search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vazhipadu"

    • காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
    • கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

    ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

    காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

    கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

    • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
    • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

    ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

    அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

    வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

    இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

    கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

    ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

    அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

    கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

    பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

    • பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
    • இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.

    இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.

    பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.

    • சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
    • சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.

    அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.

    அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

    சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.

    மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.

    சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

    சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.

    இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

    கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.

    இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.

    தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.

    விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.

    கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.

    சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.

    சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.

    அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

    விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.

    • கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
    • கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.

    இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

    சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.

    இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.

    கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.

    கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

    இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.

    அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.

    இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.

    பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.

    இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.

    இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.

    கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.

    கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.

    திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.

    இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.

    கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.

    • ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
    • மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.

    ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.

    உலகத்தில் உள்ள சகல தீர்த்தங்களும், தங்களிடம் நீராடி மகள் போக்கிக் கொண்ட பாவங்கள் நீங்க,

    துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடி புனிதம் பெறுகின்றன என்று சாஸ்திரம் கூறுகிறது.

    பக்தர்களிடம் மிகவும் கருணை கொண்டவள். தட்சிண கங்கை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவள்.

    சம்சார சாகரத் துன்பங்களிலிருந்து விடுவிப்பவள். மோட்சம் அளிக்கும் அன்னை என்று காவிரி அஷ்டகம் கூறுகிறது.

    தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி,

    சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்று காவிரி புஜங்கம் கூறுகிறது.

    துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நசித்து விடும்.

    மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.

    செல்வச்செழிப்பு கிட்டும் என்று காவிரி மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

    கங்கையை விட காவிரி புனிதமானது என்பதால், துலா மாதம் ஐப்பசி அமாவாசை அன்று கங்காதேவி,

    மயூரத்துக்கு வந்து, நந்திக் கட்டத்தில் நீராடி, மக்கள் தன்னிடம் கரைத்தப் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

    ஐப்பசி அமாவாசையில் காவிரியில் நீராடி, நீர்க்கடன் செலுத்தினால், அவர்களின் முன்னோர்கள் சுர்க்கலோகம் சொல்வார்கள் என்பது நம்பிக்கை.

    துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது.

    இயலாத நிலையில், கடைமுகம் என்று சொல்லப்படும் ஐப்பசி 30ந்தேதி நீராடி பலன் பெறலாம்.

    அன்றும் நீராட முடியாதவர்கள், முடவன் முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்கிறது சாஸ்திரம்.

    துலாமாதத்தில் பிரம்மா, சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, இந்திராணி, தேவ மாதர்கள், சப்த கன்னியர்கள் முதலியோர், ஒவ்வொரு நாளும் காவிரியில் நீராடுவதாக ஐதீகம்.

    புராணங்களில் சந்தனு மகாராஜா துலா காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீரங்க நாதரை வழிபட்டு பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தார் எனவும்,

    அர்ஜுனன் காவிரியில் துலாஸ்நானம் செய்து, ஸ்ரீரங்கநாதரை துதி செய்து சுபத்ராவை மணம் புரிந்தார் என்றும் குறிப்பு உள்ளது.

    மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும்,

    முன்னோர்களின் பாவங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

    துலா காவிரி நீராடல், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றைத் தரும்.

    எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும் பாவங்கள் விலகும் என்கிறார் பிரம்மா, நதிதேவதைகளிடம்.

    எனவே, பகலும் இரவும் சமமாக இருக்கும் ஐப்பசியில் (துலா மாதம்), நியமம் தவறாமல், பூஜைகளைச் செய்தும், விரதம் மேற்கொண்டும், காவிரி நதியில் நீராடினால் கட்டாயம் பலன் உண்டு.

    • தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    • வைகாசி- வைகாசி விசாகம்

    மருதமலை கோவிலில் ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சித்திரை - தமிழ் வருட பிறப்பு

    வைகாசி- வைகாசி விசாகம்

    ஆடி-ஆடி கிருத்திகை, ஆடி18

    ஆவணி-விநாயகர் சதுர்த்தி

    புரட்டாசி- நவராத்திரி

    ஐப்பசி-கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழா 7 நாட்கள் நடைபெறும், திருக்கல்யாணம்

    கார்த்திகை- கார்த்திகை தீபம்

    மார்கழி- தனூர் மாதம் பூஜை (ஜனவரி - ஆங்கில புத்தாண்டு)

    தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    மாசி- சிவராத்திரி

    பங்குனி- பங்குனி உத்திரம். பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா

    • இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.
    • இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    5 மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

    இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் பல முனிவர்கள் இன்றும் கண்களுக்கு தெரியாமல் மரத்தில் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.

    இந்த மரம் நெடுங்காலமாக உள்ளது. இதன் வயது கணக்கிட முடியவில்லை.

    இந்த மரத்தின் இணைந்த மரங்கள் குறித்து இந்த மலையில் புராதனமாக வாழும் இருளர்கள் கூறும் போது, "கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் தற்போது உள்ளது" என தெரிவித்தனர்.

    • கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
    • மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.

    மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.

    மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

    அந்தளவுக்கு முருகப் பெருமான் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார்.

    புதுவீட்டில் குடியேறலாம்

    குறிப்பாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையடிவார படிக்கட்டுகளில் இருந்து கற்கள் மேல் கற்கள் வைத்து அடுக்கி கொண்டு வழிபட்டு செல்கிறார்கள்.

    அதென்ன.. புதுவித வழிபாடாக உள்ளதே? என்று கேட்கிறீர்களா.!

    ஆம்! கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.

    இதனால் கற்களை எப்படி பக்தர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தார்களோ, அதுபோல் புது வீடு கட்டி குடியேறுவார்கள் என்று இன்றளவும் பக்த கோடிகளால் நம்பப்பட்டு வருகிறது.

    மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.

    இங்கு முருகப் பெருமானை மனமுருக வேண்டி படிக்கட்டுகளில் கற்களை அடுக்கி வைத்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இதனால் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து முருகப்பெருமான் நிவர்த்தி செய்கிறார்.

    விரைவிலேயே பக்தர்கள் வேண்டிய வரங்களை அளித்து அவர்களின் வாழ்க்கையில் செல்வத்தை வாரி வழங்குகிறார் என்பது ஐதீகம்.

    • நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    இயற்கையழகுமிகு மலைகளுக்கிடையில் இதயம் போல காட்சியளிக்கும் அழகிய மலைக்கோவிலாம் மருதமலை இதயத்தை ஈர்க்கிறது.

    பேரெழில் வாய்ந்த முருகப்பெருமானின் பேரழகைக் கச்சியப்ப முனிவர்,

    'ஆயிரங்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு எழுந்த மேயின எனினும் செவ்வேள் விமலமாற் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்கு ஆற்றாது என்றிடில் இணைய தொல்லோன் மாயிருவடிவிற்கெல்லாம் உவமையார் விடுக்க வல்லார்',

    என்று பாடுவார்.

    அதே போல் இத்திருக் கோவிலில் மருதமலையான், சிரசில் கண்டிகையுடனும், பின் பக்கம் குடுமியுடனும், கோவணங்கொண்டு, வலது திருக்கரத்தில் ஞானத்தண்டேந்தி,

    இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து உண்மையறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.
    • இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.

    நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன.

    இதனை திருநாவுக்கரசர், 'சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' என்கிறார்.

    இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    அவை....மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.

    • கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
    • அமெரிக்கா, மலேசியா, நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற தலங்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.

    முருகனை மனமுறுகி வேண்டினால் வேண்டும் வரத்தை தந்தருளுவார் என்பதால் தமிழகம் மட்டுமின்றி

    அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இக்கோவிலில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து

    கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தாலும்

    சஷ்டி தோறும் விரதம் இருந்து மருதாசல மூர்த்தியை வழிபட்டாலும் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஐதீகமாகும்.

    ×