என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
    • ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    புதுடெல்லி:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    மேலும் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே போன்று அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் அவர் மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
    • பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

    * பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    * பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    * தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.

    * எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    * பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.

    மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
    • அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

    கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில் அவருக்கு அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை கடந்தாண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
    • அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நல்லக்கண்ணு மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

    'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?
    • வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.

    நகராட்சி நிர்வாகத்துறையில் 2516 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் அளித்திருந்தது. அந்த அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக CBI-ஐ நாட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி. இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,

    * ஐகோர்ட் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக வழக்குப்பதியாதது ஏன்?

    * அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?

    * வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.

    * ஐகோர்ட் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை செய்யாததால் அ.தி.மு.க. CBI-ஐ நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?
    • தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சசிகலா பேசியதாவது:-

    என் மீதான வழக்கில் தீர்ப்பு வந்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை. அப்போது என் கவனம் எல்லாம் அரசை கலைக்க விட்டு விடக்கூடாது என்ற பொறுப்பு அதிகமாகிவிட்டது. ஒரு வாரம் அவகாசம் கேட்டும் கிடைக்கவில்லை. நாளைக்கு மாலை 6 மணிக்கு பெங்களூரு சிறைக்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

    உடனே எம்.எல்.ஏ.க்களை கூட்டி ஒருவரை முதலமைச்சராக (எடப்பாடி பழனிசாமி) தேர்ந்தெடுத்தோம். நான் அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை. அவர் உடனே என்ன சொன்னார்? நீங்களே எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கி கொடுங்க என்றார். அதையும் செய்தேன். பிறகு பெங்களூரு சென்றேன்.

    சில மாதங்கள் சென்றது. நீங்கள் ஏன் பெங்களூருவில் இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் கேட்டனர். தமிழகத்துக்கு மாற்றிடலாம் என்றனர். அதை மறுத்து நான் பேசியது ஏதோ தெய்வாதீனமாக எனக்கு தோன்றியது போல இருக்கிறது. இல்லை என்றால் நான் இன்றைக்கு பேசிக்கொண்டு இருப்பேனா என்பதே கஷ்டம். அதுக்கு அப்புறம் திடீர்னு ஒரு பொதுக்குழு, என்னை நீக்கினார்கள்.

    நான் ஒருவரை முதலமைச்சராக உட்கார வைத்து விட்டு சென்றேன். ஆனால் என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் வீசினால் எப்படி இருக்கும்?

    தினமும் எனக்கு பிரச்சனை. இதற்கிடையே எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது பரோலில் 15 நாட்கள் விடுப்பு கேட்டேன். 5 நாட்கள் மட்டும் கொடுங்கள் என இங்கே முதலமைச்சர் கூறினார். போயஸ் கார்டன் வீட்டில் தங்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை எனக்கு விதித்தனர். எனது கணவர் மறைந்த தகவல் வந்தது. அதற்கும் கேட்ட பரோல் கிடைக்கவில்லை.

    ஆட்சியில் உட்கார வைத்த என்னை, ஈட்டி வைத்து குத்தியது போல செய்தனர். இதை எல்லாம் மீறி, நான் விடுதலை ஆகி சென்னைக்கு வந்தேன். காரில் கட்சி கொடி கட்டக்கூடாது. ஜெயலலிதா சமாதிக்கு போகக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர். தமிழக எல்லைக்கு வந்தவுடன் என்னை கைது செய்ய காத்திருந்தனர்.

    இன்று கட்சி சரிந்து போய்விட்டது. எப்படியாவது ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்து இருந்தால் அப்பவே எதையும் செய்திருக்க முடியும்.

    தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை உள்ளது. நம்மை கைவிடமாட்டார்கள். அதனால்தான் இந்த மண்ணில் இந்த முடிவை எடுப்பதற்காக வந்தேன். என் மனதில் உள்ளதை எல்லாம் உங்களிடம் சொல்லி விட்டேன். இனி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். புதிய களத்தை காணப்போகிறோம் என்றார்.

    • ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தான் முதலமைச்சர் ஆக முன்வந்தது குறித்து சசிகலா பேசினார்.

    சசிகலா பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டம்.

