search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் ரைபகினா,பெகுலா 3-வது சுற்றுக்கு தகுதி
    X

    விம்பிள்டன் டென்னிஸ் ரைபகினா,பெகுலா 3-வது சுற்றுக்கு தகுதி

    • கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்)-அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாலை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சின் கார்சியா 3-6, 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் கனடாவின் பெர்னான்டசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து), வெக்கிச் (குரோஷியா), லினெட் (போலந்து) பொடா போலா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார். அதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் தியாபோ (பிரான்ஸ்), பெல்லா (அர்ஜென்டினா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), லாஸ்லோ டிஜெரே (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    Next Story
    ×