என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » wayanad constituency
நீங்கள் தேடியது "Wayanad Constituency"
- காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
- விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
கோழிக்கோடு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி ராகுல் காந்தி 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிர் 4 லட்சத்து 77 ஆயிரத்து 783 வாக்குகளை பெற்றார்.
பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.
பா.ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.
அவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் சுனிர் 71 ஆயிரம் வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தார்.
பா.ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
திருவனந்தபுரம்:
கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் உள்ள 20 எம்.பி. தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் எண்ணத்துடன் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இது கேரள காங்கிரசாரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுனிர், பா.ஜனதா கூட்டணி சார்பில் பாரத் தர்ம ஜனசேனா கட்சி தலைவர் துஷார் வெள்ளாப் பள்ளி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கேரளாவில் வயநாடு தொகுதியில் தான் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவதால் இங்கு ராகுல் வெற்றி பெறுவது எளிது என்று அந்த கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதே சமயம் வயநாடு தொகுதியில் ராகுலை தோற்கடித்து தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது.
இதற்காக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கேரள மாநிலத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி மக்களை திசை திருப்பி, அவர்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியதை பா.ஜனதா ஏன் நிறைவேற்றவில்லை? தற்போது மீண்டும் தாங்கள் செயல்படுத்த போகும் திட்டங்களை கூறி ஓட்டு கேட்கிறார்கள்.
சொன்னதை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியவில்லை. அதனால் பா.ஜனதா இதுபோன்ற கபட நாடகம் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வயநாடு தொகுதி மட்டுமல்ல கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதியிலும் கம்யூனிஸ்டு கூட்டணி தான் வெற்றி பெறும். மக்கள் கம்யூனிஸ்டு கட்சி பக்கம் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் உள்ள 20 எம்.பி. தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் எண்ணத்துடன் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இது கேரள காங்கிரசாரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுனிர், பா.ஜனதா கூட்டணி சார்பில் பாரத் தர்ம ஜனசேனா கட்சி தலைவர் துஷார் வெள்ளாப் பள்ளி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கேரளாவில் வயநாடு தொகுதியில் தான் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவதால் இங்கு ராகுல் வெற்றி பெறுவது எளிது என்று அந்த கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதே சமயம் வயநாடு தொகுதியில் ராகுலை தோற்கடித்து தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது.
இதற்காக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கேரள மாநிலத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி மக்களை திசை திருப்பி, அவர்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியதை பா.ஜனதா ஏன் நிறைவேற்றவில்லை? தற்போது மீண்டும் தாங்கள் செயல்படுத்த போகும் திட்டங்களை கூறி ஓட்டு கேட்கிறார்கள்.
சொன்னதை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியவில்லை. அதனால் பா.ஜனதா இதுபோன்ற கபட நாடகம் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வயநாடு தொகுதி மட்டுமல்ல கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதியிலும் கம்யூனிஸ்டு கூட்டணி தான் வெற்றி பெறும். மக்கள் கம்யூனிஸ்டு கட்சி பக்கம் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. #LokSabhaElections2019 #PMModi #EC #RahulGandhi #Congress
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக ராகுல் வயநாடுக்கு ஓடி இருப்பதாக கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இது தொடர்பாக வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார்” என்றார்.
பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாதி, மதத்தை குறிப்பிட்டு யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்பது முக்கிய விதிகளில் ஒன்றாகும். இந்த நடத்தை விதியை பிரதமர் மோடி திட்டமிட்டு மீறி பிரசாரம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடி 1-ந்தேதி வார்தா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது” என்றும் பேசி இருந்தார்.
மோடியின் இந்த பேச்சையும் குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடிக்கும், மராட்டிய மாநில தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிகிறது. #LokSabhaElections2019 #PMModi #EC #RahulGandhi #Congress
காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக ராகுல் வயநாடுக்கு ஓடி இருப்பதாக கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இது தொடர்பாக வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார்” என்றார்.
பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வியும் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடி 1-ந்தேதி வார்தா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது” என்றும் பேசி இருந்தார்.
மோடியின் இந்த பேச்சையும் குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடிக்கும், மராட்டிய மாநில தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிகிறது. #LokSabhaElections2019 #PMModi #EC #RahulGandhi #Congress
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X