானை வழிபட்டனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாயநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு 18 வகையான காய்கறிகள் சுமார் 100 கிலோ கொண்டு காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பொதுவாக இந்துக்கள் உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேக விழா கொண்டாட ப்படுகிறது.

    கைலாசநாதருக்கு முதலில் பசும்பால், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின்னர் சுவாமியின் மீது அன்னத்தால் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டு பின்னர் அன்னத்தை கலைத்து குழந்தை பேறு இல்லாதோர்க்கு அந்த அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அன்ன அபிஷேகத்தின் போது செய்யப்பட்டிருந்த அலங்கார புஷ்பங்கள் அருகில் உள்ள உத்திர காவிரி ஆற்றில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து நீரைக் கொண்டு வந்த சுவாமிக்கு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டடு தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது.

    இந்த அன்னாபிஷேக விழாவில் பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கைலாயநாதரை வழிபட்டு சென்றனர்.

    • சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
    • அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    பரமத்தி வேலூர் அருகே கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, பரமேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட அரிசியால் அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.

    பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் திருமேனியில் சாத்தப்பட்ட அன்னத்தை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    சாமி மீது சாத்தப்பட்ட ஒவ்வொரு சாதமும் லிங்கமாக கருதி பொது மக்கள் வாங்கி உண்டனர். மீதமுள்ள சாதத்தை நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினர். அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டு

    இறைவனை வழிபடுபவர்க ளுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவனுக்கு 100 கிலோ அரிசியால் செய்யப்பட்ட அன்னமும், வேலூர் செட்டியார் தெரு அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன், மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், நந்திகேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • கடவுள்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
    • விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் தில்லை நகரில் இரத்னாம்பி கை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

    நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள், அஷ்டதிக் நாகர்கள் ஆகிய கடவுள்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு பிரதோஷம், கிருத்திகை, மஹாசிவராத்திரி, சங்க டஹர சதுர்த்தி , அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் கோவிலுக்கு வந்து நாள்தோறும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஐப்பசி மாத பௌர்ணமி யை யொட்டி மூலவர் நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.முன்னதாக சந்தனம்,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம்,பால்,மஞ்சல்,இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையானதிரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவனுக்கு அன்னம் சாத்தப்பட்டு புடலை, பீர்க்கன், கேரட், பீன்ஸ், உருளை, தக்காளி, கொத்தவரை, முள்ளங்கி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளும் ஆப்பிள், ஆரஞ்சு,திராட்சை, மாதுளை, கொய்யா, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகளும் அணிவிக்கப்பட்டது. இதே போன்று நந்தியம் பெருமானுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவபெருமான் அன்னம் காய்கறிகள் பழங்களுடன் கூடிய அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து அன்னம் அலங்காரம் கலைக்கப்பட்டு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வர் கோவில், துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில், பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவில், குரும்பலூரில் உள்ள பஞ்சநந்தீஸ்வரர் உடனுறை தர்மசம்வர்த்தினி கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×