search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக மாநாடு"

    • வெளியூர்களிலிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான கார்களிலும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர்.
    • மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன.

    மதுரை:

    தமிழ்நாட்டையே பிரமிக்க செய்யும் வகையில் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு இன்று காலை முதல் தொடங்கி விமரிசையாகவும், எழுச்சியோடும் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் சாரை சாரையாக வந்து மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர்.

    சென்னையில் இருந்து நேற்று சிறப்பு ரெயிலில் 1,300 பேர் மதுரை வந்தடைந்தனர். இதேபோல், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகளின் தலைமையில் பஸ், வேன்களில் மாநாட்டிற்காக குவிந்துள்ளனர். இதனால் மதுரை, எப்போதும் இல்லாத அளவுக்கு அ.தி.மு.க. தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    முன்னதாக மதுரை வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட கட்சியினர் தங்கள் இல்ல விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வது போல் மாநாட்டில் பங்கேற்க மதுரையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் குவிந்ததால் மாநாட்டு திடல் தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் மதியம் இரண்டு மணிக்கு மேல் மாநாட்டு திடலில் பல லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வெளியூர்களிலிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான கார்களிலும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர். அதிலும் ஏராளமானோர் மனைவி, பெற்றோர், குழந்தைகளுடனும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். இதனால் மாநாட்டுக்கு வந்த ஏராளமான வாகனங்களை ஒழுங்குபடுத்த அ.தி.மு.க. பேரவை நிர்வாகிகள் சுமார் 3,000 பேர் பணியில் ஈடுபட்டனர்.

    அதேபோல், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. இதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்த மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் மாலையில் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். இதற்காக அவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடும் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுச்சி உரையாற்றுகிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

    • திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
    • மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    மதுரை:

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    அதனை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வராற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    நேற்று காலை முதலே சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ரெயில்கள், பஸ், வேன், கார் மூலமாகவும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மாநாட்டு திடலை நோக்கி படையெடுத்து வந்தனர்.

    அவ்வாறு பகலிலேயே வந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்து வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிகளில் ஓய்வெடுத்தனர். பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அறை எடுக்காதவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கி இரவை கழித்து இன்று காலை மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். காலையிலேயே அவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    • அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.

    அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரைக்கு வருகை தந்தார்.

    அவருக்கு வழியெங்கும் மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார்.
    • தொண்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தடையின்றி உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    கடந்த 1972-ம் ஆண்டு தமிழக மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. இன்று வரை அழியா புகழுடனும், வலுவான தொண்டர்களின் பலத்தோடும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது.

    தமிழகத்தில் சுமார் 31 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் பலத்துடன் வலுவோடும், பொலிவோடும் வெற்றி நடை போட செய்தார். இந்தியாவில் 3-வது பெரிய அரசியல் இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கி தேசிய அரசியலிலும் ஜெயலலிதா வரலாற்று சாதனை படைத்தார்.

    அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சுமார் 2 கோடி உறுப்பினர்களுடன் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத தயாராகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.

    அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள். இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 50 நாட்களாக இதற்கான பணிகள் இரவு, பகலாக முழு வீச்சில் நடைபெற்று மேடை மற்றும் பந்தல் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மாநாட்டு திடலில் 51 அடி உயர கொடிக்கம்பம், புகைப்பட கண்காட்சி அரங்கு, சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் கேலரிகள், வாகன நிறுத்துமிடங்கள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் பகுதி மின்னலங்காரத்தால் ஜொலித்து வருகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பிரமாண்ட கட் அவுட்டுகளும் பார்ப்பவர்களை கவர்ந்து வருகின்றன. வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் எடப்பாடி பழனிசாமி தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை காலை 8 மணி அளவில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முன்னதாக மாநாட்டின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சீருடை அணிந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாட்டு பந்தலில் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இது தவிர மாநாடு மேடையில் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக கூடி நின்று மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. எனவே நான்கு புறங்களிலும் இருந்து ண்டர்கள் எவ்வித சிரமமும் இன்றி மாநாட்டு பந்தலுக்கு வந்து சேர பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொண்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தடையின்றி உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காலை உணவாக இட்லி, பொங்கல், உப்புமா மற்றும் வடை, சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், வெஜிடபிள் சாதம் என்று தொண்டர்கள் விரும்புகிற வகையில் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கூட்டுகள், ஊறுகாய் வழங்கப்படுகின்றன. அதனுடன் 300 மில்லி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படுகிறது. இதற்கான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் சமையல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

    சுமார் 10,000 ஊழியர்கள் சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடமாடும் குடிநீர் லாரிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

    நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொண்டர்கள் காலை முதல் மாலை வரை மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டை செந்தில் ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, பாடல்கள், மதுரை முத்துவின் காமெடி பட்டிமன்றம், திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை 5 மணி அளவில் அ.தி.மு.க. மாநாட்டின் முத்தாய்ப்பான 32 தீர்மானம் நிறைவேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை பாராட்டியும், தி.மு.க. அரசை விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளும் அ.தி.மு.க. மாநாட்டு தீர்மானத்தில் இடம்பெறுகின்றன.

    இது தவிர வருகிற பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகம், கூட்டணி குறித்தும் தீர்மானத்தில் விளக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் தலைமை உரையாற்றுகிறார். அப்போது முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார். இரவு 8.30 மணிக்குள் மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து தொண்டர்கள் ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. மாநாட்டை ஒட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டு, வரவேற்பு பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் குவிய தொடங்கியுள்ளனர்.

    வெளியூர்களில் இருந்து வந்துள்ள கட்சியினர் மதுரையில் உள்ள அனைத்து லாட்ஜூகள் மற்றும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி உள்ளதால் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பியுள்ளன.

