search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன்"

    • சுவாமிக்கு விசேஷ சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.
    • 2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பஞ்சமுக ஜெயமாருதி நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    1-ந்தேதி அதிகாலை மங்கள இசையுடன் விசேஷ பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்குக் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை சொர்ண ராம பாதுகை சிறப்பு தரிசனம் செய்ய பஞ்சமுக ஜெயமாருதி சேவா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

    புதிய ரூபாய் நாணயங்களை மந்திர பூர்வமாகச் சுத்தம் செய்து சுவாமிக்கு விசேஷ சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

    பக்தர்களின் சேவைகளுக்கு ஏற்றாற் போல் அர்ச்சனை செய்யப்பட்ட நாணயம் மற்றும் பழங்களுடன் கூடிய பிரசாதம் வழங்கப்படும். 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியில் சுமார் 3 டன் பலவகையான பழங்களினால் பந்தல் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) எழுந்தருள் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், செயலாளர் எஸ்.நரசிம்மன், அறங்காவலர்கள் யுவராஜ், நடராஜன், செயலாளர் பழனிப்பன், செல்வம் மற்றும் கச்சபேஸ்வரன் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று ஜெய் சிவராமர் கோவில் உள்ளது.
    • இக்கோவில் 12 அடி உயரத்தில் வீர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று ஜெய் சிவராமர் கோவில் உள்ளது.

    இக்கோவில் நிர்வாகி சந்திரசேகர் மற்றும் பக்தர்கள் முயற்சியால், 12 அடி உயரத்தில் வீர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் ஆகம முறைப்படி கைதேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த வீர அனுமன் சிலை, அங்கிருந்து லாரியில் வாழப்பாடிக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பக்தர்கள் வழிபாட்டுக்கு பின், பிரத்தியேக செயற்கை குளம் அமைத்து

    இச்சிலை தண்ணீரில் வைக்கப்பட உள்ளது.

    • கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.
    • ‘சர்வமங்கள கார்யானு கூலம் ‘ என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனைக் குறிப்பிடுவார்கள்.

    இறை அவதாரங்களில் ஆஞ்சநேயருக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு. எனவே வைணவத் தலங்களுக்கு வழிபாடு செய்யச்செல்லும் போது, மறக்காமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த தர்ப்பயத்தை அறிந்து, உணர்ந்து நாம் ஆஞ்ச நேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.

    பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள். இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

    வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது. இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப்பறித்து சீதை மாலையாக அணிவித்தார். அன்று முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது வழக்கமாகி விட்டது.

    அதுபோல ராமரின் ஆயுள் பலத்துக்காக நெற்றியில் செந்தூரம் பூசுவதாக சீதாதேவி கூறியதை கேட்ட ஆஞ்சநேயர், 'என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் நானும் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்' என்று பூசிக்கொண்டார். இதில் இருந்தே ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சனி, செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீராமஜெயம் கூறி ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

    ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.

    மனதில் தாங்க முடியாத அளவுக்கு வேதனை உள்ளதா? ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டம் படியுங்கள். துன்பங்கள் தூசியாக பறந்தோடி விடும். அவரை நினைத்தாலே புத்தி வரும், பக்தி வரும், புகழ் வரும், செல்வம் வரும், மன உறுதி வரும், வீரம் வரும்.அனைத்துக்கும் மேலாக அவர் கடும் பிரம்மச்சார்யத்தை கடை பிடிப்பதால் நம் மனதில் ஒரு நொடி கூட தேவை இல்லாத காம உணர்வு வரவே வராது. ஆஞ்சநேய விரதம் இருந்தால், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே நட்பு அதிகரிக்கும். இதன் மூலம் குபேரனுக்கு இணையான வாழ்வை பெறலாம்.

    தினமும் காலை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, உங்கள் பணிகளை செய்து வந்தால் வெற்றி மீது வெற்றி வரும். 13 முடிச்சுள்ள அனுமன் விரத கயிறை கையில் கட்டிக் கொண்டால் உங்களது எல்லா முயற்சிகளும் இடையூறு இல்லாமல் நிறைவேறும்.

