search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbledon Tennis"

    • கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்)-அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாலை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சின் கார்சியா 3-6, 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் கனடாவின் பெர்னான்டசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து), வெக்கிச் (குரோஷியா), லினெட் (போலந்து) பொடா போலா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார். அதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் தியாபோ (பிரான்ஸ்), பெல்லா (அர்ஜென்டினா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), லாஸ்லோ டிஜெரே (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெனர்டென்சை தோற்கடித்தார்.
    • விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் போடோரோஸ்கோவை வீழ்த்தினார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் உக்ரைன் எலினா ஸ்விடோலினோ எலிஸ் மெர்டென்சுடன் மோதினார்.

    எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெனர்டென்சை தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனை சேர்ந்த ஜூலி நீமைர் 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டி வரை சென்றவரான கரோலினா முச்சோவை தோற்கடித்தார்.

    இதேபோல், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் போடோரோஸ்கோவை வீழ்த்தினார்.

    • ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாம்சனை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-5, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மேனை தோற்கடித்தார்.

    பெண்கள் பிரிவில் முதல் வரிசையில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலாந்து) 2-வது சுற்றில் சாரா டோராமாவை (ஸ்பெ யின்) எதிர் கொண்டார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • ஆண்கள் பிரிவில் முர்ரே (இங்கிலாந்து), 6-3, 6-0, 6-1 என்ற கணக்கில் பெனிஸ்டனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), கேமரூன் நோரி (இங்கிலாந்து) வெற்றி பெற்றனர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) முதல் சுற்று ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற கணக்கில் அங்கேரி வீரர்களை பனா உத்வர்டியை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் ஜபேர் (துனிசியா), ரைபகினா (கஜகஸ்தான்) வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் பிரிவில் முர்ரே (இங்கிலாந்து), 6-3, 6-0, 6-1 என்ற கணக்கில் பெனிஸ்டனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), கேமரூன் நோரி (இங்கிலாந்து) வெற்றி பெற்றனர்.

    • சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், சீனாவின் லின் ஜூவும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மழை குறுக்கிட்டடால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. அதன்பின் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.

    இறுதியில், இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் யு யுவானைச் சந்தித்தார்.

    இதில் அசரென்கா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
    • செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டினா வீரரை வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் லாரண்ட் லொகோலியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

    என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

    • நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் ஜோகோவிச் தோற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பி யனுமான ஜோகோவிச் (செர்பியா) அரை இறுதியில் 9-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 2-6, 6-3, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 8-வது முறையாக முன்னேறினார். ஒட்டு மொத்தமாக கிராண்ட் சிலாம் போட்டியில் 32-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன் மூலம் அவர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாதனையை முறியடித்தார்.

    ஜோகோவிச் நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நிக் கார்கியோசை (ஆஸ்திரேலியா) எதிர் கொள்கிறார். அவரை வீழ்த்தி 21-வது கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    நாளை வெற்றி பெற்றால் ஜோகோவிச் முன்னேறி பெடரரை பின்னுக்கு தள்ளி விடுவார்.

    ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் (2013) தோற்றுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
    • சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.

    இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.

    போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

    காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.

    ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15-வது வரிசையில் உள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற 3-வது சுற்று போட்டிகளில் 3-வது வரிசையில் இருக்கும் ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கார்லோஸ், அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    20-வது வரிசையில் உள்ள ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    ×