    மேலும் பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் பகுதிகளிலும் மதுரையின் புறநகர் பகுதிகளிலும் உள்ள தங்கு விடுதிகளிலும் அவர்கள் தங்கி உள்ளனர். சென்னையில் இருந்து மதுரை வந்துள்ள சிறப்பு ரெயில் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் இன்று காலை முதலே மாநாட்டுக்காக குவிந்து வருகிறார்கள்.

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அ.தி.மு.க. இயக்கத்திற்கு உறுதியாக ஏற்படுத்தும்.

    அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற இந்த எழுச்சி மாநாடு முதல் புள்ளியாக, அமைவதுடன், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் அரசியல் மாநாடாக அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
    • புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் முழுவீச்சில் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டு மேடை மட்டும் 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பழமையான அரண்மனைத் தோற்றத்துடன் பின்னணியில் மலைக்குன்றுகள் இருப்பது போன்ற முகப்பை திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அமைத்துள்ளனர். இந்த மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டுப் பந்தல் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருகை தரும் அ.தி.மு.க. தொண்டர்களின் பசியாற்றும் வகையில், புளிசாதம் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. 10 லட்சம் தொண்டர்களுக்கு வழங்கும் வகையில் உணவு தயார் செய்யப்படுகிறது.

    இதற்காக 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் தேவையான அளவுக்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவு பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் வழங்கப்பட உள்ளது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையலும் வழங்கப்படுகிறது.

    இதில், புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் 4 திசைகளில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் வாகனங்கள் மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட், தோப்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை, காரியாபட்டி வழியாக வலையங்குளம் மாநாடு நடக்கும் இடத்துக்கு எளிதாக வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    • சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.

    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்காக இந்த மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் தொண்டர்களை பங்கேற்க செய்வது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

    அதன்படி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இன்று காலை மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்திற்கு காலை 9.10 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் மதுரைக்கு வந்தது.

    ரெயிலில் வந்திறங்கியவர்களை மாநாட்டு பந்தலுக்கு அழைத்து செல்வதற்காக தயார் நிலையில் 40-க்கும் மேற்பட்ட வேன்கள் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏறி அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்டச் செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதே போல மாநாடு முடிந்து நாளை இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை எழும்பூர் சென்று சேருகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தவர்களும் மதுரைக்கு பல்வேறு ரெயில்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் மதுரையில் திரும்பிய திசையெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் மயமாகவே காட்சி அளிக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி வழக்கு.
    • அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

    அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி அன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக, அதிமுகவினர்

    இந்நிலையில், காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேச தேவர் என்பவர் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிபதி நாகார்ஜூனா முன் வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

    மேலும், 19ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி " 20ம் தேதிதான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மனுதாரர் காவல் துறையை அணுகி உரிய அனுமதி பெற்று 19ம் தேதி போராட்டம் நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.

    • சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிறு) அ.தி.மு.க. வீரவரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் செல்கிறார்கள்.

    வெளியூர்களில் இருந்து செல்பர்கள் நாளை மதுரை செல்லும்படி பயணத் திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

    இதனால் அங்குள்ள லாட்ஜுகளில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார் கள். சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. இந்த லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதே போல் திருமண மண்டபங்களையும் முன் பதிவு செய்துள்ளார்கள். 21-ந்தேதி ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் திருமண வீட்டாரும் மண்டபங்களை முன்பதிவு செய்துள்ளார்கள். எனவே கட்சியினரை ஞாயிறு மாலையில் காலி செய்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே பல திருமண மண்டபங்களை வாடகைக்கு விட்டுள்ளார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் கட்சி பிரமுகர்கள் பலர் விமானங்களில் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    வழக்கமாக மதுரைக்கு விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் 19-ந்தேதி குறைந்த பட்ச கட்டணம் ரூ.12 ஆயிரம் என்று நிர்ணயித்துள்ளார்கள். அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமான கட்டணம் ரூ.8,564, 10.30 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் ரூ.10,297, 11.15 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ரூ.11,906.

    இதே போல் மாலை 4.55 மணி முதல் 7.40 மணி வரை செல்லும் 6 விமானங்களில் குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.16,702 வரை டிக்கெட் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படுகிறது. சிறிய விமானங்களில் 71 சீட்டும், பெரிய விமானங்களில் 210 இருக்கைகளும் இருக்கின்றன. ஒரு விமானத்தில் கூட இருக்கை காலி இல்லை. அனைத்து விமானங்களும் 'புல்' ஆகிவிட்டன.

    மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, செங்கோட்டை செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

    இதே போல் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களிலும் இருக்கைகள் இல்லை.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் பலர் கார், வேன்களை வாடகைக்கு அமர்த்தியும் செல்கிறார்கள். வேன்களுக்கு மதுரை சென்று வர ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்.

    மதுரை:

    மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.

    இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி, 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? மாநாட்டில் எவ்வித வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதால்  மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு 20-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது.

    மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    1,200 பேர் இதில் பயணம் செய்கிறார்கள். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் நாளை (19-ந் தேதி) இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்ட செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதேபோல மாநாடு முடிந்து இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் எழும்பூர் வந்து சேருகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தெரிவித்தார்.

    மேலும் சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர்.

    தென் சென்னை, வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் 4 பஸ்கள், 30 வேன்கள், 98 கார்களில் பயணம் செய்கிறார்கள்.

    மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமையில் 8 பஸ்கள், 20 வேன்கள் மற்றும் ரெயில்களில் தொண்டர்கள் செல்கிறார்கள்.

    • இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
    • இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர் கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும்.

    இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.

    காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்ட ரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க பல லட்சங்கள் செலவும் செய்துள்ளனர்.

    • மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    • எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும்.

    இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க பல லட்சங்கள் செலவும் செய்துள்ளனர்.

    ×