    ஆஞ்சநேயரின் சன்னதி முன்பு நின்று, அவரது மூல மந்திரத்தை 9 தடவை சொல்லி வழிபட்டால் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும்.

    ஆஞ்சநேயரிடம் மனம் உருக, உருக நம்மை பிடித்த தோஷங்கள், கரைந்தோடிவிடும்.

    அவரை வழிபட்டால் இத்தனை சிறப்புகளும் நமக்கும் நிச்சயம் வந்துசேரும்.

    • பெண்கள் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அனுமன்ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் பெரிய குப்பம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மூல மந்திர யாகம் நடைபெற்றது.

    பின்னர் 32 அடி உயர முள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் 32 அடி உயரம் கொண்ட வடமாலை சாற்றப்பட்டது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்ச நேயருக்கு 67 ஆயிரம் வடை மாலைகள் சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருப்பந்தியூர், வய லூர், கொட்டையூர், மப்பேடு, கண்ணூர், பண்ணூர், ஸ்ரீபெ ரும்புதூர், திருவள்ளூர், பேரம்பாக்கம், சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பூஜைகளும் நடை பெற்றது. 1008 மிளகு வடையால் மாலை அணிவித்தும், பாதாம் முந்திரியால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ வெண்ணையை கொண்டு அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • அனுமனை வழிபட்டால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாகும்.
    • அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

    அனுமன் ஜெயந்தியை யொட்டி சென்னை அசோக் நகர் 12 அடி உயர ஆஞ்ச நேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அனுமனை வழிபட்டால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்ச நேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு, தரிசனம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணெய் சாத்தி, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதேபோல சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 

    நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார்.
    • எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன.

    ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார்.

    எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

    எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன், என்று சொன்னார். ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான்.

    விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை. இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய்.

    என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர், என்றார். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்றார். தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

    • இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது.
    • எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.

    மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர்.

    அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.

    ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.

    ஆலய வரலாறு

    ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமத்தை ஓதி ராமசக்கரத்தை வழிபட்டு வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என நம்பப்படுகின்றது. இக்கோவில் 22.04.1999 இல் தொடங்கி வைக்கப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு உடுவில் மருதனார்மட திருப்பதியில் நிறுவப்பட்டது. இக் கோவிலில் காலை மதியம் மற்றும் அந்தி நேர பூஜைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிஷேகத்தின் பின்னர் 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் 09.02.2005 இல் நடைபெற்றது.

    • இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • துன்பங்களில் இருந்து விடை பெற்று நல்வாழ்வு அடைவீர்கள்.

    அனுமன் ஜெயந்தியான இன்று அனுமனுக்கு உகந்த இந்த போற்றி சொல்லி வழிபாடு செய்வது வாழ்வில் மேன்மை அடைய உதவும். துன்பத்திலிருந்து நீங்க ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் சொல்லி வர உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும். துன்பங்களில் இருந்து விடை பெற்று நல்வாழ்வு அடைவீர்கள்.

    1. ஓம் அனுமனே போற்றி

    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    3. ஓம் அறக்காவலனே போற்றி

    4. ஓம் அவதார புருஷனே போற்றி

    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி

    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி

    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி

    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி

    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி

    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி

    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி

    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி

    17. ஓம் ஒப்பிலானே போற்றி

    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    19. ஓம் கதாயுதனே போற்றி

    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி

    22. ஓம் கர்மயோகியே போற்றி

    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி

    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி

    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி

    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி

    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி

    29. ஓம் கூப்பிய கரனே போற்றி

    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி

    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி

    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி

    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி

    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி

    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி

    39. ஓம் சூராதி சூரனே போற்றி

    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி

    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி

    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி

    44. ஓம் சோக நாசகனே போற்றி

    45. ஓம் தவயோகியே போற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி

    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி

    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    49. ஓம் தீதழிப்பவனே போற்றி

