search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public strike"

    • சாலை அமைக்க வலியுறுத்தல்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ராயனேரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் தரை பாலம் உடைந்து குண்டும் குழியுமாக சேறும் சகதியூமாக காணப்படுகிறது.

    அதுமட்டுமின்றி காலம் காலமாக கெட்டுக்காடு பகுதியில் வசித்து வந்த குடும்பங்களை சாகச சுற்றுலா தலம் அமைக்கும் என்கிற பெயரில் அப்புறப்படுத்த கூடாது.

    தங்கள் பகுதி மக்களுக்கு பஸ் நிறுத்தம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அத்தனாவூரிலிருந்து நிலாவூர் செல்லும் சாலையில் ராயனேரி கூட்ரோடு பகுதியில் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் சமாதானம் ஆகாத அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மற்றும் துணைத் தலைவர் திருமால் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி கீழ்பாதி மற்றும் மேல்பாதி பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை, மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டியும் முறையாக பாராமரிக்கவில்லை, அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் எடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை.

    இது குறித்து திருவரங்குளம் ஆணையரிடமும், ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலங்குடி அருகே மரமடக்கி சாலையில் வன்னியன் விடுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மற்றும் வருவாய் அலுவலர் சாந்தி, ஊராட்சி அதிகாரி வனிதா, கிராம நிர்வாக அலுவலர் ராமையா ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் அதிகாரிகள் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு பகுதியில் 15 நாட்கள் மேலாகியும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் சாக்கடை மற்றும் சரியாக கவனிக்கப்படாத கண்டிக்கும் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஆத்தூர் சென்னை பிரதான சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் நடைபெற்றது.

    இதனால் சேலம்-சென்னை செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பல முறை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் புகார் கூறியும் எந்த பயனும் இல்லை குப்பை சுத்தம் செய்வதில்லை குடிநீர் 15 நாட்களுக்கு மேலாகி வழங்கப்படவில்லை சாக்கடை சுத்தம் செய்யாமல் குழந்தைகளுக்கு காய்ச்சல் வாந்திபேதி ஏற்படுகிறது. இதனால் பொருக்க முடியாமல் சாலை மறியல் செய்கிறோம் என்றனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

    பாடாலூர் அருகே புதுக்குறிச்சி ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அருகே உள்ள காரை கிராமத்தில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், கிணறுகள் காரை ஊராட்சி புதுக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகே உள்ளது. அந்த நிலத்திற்கு செல்வதற்காக புதுக்குறிச்சி ஏரியினுள் சந்திரசேகர் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றி விட்டு, சாலை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து புதுக்குறிச்சி கிராமத்தை பொதுமக்கள் நேற்று காலை காரை பஸ் நிறுத்தம் அருகே ஆலத்தூர் கேட்டில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சிரில்சுதன், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியில் ஆக்கிரமித்து சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மழவராயநல்லூர் மேற்குதெருவில் உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மணவாளன் மற்றும் போலீசார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கூறி மின்மாற்றியை உடனே சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் போஜனாபுரம் ஊராட்சி மேல்சுந்தரகுட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குடியாத்தம் மேல்பட்டி செல்லும் சாலை உள்ளிகூட்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்த்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தவர்கோட்டை அருகே கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தவர்கோட்டை அடுத்து உள்ள வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசின் புயல் நிவாரணநிதி முறையாக கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரமடைந்த வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை அடுத்த வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை  மரக்கட்டைகளை போட்டு  மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்து தகவல்  அறிந்ததும் கந்தவர்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். ஆனால் பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    தொடர்ந்து சாலை மறியல் செய்து வருவதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் பஸ் பயணிகள் அவதி அடைந்தனர். 
    வேலூர் கஸ்பாவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் கஸ்பா வ.உ.சி. தெருவில் 2 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது வ.உ.சி. தெருவிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் உடைந்து விட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து உடைந்த பைப் மீது ரப்பர் டியூப் சுற்றி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வ.உ.சி. தெருவிற்கு மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    அப்போது கழிவுநீர் கலந்த குடிநீர் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குடிநீர் பைப் லைன் உடைந்து விட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் இருந்து விட்டனர். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடைந்த குடிநீர் குழாய் பைப் லைனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    அரியலூர் அருகே உள்ள கீழப்பழுர் கிராமத்தை சேர்ந் தவர் மூர்த்தி (வயது 33), தொழிலாளி. இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே தச்சன்குறிச்சி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். 

    நேற்றிரவு அவர் சமத்துவபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி-லால்குடி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் , மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். 

    இதனிடையே இன்று காலை தச்சன்குறிச்சி சமத்து வபுரம் அருகே உள்ள மது பானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி -லால்குடி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் லால்குடி தாசில்தார் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தச்சன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

    ஏராளமானோர் அங்கு குவிவதால் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. மேலும் மது அருந்தி விட்டு செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அவினாசி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள துலுக்கமத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    பக்கத்து ஊர்களுக்கு சென்றுதான் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்தனர்.

    இன்று காலை துலுக்க மத்தூர் பொதுமக்கள் அங்குள்ள நால் ரோட்டில் காலி குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் பங்கேற்றனர்.

    மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sterliteplant #tuticorincollectoroffice

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டது.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான பசுமை தீர்ப்பாய குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் கூறியது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அமைப்புகள் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதனிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டி ருந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பாக வக்கீல் கிருஷ்ண மூர்த்தி, பிரபு, வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் கூறும் போது, ‘தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறவழியில் போராடுவோம். தமிழக அரசு உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி முகத்தில் கவசம் அணிந்து வந்தார்கள்.

    பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு திரண்டு நின்ற பெண்கள் கூறுகையில், ‘பசுமை தீர்ப்பாய உத்தரவு பொதுமக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அரசு வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.

    போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் வருகிற 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்ற அனுமதியை பெற்று உண்ணாவிரதம் நடத்தப்படும்’ என்றனர். #Sterliteplant #tuticorincollectoroffice

    துவரங்குறிச்சி அருகே ஊராட்சி செயலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி அவரை மாற்றக்கோரி பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்காம்பட்டி ஊராட்சி செயலர், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திடீரென மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மருங்காபுரி தாசில்தார் கருணாகரன், மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ×