search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    ஆலங்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி கீழ்பாதி மற்றும் மேல்பாதி பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை, மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டியும் முறையாக பாராமரிக்கவில்லை, அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் எடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை.

    இது குறித்து திருவரங்குளம் ஆணையரிடமும், ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலங்குடி அருகே மரமடக்கி சாலையில் வன்னியன் விடுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மற்றும் வருவாய் அலுவலர் சாந்தி, ஊராட்சி அதிகாரி வனிதா, கிராம நிர்வாக அலுவலர் ராமையா ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் அதிகாரிகள் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×