    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி

    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி

    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி

    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி

    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி

    57. ஓம் பக்தி வடிவனே போற்றி

    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி

    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி

    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி

    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி

    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி

    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி

    67. ஓம் புலனை வென்றவனே போற்றி

    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி

    69. ஓம் புண்ணியனே போற்றி

    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி

    72. ஓம் மனோவேகனே போற்றி

    73. ஓம் மாவீரனே போற்றி

    74. ஓம் மாருதியே போற்றி

    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி

    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி

    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி

    79. ஓம் ராமதாசனே போற்றி

    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி

    82. ஓம் ராம சோதரனே போற்றி

    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி

    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி

    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி

    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி

    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி

    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி

    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி

    93. ஓம் லங்கா தகனனே போற்றி

    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி

    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி

    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி

    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி

    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி

    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி

    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி

    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி

    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி

    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி

    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி

    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    • 11 மணிக்கு மேல் 1008 லிட்டர் பால் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.
    • மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.

    நாமக்கல் கோட்டையில் உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லாலான ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று விழாவுக்கு உள்ளூர் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய கோட்டை ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பார்க் ரோட்டில் எம்.ஜி.ஆர் வளைவில் இருந்து மதுரைவீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவால் நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு, எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்து வருகிறது.

    • துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.
    • இன்று முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம். இப்போது அனுமனுக்கு விரதம் இருக்கும் முறைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.

    அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.

    மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம்.

    சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்: 'ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

    அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு பலகாரங்களான லட்டு, பூந்தி, மற்றும் உகந்த மலர்களான துளசி, வெற்றிலை போன்றவற்றை படையலிட்டு வழிபாடு செய்வார்கள். 

    ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார்.

    வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

    ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.

    அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். இன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

    • நாளை அதிகாலை சாமிக்கு 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.
    • காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு இருக்கும்.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம், அபிஷேகம் நடைபெறும்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை சாமிக்கு 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை சுமார் 90 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று (வியாழக்கிழமை) முடிக்கப்பட்டு, மாலை கோர்க்கும் பணி தொடங்கும் என வடை தயாரிப்பு பணியில் ஈடுபடும் நபர்கள் கூறினர்.

    இதற்கிடையே ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இருந்து கோவில் வரை பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் தடுப்பு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்துள்ளோம். விரைவாக சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.250 கட்டணத்தில் தனிவழி மற்றும் இலவச தரிசனம் செய்யும் வழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    காலை 11 மணி வரை மட்டுமே 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு இருக்கும். எனவே அதன் பிறகு வரும் பக்தர்கள் வடைமாலை அலங்காரத்தை பார்வையிட அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இணையதளம் மூலமாகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை கோட்டை சாலையில் வாகனங்கள் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதுதவிர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டிரோன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • ஜனவரி 1-ந்தேதி அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • 2-ந்தேதி சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளுதல் நடக்கிறது.

    திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், திண்டிவனத்திலிருந்து 29-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலில் 23-ந்தேதி (நாளை) அனுமன் ஜெயந்தி மகா உற்சவம் நடக்க உள்ளது. இந்த விழாவிற்குண்டான பூர்வாங்க பூஜைகள் நடந்து வருகிறது.

    லட்சார்ச்சனை, விஷேச யாகசாலை பூஜை காலை மற்றும் மாலை, இருவேளைகளிலும் நடக்கிறது. 23-ந்தேதி (நாளை) காலை 8.30 மணியளவில் மூலவர் ஆஞ்சநேயருக்கு, 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் ''விஷேச திருமஞ்சனம்'' நடைபெற உள்ளது.

    ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணியிலிருந்து ''அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள்'' நடைபெறும். அதிகாலை முதலே, பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு சீனிவாச பெருமாள் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளுதல். 23-ந்தேதி (நாளை) மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து வைபவங்களுக்கும், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் கார்களை நிறுத்த, சத்துவா நிறுவன வளாகத்தில், முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு, அருகாமையில், சாலை ஓரமாக உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆலயத்திற்கு வருகை தரும் தாய்மார்களில், தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்டும் தேவையுள்ளவர்களுக்கென தனியறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவல் பஞ்சவாடி நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

    ×