என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Venkaiah naidu"
- இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம்.
- இந்திய கலாச்சாரத்தை எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வது அவருக்கு செலுத்தும் அஞ்சலி
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
எஸ் பி பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார். அவர் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு எப்போதும் உந்துசக்தியாக இருப்பார்.
இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும் வழிகாட்டுவதும்தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதற்கும் அப்பால் அவர் இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, நடிகராகத் திகழ்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும், அன்பாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர்.
எஸ் பி.பி.மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் எளிமையையும் கொண்டவர். அவரது குணங்களால் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் இவரின் தந்தை சாம்பமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியாவை மென்மையான சக்தியாக முன்னிறுத்தியதில் இந்திய கலாச்சாரத்திற்கும், இசைக்கும், திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு. இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், எஸ்பிபி சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி.சரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கத்தாா் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்று உள்ளாா்.
- இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்துப் பேசினார்.
தோகா:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கான தமது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமரும் உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்து பேசிய வெங்கையா நாயுடு, கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது. அது வளமடைந்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும், இந்தியா-கத்தார் வணிக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்கு வாழும் இந்திய தொழிலதிபா்களைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தோகாவில் உள்ள கத்தாா் தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று பாா்வையிட்டாா்.
- கத்தாருக்கு பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு, அந்நாட்டு பிரதமரை சந்தித்தார்.
- இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்கிறது.
தோஹா:
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் சென்றுள்ளார். நேற்று கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் அப்துல்அஜிஸ் அல் தானியுடன் வெங்கையா நாயுடு பேச்சு நடத்தினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கத்தாரின் முதலீடு மார்ச் 2020ல் இருந்து ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டினார். கத்தாரில் சுகாதாரத் துறையில் இந்திய சுகாதார வல்லுநர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை வழங்குகிறது என்றும், பாரம்பரிய மருத்துவத் துறையில் கத்தாருடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியாவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்ட அவர், எரிசக்தி பாதுகாப்பில் கத்தாரின் பங்கை இந்தியா ஆழமாக மதிக்கிறது என்றார்.
இதை தொடர்ந்து தோஹாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது, மேலும் அது வளமடைந்து வருகிறது என்றார்
ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாக கருதப்படும் 24-வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாட்டை குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.
கர்நாடகா அரசின் மின்னணுவியல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சி.என். அஷ்வத் நாராயண், தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், நாட்டின் டிஜட்டல் மற்றும் தொழில்நுட்பம் மாற்றத்திற்கு தனியார் துறை பங்களிப்பும் அவசியம் என்று வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நம் நாடு முன்னேறி செல்கிறது. ஆதார் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். வரும் நாட்களில் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதுமைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். கொள்கைகள் மற்றும் திட்டங்களை நாடாளுமன்றம் முடிவு செய்தாலும், முடிவில் மக்களிடையே திட்டம் எந்தளவுக்கு சென்றடைகிறது என்பது தான் முக்கியம்.
அனைத்து பிரிவினரின் வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் மகிழ்ச்சியைத் தரும் யோசனைகளை கொண்டு வாருங்கள்.
அரசாங்கம் தலைமையிலான முயற்சிகள் முக்கியமானவை. தனியார் துறையின் பங்கேற்பையும் நான் வலியுறுத்துகிறேன். மேலும், வேலைகளை உருவாக்குவது, புதுமையான பயன்பாடுகளை உருவாக்குவது, நாட்டில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன்.
நிலையான அரசு அமைவதற்காக தெளிவான தீர்ப்பை வழங்கிய மக்களை வாழ்த்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் செழுமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையை மேலும் ஆழமாக்கி வளர்ச்சி, சீர்திருத்தம் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆகியவை சார்பில் சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் (பயோலாஜிக்கல் டைவர்சிட்டி) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் ஏ.கே.ஜெயின் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தேசிய பல்லுயிர் பெருக்க செயல் திட்டம், நிதி திட்டம் மற்றும் விருதுகள் பெறுவதற்கான தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.
இதையடுத்து வெங்கையா நாயுடு பேசியதாவது:-
சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய கவலை ஏற்படுவது நம் நாட்டுக்கு புதிதல்ல. 2,200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை ஆண்ட பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே, விளையாட்டுக்காக வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை எரிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. முதன் முறையாக அரச பிரகடனத்தின் மூலம், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் போன்றவற்றுக்காக பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள் முறைப்படி உருவாக்கப்பட்டன.
அசோக பேரரசின் ஸ்தூபிதான் தற்போது இந்தியாவின் தேசிய சின்னமாக திகழ்கிறது. அதில் இடம் பெற்றுள்ள நான்கு சிங்க முகங்கள், அதிகாரம், துணிச்சல், கவுரவம் மற்றும் நம்பிக்கை ஆகிய நான்கு அம்சங்களை பிரதிபலிக்கின்றன. அத்துடன் இந்த சின்னத்தில் இடம் பெற்றுள்ள முழுமையாக மலர்ந்த தாமரை, வாழ்வியல் மற்றும் ஊக்க சிந்தனையின் ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கிறது.
