search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் தேர்தல்"

    அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையீடு தொடர்பாக நடந்து வரும் விசாரணையை 2 நாட்களுக்கு முன்னர் கடுமையாக விமர்சித்த டிரம்ப், தற்போது புலனாய்வு அமைப்புகளின் முடிவுவை ஏற்றுக்கொள்வதாக பல்டி அடித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த திங்கள் அன்று பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் சந்தித்து பேசினர். 

    பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக  டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.

    அமெரிக்காவின் இத்தனை ஆண்டுகால முட்டாள்தனமும் ரஷியா உடனான பகைக்கு காரணம் என டிரம்ப் ட்வீட்டியிருந்தார். மேலும், புதின் உடன் செய்தியாளர்களை சந்திக்கும் போது, ராபர்ட் முல்லர் விசாரணை பேரிடராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    சொந்த நாட்டின் மீதே டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்ப் கட்சியை சேர்ந்தவர்களே அவரை விமர்சிக்க தொடங்கினர். எதிர்ப்பலைகள் உருவானதை அடுத்து, அவற்றை எதிர்கொள்ளும் விதமாக டிரம்ப் தனது முந்தைய கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார்.

    ‘2016 தேர்தலில் ரஷியா தலையீடு என்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ரஷியா ஏன் தலையீட்டுக்கான காரணத்தை நான் பார்க்கவில்லை என கூற விரும்பினேன். ஆனால், மாற்றி பேசிவிட்டேன். அமெரிக்க புலனாய்வு அமைப்பின் விசாரணை மீது முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பையும் அளிப்பேன்’ என டிரம்ப் தற்போது விளக்கமளித்துள்ளார்.
    அமெரிக்காவில் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் முட்டாள்தனமே ரஷியா உடனான உறவு சீர்குலைந்ததற்கு காரணம் என டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். #TrumpPutinSummit #HelsinkiSummit
    ஹெல்சின்கி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நடந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. 

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக  டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.



     ‘ரஷியா உடனான நமது உறவு மிகவும் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பல ஆண்டுகால அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு நன்றி. தற்போதைய தேடலுக்கும் (ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணை)  நன்றி’ என அவர் ட்வீட் செய்துள்ளார். 

    ரஷிய வெளியுறவு அமைச்சகம் டிரம்ப்பின் ட்விட்டை லைக் செய்ததோடு, ரீ-ட்வீட் செய்துள்ளது. எனினும், சொந்த நாட்டின் மீது டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதற்கு பலர் எதிர்ப்பு கருத்தும் பதிவிட்டு வருகின்றனர். 
    2020-ம் ஆண்டில் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர் என கூறிய டிரம்ப், ஜனநாயக கட்சியிலிருந்து தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என கூறியுள்ளார். #TrumpInUk
    லண்டன்:

    அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப்.  இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன். 

    அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல் தெரிகிறது. ஜனநாயக கட்சியில் தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என அவர் கூறியுள்ளார்

    பொதுவாக இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பேசும் விவரங்களை பற்றி தலைவர்கள் வெளியிடுவது வழக்கமில்லை. ஆனால், டிரம்பிடம் பேட்டி கண்ட பியெர்ஸ் மோர்கன் பிரெக்சிட் பற்றி ராணியிடம் ஆலோசனை மேற்கொண்டீர்களா? என எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

    அவர், ஆம் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் கூறினார்.  அவர் கூறியது சரி.  அது எவ்வளவு சிக்கலான விசயம் ஆக போகிறது என்பது பற்றி யாரிடமும் எந்த கருத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.
    மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். #MexicoElections #LopezObrador
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகின.

    அதேபோல, வாக்கு எண்ணிக்கையில் அந்த கட்சி பின் தங்கியது. ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.

    53 சதவிகித வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

    ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக ஆப்ரதோர் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரண்டு கட்சிகளை வீழ்த்தி அதிபர் நாற்காலியில் லோபஸ் ஆப்ரதோர் அமர்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் தொடங்கியுள்ளது. #MexicoElections
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் வெளியாகின.

    ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஆண்ட கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் ரிகார்டோ அனாயா போட்டியிடுகிறார்.

    லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றால், மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை வெளியேற்றியவர் என்ற பெயரை பெறுவார். இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவான பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. 

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    எகிப்தில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 97 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்ற அப்தேல் அல்சிசி இன்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். #AlSisi #Egypt
    கெய்ரோ:

    எகிப்து அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதிபராக இருந்த அப்தேல் ஃபாட்டா அல்சிசி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதனால், அல்சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    இதனால், 97 சதவிகித வாக்குகள் பெற்று அல்சிசி அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக அல்சிசி இன்று பதவியேற்றார். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அல்சிசி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 
    ×