search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman missing"

    தேனி அருகே 2 குழந்தைளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் எழுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் சுமிதா (வயது29). இவருக்கும் கூடலூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    எஸ்வந் என்ற மகனும் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமிதா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக சுமிதா கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கணவனுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெரு சின்னசந்து பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி(23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சுரேசுக்கும், அவரது மனைவி தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த சமயத்தில் கணவனுடன் கோபித்து கொண்டு சின்னசேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தேவி செல்வது வழக்கம். சில நாட்கள் கழித்து சமாதானமாகி தேவி மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இதுபோல் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது கணவனுடன் கோபித்துக்கொண்டு தேவி வீட்டை விட்டு வெளியே சென்றார். தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் எனகருதி அவரை சுரேஷ் தேடவில்லை. பின்னர், சிலநாட்கள் கழித்து மாமியார் வீட்டில் சுரேஷ் விசாரித்த போது அங்கு தேவி செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சுரேஷ் தனது மனைவி மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகிறார்.

    திருவட்டார் அருகே பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே தோப்புவிளை செங்கோடியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 22). இவருக்கும் நாகர்கோவில் பீச்ரோட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயலட்சுமி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    கடந்த 9-ந் தேதி ஜெயலட்சுமி, குழந்தைகள் இருவரையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஜெயலட்சுமியை பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் பதறிபோன ஜெயலட்சுமியின் தந்தை குமார், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெண் மாயம் என வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியை தேடி வருகிறார்.
    கே.வி.நல்லூர் அருகே மகனுடன் கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டகுமாரராஜா (வயது 42). இவரது மனைவி விநாயகலெட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு மகன் உள்ளான். மணிகண்டகுமாரராஜா கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகனுடன் கடைக்கு சென்ற விநாயகலெட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது பற்றி மணிகண்டகுமாரராஜா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேவதானப்பட்டி அருகே மகனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை மெயின்ரோட்டை சேர்ந்தவர் முச்சாண்டி. இவரது மனைவி சாந்தி(வயது35), மகன் ரித்திக்(11). முச்சாண்டி கொடைக்கானலில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று முச்சாண்டி விடுமுறையில் வீடு திரும்பியபோது மகன் மற்றும் மனைவி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சாந்தி மற்றும் ரித்திக்கை தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம் அருகே மொட்டை மாடியில் தூங்கிய இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவன் போலீசார் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    சங்கராபுரம் அடுத்த மேல்புதூரை சேர்ந்தவர் மணிமாறன்(26), இவருக்கும் திருவண்ணாமலை பள்ளி கொண்டாப்பட்டு ஆனந்தன் மகள் ஜான்சிராணி (வயது 22) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு, கணவன்- மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இருவீட்டாரும் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்ததால், இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினர்.

    நள்ளிரவு 1 மணியளவில் மணிமாறன் எழுந்து பார்த்தபோது, ஜான்சிராணியை காணவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து மணிமாறன் கொடுத்துள்ள புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×