அனைத்து மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமை மற்றும் இயற்கையை பற்றி போதிக்கின்றன. தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதால் மரங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.
2001 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளில் இருந்து இல்லாமல் போய் விட்டது.
இதனால் கோடிக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய உணவு வினியோக முறை 80 சதவீதம் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்தே இருக்கிறது.
உள்நாட்டு விலங்கின உற்பத்தியும் பாதியாக குறைந்ததோடு, மீன்பிடி தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாண் உயிரி பன்முகத்தன்மை மற்றும் அதனுடன் சார்ந்த நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான அறிவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதோடு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதாக இருந்தது. எனவே பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும். இயற்கையை அரவணைத்து சென்றால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நன்றியுரை நிகழ்த்தினார்.
விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலாளர் பூர்வஜா ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர் உள்பட மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக ‘ட்ரீ ஆம்புலன்சு’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் மரங்களுக்கு என்று பிரத்தியேகமாக முதல் கட்டமாக தொடங்கப்பட்ட ஆம்புலன்சு சேவையை வெங்கையா நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து இந்தியாவின் பசுமை மனிதன் என்று அழைக்கப்படும் ட்ரீ ஆம்புலன்சு’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.அப்துல் கனி கூறும்போது, மரங்களை பாதுகாப்பதற்கான முதல் உதவி அளித்தல், மரம் நடுதல், மரங்களை இடம் மாற்றி நடுதல், விதைப்பந்துகள் மூலம் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளுக்கும், மரங்களை பாதுகாத்து, வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்காக மரங்களுக்கான ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்சில் செடி, கொடி பற்றிய நிபுணர்கள், தோட்டக்கலை உபகரணங்கள் உடன் உதவியாளர்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துடன் பயணம் செய்வார்கள் என்றார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. துணை ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் நான் பேசுவது வழக்கம். இப்போது மக்களிடம் இருந்து விலகி விட்டேன். ஆனால், மதிக்கத்தக்க பதவியில் இருக்கிறேன். இப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை (நிஜ தேர்தல்) நம்புங்கள்.
சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.
அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவிட்ட துணை ஜனாதிபதி ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டு நினைவு தபால் தலைகள் மற்றும் 100 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார். #VicePresident #VenkaiahNaidu #JallianwalaBagh #JallianwalaBaghmemorial #JallianwalaBaghStamp
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கங்கையில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள புகழ் பெற்ற அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது. பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளை வேருடன் அகற்றுவதற்கு இதுவே சரியான தருணம். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி தரவேண்டும்.
உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் ஆகிவிடக்கூடாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதற்குரிய பலனை திருப்பித்தர வேண்டும். பயங்கரவாதிகள் நம்மை பயமுறுத்தவும், நமது துணிச்சலை குறைக்கவும் விரும்புகிறார்கள். எனவே நாம் துவண்டுவிடவும் கூடாது, பலமிழந்துவிடவும் கூடாது.
அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கே நாம் திருப்பித்தர வேண்டும். இதுபோன்ற கோழைத்தனமான செயலை அவர்கள் மீண்டும் செய்வதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கும் வகையில் இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியா முதலில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளது.
உலக நாடுகளின் மக்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ஆனால் அது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கள் சொந்த நாட்டில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கே கொண்டு வந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மேற்படி குற்றவாளிகளை தானாகவே சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகள் உருவாக்கி உள்ளன. இந்தியாவும் 50 நாடுகளுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறது. மேலும் 10 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தப்பி ஓடும் குற்றவாளிகளை தானாகவே சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளுக்கு இடையேயும் உருவாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சியை நோக்கியே வியாபாரங்கள் அமைய வேண்டும். வர்த்தகம் செய்வோர் தங்களுக்குள்ளே சுயக்கட்டுப்பாட்டு நெறிமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதன் மூலம் சிலர் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
குற்றங்களில் ஈடுபட்டு தப்பி ஓடுபவர்கள், சட்டத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக, தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள். எது அச்சுறுத்தல்? நீங்கள்தான் (தப்பி ஓடும் குற்றவாளிகள்) நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறீர்கள். மற்றவர்கள் எதிர்கொள்வதை போல நீங்களும் நாட்டுக்கு திரும்பி வந்து சட்ட நடவடிக்கைகளை ஏன் எதிர்கொள்ளக்கூடாது?
இத்தகைய குற்றவாளிகளை தானாகவே ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விசாரணை நிறுவனங்களால் தேடப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். எனினும் வெங்கையா நாயுடு, தனது உரையில் இவர்களில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்