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அவர் மீது குறைகூற ஒன்றும் இல்லை. அவர் ஒழுங்காகத்தான் செயல்பட்டார். சில நாட்களில் ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து என்னிடம், அவர் சரியில்லை என்றார்கள். அதற்கு நான். நன்றாகதானே செயல்படுகிறார் என்று கூறினேன்.

    நீங்கள் இப்போதே பொதுச்செயலாளராக வேண்டும் எனவும். முதலமைச்சர் ஆக வேண்டும் எனவும் என்னிடம் கூறினார்கள். காலையிலும், மாலையிலும் நடந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி, என்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

    ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அனைவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.

    அவர் நல்ல அதிகாரி இல்லை என்றும், ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டவர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    உடனே நான், ஜெயலலிதா சரியில்லை என ஒதுக்கியவரை எப்படி நியமிக்க முடியும்? இது எல்லாம் முதலமைச்சர் மீது ஒரு குறையா? என்று சொன்னேன். இதை இப்படியேவிட்டால் பிரச்சனை பெரிதாக ஆகும் என எண்ணி நான் முதலமைச்சர் ஆக முடிவுக்கு வந்தேன். அதற்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் என அமர்ந்துவிட்டார். அதை யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்றார். 

    • நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
    • நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை.

    ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-

    1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ வாகனத்தில் எம்.ஜி.ஆர். உடல் வந்த பிறகு மலர் வளையம் வையுங்கள் எனக்கூறினர். அதன்படிதான் ஜெயலலிதா மலர் வளையம் வைத்தார்.

    அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு துணையாக இருந்த சிலர் ஜெயலலிதாவை கீழே தள்ளினர். அப்போது நான் தான், ஜெயலலிதாவை தாங்கி பிடித்தேன்.

    அப்போதுதான், நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.

    'அரசியல் எனக்கு வேண்டாம். அனைவரும் என்னை கேவலப்படுத்துகின்றனர்' என்று ஜெயலலிதாகூறினார்.

    உடனே, "உங்களை சீண்டியவர்களை சும்மா விடக்கூடாது. ஒரு முறையாவது ஜெயிக்க வேண்டும்" எனக்கூறி அரசியலில் தொடர வைத்தேன். அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றினார்.

    2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறி வந்தது. வீட்டிற்கு அழைத்து வர நல்ல நாள் பார்த்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மறைவு குறித்து பலரும் பலவிதமாக பேசினார்கள்.

    'நான் தான் கொன்றேன்' என பலரும் கூறினர். ஜெயலலிதா மறைந்த பிறகு அன்றைய தினம் இரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் என்னிடம் வந்து, நீங்கள்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறினர். இந்த நிகழ்வு அனைத்தும் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் வைத்துதான் நடந்தது.

    அப்போது, நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. சகோதரியாகத்தான் பழகினேன். எனக்கு அந்த பதவி தேவையில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக இருக்கட்டும் என கூறினேன்.

    மற்ற அமைச்சர்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும் என்றேன். இடையில் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையனை நீக்கியிருந்தார்கள். அவரை மட்டும் சேர்க்க வேண்டும் என சொன்னேன். அதன்படி இரவோடு இரவாக அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள் என்றார். 

    • இந்த அறிவிப்பு களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
    • திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்

    2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.24) வெளியிட்டார்.

    அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது "உதவித்தொகை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில் இந்த பெரும்தொகை அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன்,

    'இது ஒரு தேர்தல் வித்தை. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று அவர்கள் (அதிமுக) நம்புகிறார்கள், அதனால்தான் இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருக்கிறார்கள். திமுக ஏற்கனவே மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்து, அவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இப்போது அதிமுகவும் தங்கள் வெற்றிக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார். 

    • நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.
    • கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் போட்டியிட 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் பட்டியலில் அடங்கும். பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.  

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.  ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

    • திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது.
    • வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார்.

    சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 

    "வில்லிவாக்கத்தில் மருத்துவமனை, கல்லூரி, அரசுப்பள்ளி இல்லை. மழைநாட்களில் சாக்கடைநீர் வருகிறது. 5 வருடமாக எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. நாளை அவர் காணவில்லை என போஸ்டர் ஒட்டுவார்கள்போல. வில்லிவாக்கத்தில் தி.மு.க. என்ற கட்சியும் இல்லை. திமுகதான் இல்லை, அதிமுக எங்கு எனக்கேட்டேன். அது பேக்கேஜ் செய்யப்பட்டு டெல்லிக்கு சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது எனக்கூறுகிறார்கள்.

