என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vehicle accident"
திருச்செந்தூர்:
மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது55). தைப் பூசத்தை முன்னிட்டு பிச்சை மணி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தனர். நேற்று இரவு இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அவரது ஊரை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் குழுவுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார்.
இன்று அதிகாலை அவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் மற்றவர்கள் செல்ல, பின்னால் மெதுவாக பிச்சைமணி நடந்துசென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிச்சைமணி மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
சத்தம் கேட்டு மற்ற பக்தர்கள் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிச்சை மணி சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் பலியான பிச்சை மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பிச்சை மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
வாலாஜா:
ஆற்காடு அருகே உள்ள வளவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 51). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முருகானந்தம் நேற்று இரவு வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் மாந்தாங்கலுக்கு சென்றார். அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகானந்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகன விபத்தில் பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பெண்ணாடத்தை அடுத்த நந்த பாடி கிராமத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மழையில் நனைந்த படி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று திடீரென மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்தபெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாகனம் மோதி இறந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் நூற்பாலை அருகே சம்பவத்தன்று இரவு 70-வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மூதாட்டியை அந்த வழியாக வந்த ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தைவேல் (35) என்பவர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு மூதாட்டியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்