search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vignesh Shivan"

    • இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூழாங்கல்'.
    • இப்படத்தை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரித்துள்ளது.

    அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூழாங்கல்'. நயன்தாரா- விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குனரும், தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன் பேசியதாவது, 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் 'கூழாங்கல்'தான். இயக்குனர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது.


    இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குனர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. இப்படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம் என்று பேசினார்.

    இயக்குனர் வினோத்ராஜ் பேசியதாவது, 'கூழாங்கல்' படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு 'கூழாங்கல்'லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று பேசினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

    இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைந்துள்ளார். அதாவது டோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அஜித் படம் போனால் என்ன டோனியை இயக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு சென்றனர்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக வலம் வருகிறார். கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒவ்வொரு படத்திற்கும் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் வேறு சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார்.


    சமீபத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களது முகங்களையும் வெளியுலகுக்கு காண்பித்தனர். இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு சென்றனர்.


    இந்த நிலையில் நயன்தாராவுடன் விக்னேஷ்சிவன் மலேசியாவில் இரவு நேரத்தில் உலா வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து 'அவளோடு இருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' திரைப்படம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து 'லோகேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் தான் லோகேஷ் தன் சமூக வலைதளத்தின் பயோவில் இருந்து 'லியோ' படத்தின் பெயரை நீக்கிவிட்டதாகவும் வதந்தி பரவி வந்தது.


    இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர், 'விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்சினை நடந்தது உண்மைதான். எங்களுக்கு எல்லாம் தெரியும்' என பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் போட்டு பின்னர் நீக்கி விட்டார். இதை அந்த நெட்டிசன் ஸ்கீரின் ஷாட் எடுத்து 'லியோ படத்தில் லோகேஷ் மற்றும் விஜய் அவர்கள் இருவருக்கும் நடந்த கசப்பான சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டிய என்னுடைய விளக்கப் பதிவை உண்மை அறிந்த விக்னேஷ் சிவன் அவர்கள் முதலில் லைக் செய்து பின்னர் நீக்கிய காரணம் என்னவோ...' என்று பதிவிட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே குழப்பத்திற்கு மன்னிக்கவும். மெசேஜையும், அதில் உள்ள தகவலையும் பார்க்காமல் லைக் செய்து விட்டேன். லோகேஷ் கனகராஜின் வீடியோக்களை லைக் செய்யும் பாணியில் லைக் செய்தேன்.


    நான் லோகேஷின் மிகப்பெரும் ரசிகன். விஜய் சாரின் பிரமாண்ட ரிலீசான லியோவை எதிர்பார்த்துள்ளேன். நயன்தாராவின் வீடியோக்களுக்கு லைக் போடுவதைப் போன்று லோகேஷ் கனகராஜின் வீடியோவை பார்த்து மெசேஜை பார்க்காமல் லைக் செய்து விட்டேன். தவறு என்னால் ஏற்பட்டது. எனவே உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களைப் போன்று அக்டோபர் 19 ஆம் தேதி 'லியோ' ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • நயன்-விக்கி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.

    திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், நயன் -விக்கி தம்பதி தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் முதல் பிறந்தநாளை நெருங்கிய உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளின் பழைய (Throwback) புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • நடிகை நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.
    • இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜவான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா, ஷாருக்கான் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.


    இவ்வளவு நாட்கள் சமூக வலைதளத்தில் நாட்டம் கொள்ளாத நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். இதையடுத்து தன் குழந்தைகளுடன் கொண்டாடும் பண்டிகைகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.


    இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்கள் உயிர் மற்றும் உலக்கிற்கு பட்டு வேட்டி அணிவித்து குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.


    நயன்தாரா பதிவு

    இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர்.

    உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


     இந்நிலையில், இன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் 'ரத்தமாரே' பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    இந்நிலையில், 'ரத்தமாரே' பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. தன் நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    இந்நிலையில், நடிகை நயன்தாரா தங்கள் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு "என் உயிர்கள்... என் அன்பானவர்களுடன் ஞாயிறு சிறப்பாக போனது. எளிமையான தருணங்கள்" என மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.


    விக்னேஷ் சிவன் பதிவு

    இந்நிலையில், நடிகர் விக்னேஷ் சிவன் கிரிகெட் வீரர் டோனியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டோனி, விக்னேஷ் சிவன் டீ- சர்ட்டில் கையொப்பமிடுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், டோனியின் கைகளை பிடித்து முத்தமிடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×