என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young woman missing"
தேனி அருகே உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் எழுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் சுமிதா (வயது29). இவருக்கும் கூடலூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
எஸ்வந் என்ற மகனும் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமிதா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக சுமிதா கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெரு சின்னசந்து பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி(23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சுரேசுக்கும், அவரது மனைவி தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த சமயத்தில் கணவனுடன் கோபித்து கொண்டு சின்னசேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தேவி செல்வது வழக்கம். சில நாட்கள் கழித்து சமாதானமாகி தேவி மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இதுபோல் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது கணவனுடன் கோபித்துக்கொண்டு தேவி வீட்டை விட்டு வெளியே சென்றார். தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் எனகருதி அவரை சுரேஷ் தேடவில்லை. பின்னர், சிலநாட்கள் கழித்து மாமியார் வீட்டில் சுரேஷ் விசாரித்த போது அங்கு தேவி செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ் தனது மனைவி மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகிறார்.
தேனி:
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை மெயின்ரோட்டை சேர்ந்தவர் முச்சாண்டி. இவரது மனைவி சாந்தி(வயது35), மகன் ரித்திக்(11). முச்சாண்டி கொடைக்கானலில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று முச்சாண்டி விடுமுறையில் வீடு திரும்பியபோது மகன் மற்றும் மனைவி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சாந்தி மற்றும் ரித்திக்கை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்