search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vignesh Shivan"

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இவர்கள் சமீபத்தில் தங்களது இரட்டை குழந்தைகளுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அவர்களது உறவினர்கள் திருச்சி, லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். அதாவது, லால்குடியில் உள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வரும் குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா ஆகியோர் புகார் மனு கொடுக்க வந்துள்ளனர்.


    அப்போது குஞ்சிதபாதம் கூறியதாவது, தனக்கு உடல்நிலை சரியில்லை. இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சை பெற வேண்டும். இது குறித்து லால்குடியில் வசித்து வரும் தனது அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். தங்களது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் சொத்தை விற்று கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    • தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
    • இவர் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படம் சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க அனிருத் இசையில் உருவாகும் எனவும் தன்னுடைய காதலுக்காக மொபைல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் இளைஞனை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியானால் இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ’மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    'மாமன்னன்' படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்த நடிகர் வடிவேலுவை படக்குழுவினர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் 'மாமன்னன்' படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.


    முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

    உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.





    • விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி நேற்று தங்களது திருமணநாளை கொண்டாடினர்.
    • இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    விக்னேஷ் சிவன்- நயன்தாரா குழந்தைகள்

    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    கண்கலங்கிய நயன்தாரா

    இதையடுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை வீட்டில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் இருந்து 'ஒரு கணம் ஒரு போதும்' பாடலை புல்லாங்குழலில் வாசித்தார். இதை கண்டு சர்ப்ரைஸான நயன்தாரா ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழ தொடங்கி விட்டார். இது தொடர்பான வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    உயிர் மற்றும் உலக்

    நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் தற்போதைய புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குளை குவித்து வருகின்றனர்.


    • ஐ.பி.எல் இறுதிப்போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் சென்றிருந்தனர்.
    • கனமழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் குஜராத் - சென்னை அணிகள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.


    நரேந்திரமோடி மைதானம்

    ஐபிஎல் இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டியை காண வந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதில் ரசிகர்கள் பலர் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    நரேந்திரமோடி மைதானத்தில் விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியை இயக்குனர் விக்னேஷ் சிவன் காணவுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இன்று முழு போட்டி நடக்க பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். போட்டியின் போது மழை பெய்து, அது நின்றவுடன் ஓவர்கள் குறைவாக வைத்து விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

    நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சை மாவட்டம் மேல வழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவில், இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினரின் குலதெய்வம் கோவில் ஆகும். குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்தனர்.

    அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். நயன்தாரா வருவதை அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் அவருக்கு அணிவிப்பதற்காக பொன்னாடை வாங்கி வைத்து காத்து இருந்தனர். கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

    மேலும் குலதெய்வம் கோவில் சிறியதாக இருந்ததால் கோவிலுக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் போலீசார் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். நயன்தாரா கோவிலில் சாமி கும்பிட்ட போது வெளியில் நின்ற புகைப்பட கலைஞர்கள் உள்ளே வந்து அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார்கள். அப்போது நயன்தாரா கோபம் அடைந் தார். இதைப் பார்த்த விக்னேஷ் சிவன் புகைப்பட கலைஞர்களிடம் சற்று வெளியே காத்திருக்குமாறு கூறினார். நயன்தாராவும் புகைப்பட கலைஞர்களிடம், "சாமி கும்பிடத்தான் கோவிலுக்கு வந்திருக்கிறோம்" என்று கூறினார்.

    இதையடுத்து புகைப்பட கலைஞர்கள் வெளியே காத்திருந்தனர். இதற்கிடையே அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அதே பகுதியில் உள்ள ஐராதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். ஏற்கனவே கிராம மக்கள் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கோவிலுக்குள் சென்றதும் கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது.

    நயன்தாராவை காண கோவிலுக்கு வெளியே கிராம மக்கள், ரசிகர்கள், கல்லூரி மாணவிகள் காத்திருந்தனர். கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த நயன்தாரா கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பார்த்து சிரித்தபடி கையசைத்தார். அப்போது கிராம மக்கள், மாணவிகள், ரசிகர்கள் அனைவரும் நயன்தாராவை தங்களின் செல்போனில் படம் பிடித்தனர்.

    பின்னர் நயன்தாராவுடன் கல்லூரி மாணவிகள் ஒன்றாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ஒரு மாணவி, நயன்தாராவின் தோளில் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். அவரை நயன்தாரா சத்தம் போட்டார். பின்னர் நயன்தாரா காரில் ஏறி புறப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த மக்கள் நயன்தாராவிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். 'உங்களது படங்கள் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பார்த்து விடுவோம்' என்று நயன்தாராவிடம் கூறினார்கள். அதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவரை சிரித்தபடியே வழியனுப்பி வைத்தனர். அதன்பிறகு நயன்தாரா அங்கிருந்து திருச்சி ரெயில் நிலையம் வந்தார். நயன்தாரா வருவதை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் திரண்டனர். நயன்தாரா ரெயிலில் ஏற வந்தபோது ரசிகர்கள் அவரை நோக்கி முண்டியடித்தனர். அனைவரும் செல்போனில் அவரை படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுக்கவும் முயன்றனர்.

    இதனால் நயன்தாரா கோபத்துடன் காணப்பட்டார். ஒரு வழியாக நயன்தாரா கூட்டத்தை மீறி ரெயிலுக்குள் ஏறினார். அங்கும் ஒரு ரசிகர் தனது செல்போனில் நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார். இதனால் அவரை முறைத்து பார்த்த நயன்தாரா தன்னை படம் பிடிக்க கூடாது என்றார். ஆனாலும் அவர் தொடர்ந்து நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, அவரிடம் செல்பி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று எச்சரித்தார். அதன்பிறகு அந்த ரசிகர் அங்கிருந்து சென்றார். பின்னர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரெயிலில் சென்னை திரும்பினார்கள்.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் இன்று காலை ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலில் வழிபாடு செய்தனர்.
    • தற்போது ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலில் வழிபாடு செய்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோயிலில் இருவரும் வழிபட்டனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன் 

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் 

    இந்நிலையில் குலதெய்வம் கோயிலை தொடர்ந்து, கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு சென்ற இவருடனும் கல்லூரி மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
    • நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.


    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா வழிபட்டனர் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
    • இவர்களின் திருமணத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகை நயன்தாரா 7 வருடங்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். முகூர்த்தம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு திருப்பதி மாட வீதிகளில் கணவருடன் போட்டோ ஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் காலணியுடன் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானம் நயன்தாரா செயலை கண்டித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரித்தது. நடந்த சம்பவத்துக்கு விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் கேரளா சென்றுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா மீது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது. மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடற்கரை பொது இடம். அங்கு நயன்தாரா திருமணம் நடந்த நாளில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களது திருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர். 

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா
    விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட பலரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பொங்கல் வைத்து பயபக்தியுடன் இருவரும் சாமி கும்பிட்டனர். நயன்தாரா வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர். நயன்தாரா சாமி கும்பிட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அய்யம்பேட்டை போலீசார் செய்திருந்தனர்.
    இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் லால்குடி அருகே குலதெய்வ கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
    இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
     ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்
    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட பலரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் லால்குடி அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினர். 
    ×