search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர்  சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
    X

    அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

    • சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
    • அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    பரமத்தி வேலூர் அருகே கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, பரமேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட அரிசியால் அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.

    பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் திருமேனியில் சாத்தப்பட்ட அன்னத்தை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    சாமி மீது சாத்தப்பட்ட ஒவ்வொரு சாதமும் லிங்கமாக கருதி பொது மக்கள் வாங்கி உண்டனர். மீதமுள்ள சாதத்தை நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினர். அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டு

    இறைவனை வழிபடுபவர்க ளுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவனுக்கு 100 கிலோ அரிசியால் செய்யப்பட்ட அன்னமும், வேலூர் செட்டியார் தெரு அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன், மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், நந்திகேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×