search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
    X

    கைலாசநாதர் அன்னாபிஷேக கோலத்திலும், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி வேலூர் ஏகாம்பரநாதர் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பலித்த காட்சி. 

    ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

    • அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து பரமேஸ் வரர் திருமேனியில் உள்ள அன்னத்தை எடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    மீதமுள்ள சாதத்தை அருகிலுள்ள காவிரி ஆறு மற்றும் நீர் நிலை களுக்கு கொண்டு சென்று நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினார்கள். அன்னாபிஷேக விழா வில் கலந்து கொண்டு இறைவனை வழிபடுபவர் களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதே போல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பழைய காசிவிஸ் வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள மருந்தீ ஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவபெரு மான் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அருகே உள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், விலாரி பாளையம் மோட்டூர் சொர்ணாம்பிகை உடனுறை ஈஸ்வரமூர்த்தீஸ்வரர் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கைலாசநாதர் கோவில்

    திருச்செங்கோடு நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பழமையான சுகுந்தகுந் தலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    கைலாசநாதர் சாமிக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னம் சாற்றப்பட்டு அன்னாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு 8 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்குமம், உள்ளிட்ட 18 வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் .

    Next Story
    ×