என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயல் நிவாரண நிதி கேட்டு கந்தர்வக்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
Byமாலை மலர்24 Jan 2019 1:00 PM GMT (Updated: 24 Jan 2019 1:00 PM GMT)
கந்தவர்கோட்டை அருகே கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை:
கந்தவர்கோட்டை அடுத்து உள்ள வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசின் புயல் நிவாரணநிதி முறையாக கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை அடுத்த வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மரக்கட்டைகளை போட்டு மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கந்தவர்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சாலை மறியல் செய்து வருவதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் பஸ் பயணிகள் அவதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X