search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கண்ணான கண்ணே நீ கலங்காதடி.. நயன்தாராவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்
    X

    விக்னேஷ் சிவன்- நயன்தாரா

    கண்ணான கண்ணே நீ கலங்காதடி.. நயன்தாராவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்

    • விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி நேற்று தங்களது திருமணநாளை கொண்டாடினர்.
    • இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    விக்னேஷ் சிவன்- நயன்தாரா குழந்தைகள்

    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    கண்கலங்கிய நயன்தாரா

    இதையடுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை வீட்டில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் இருந்து 'ஒரு கணம் ஒரு போதும்' பாடலை புல்லாங்குழலில் வாசித்தார். இதை கண்டு சர்ப்ரைஸான நயன்தாரா ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழ தொடங்கி விட்டார். இது தொடர்பான வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    Next Story
    ×