    இங்கு திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது. இந்தத் தொகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தலுக்காக நம் தலைவர் கட்சியை உருவாக்கவில்லை. 20 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த மாற்றமும் வரவில்லை. வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார். அந்த தொகுதியை மாற்றுவார். ஏழைக்கு ஒரு மருத்துவமனை, முதலமைச்சருக்கு ஒரு மருத்துவமனை என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மருத்துவமனை என்ற நிலையை உருவாக்குவார். இதற்காகத்தான் கட்சித் தொடங்கியுள்ளார்.

    இன்று ரெட் ஜெயண்ட் ரஜினி, கமலை வைத்து ஒரு படம் எடுத்துள்ளது. எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? எல்லாம் கொள்ளைப்பணம். நீங்கள் அரசை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். எங்கள் தலைவர் தொழிலைவிட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இதுதான் வித்தியாசம்.

    இன்று புரட்சித்தலைவி பிறந்தநாள். அவர் லேடியா? மோடியா? என்று பாஜகவை எதிர்த்து நின்றார். அந்தக் கொள்கையை கடைசிவரை பிடித்து ஜெயித்தார். எல்லோரும் ஏன் நம் தலைவர் அதிமுகவை திட்டவில்லை எனக் கேட்கிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவும் தவெக வந்து வெகுநாட்கள் ஆகிறது.

    அங்கு இருப்பது 10 பேர்தான். அவர்களும் டெல்லி சென்றுவிட்டார்கள். உண்மையான அ.தி.மு.க. இங்கு உள்ளது. செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், வி.எஸ்.பாபு, தனபால் மகன் ஆகியோர் இங்கு உள்ளனர். திமுகவின் தீயசக்தியை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான தலைவர், நம் தலைவர் என அதிமுக உணர்ந்ததனால்தான் இங்கு மாறியுள்ளனர். அப்போது புரட்சித்தலைவி அம்மாவையும், அவர் தொண்டர்களையும் நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும்?" எனப் பேசினார்.

    • தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
    • அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    கேள்வி:- ஏற்கனவே தமிழக அரசின் நிதி சுமை அதிகமாகி உள்ள நிலையில் ரூ.10 ஆயிரம் கருணை தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்களே? நிதி சுமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

    பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் அமைந்ததும் வருவாயை பெருக்கி நாங்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்வோம். கொரோனா காலத்திலேயே பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திட்டங்களை செயல்படுத்தி வரி, வருவாயை பெருக்கினோம்.

    எனவே நாங்கள் அளித்த வாக்குறுதிபடி நிச்சயம் தி.மு.க. ஆட்சி போன்று இல்லாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

    கேள்வி:- இலவச அறிவிப்புகளை கண்டிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளதே?

    பதில்:- தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை கை தூக்கி விடும் நிலையில்தான் இந்த கருணை தொகையை அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் ஒருமுறை ரூ.10 ஆயிரம் கருணை தொகையை வழங்குவோம்.

    மக்கள் மீதான கருணையின் அடிப்படையில்தான் இதனை அறிவித்து இருக்கிறோம்.

    கேள்வி:- வருவாயை பெருக்குவதற்காக வரிகள் உயர்த்தப்படுமா?

    பதில்:- அதையெல்லாம் இப்போதே எப்படி சொல்ல முடியும். வருமானத்தை பெருக்கி மக்களுக்கு தேவையானதை செய்வோம்.

    கேள்வி:- வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவி தொகையை கொடுப்பதை விட வேலைவாய்ப்பை அதிகரிக்கலாமே?

    பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சியின்போது தொழில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்.

    அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம். அப்போது மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு தான் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வேகமாக நடந்து வருகிறது. நீங்கள் எப்போது அதனை தொடங்கப் போகிறீர்கள்?

    பதில்:- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது யார்-யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றிய விவரங்களையும் வெளியிடுவோம்.

    கேள்வி:- தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை தாங்கும் நிலையில் டி.டி.வி.தினகரன் பா.ஜ.க. கட்சியுடன்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறி இருக்கிறாரே?

    பதில்:- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×