search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marudhamalai Murugar"

    • தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    • வைகாசி- வைகாசி விசாகம்

    மருதமலை கோவிலில் ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சித்திரை - தமிழ் வருட பிறப்பு

    வைகாசி- வைகாசி விசாகம்

    ஆடி-ஆடி கிருத்திகை, ஆடி18

    ஆவணி-விநாயகர் சதுர்த்தி

    புரட்டாசி- நவராத்திரி

    ஐப்பசி-கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழா 7 நாட்கள் நடைபெறும், திருக்கல்யாணம்

    கார்த்திகை- கார்த்திகை தீபம்

    மார்கழி- தனூர் மாதம் பூஜை (ஜனவரி - ஆங்கில புத்தாண்டு)

    தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    மாசி- சிவராத்திரி

    பங்குனி- பங்குனி உத்திரம். பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா

    • இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.
    • இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    5 மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

    இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் பல முனிவர்கள் இன்றும் கண்களுக்கு தெரியாமல் மரத்தில் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.

    இந்த மரம் நெடுங்காலமாக உள்ளது. இதன் வயது கணக்கிட முடியவில்லை.

    இந்த மரத்தின் இணைந்த மரங்கள் குறித்து இந்த மலையில் புராதனமாக வாழும் இருளர்கள் கூறும் போது, "கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் தற்போது உள்ளது" என தெரிவித்தனர்.

    • கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
    • மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.

    மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.

    மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

    அந்தளவுக்கு முருகப் பெருமான் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார்.

    புதுவீட்டில் குடியேறலாம்

    குறிப்பாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையடிவார படிக்கட்டுகளில் இருந்து கற்கள் மேல் கற்கள் வைத்து அடுக்கி கொண்டு வழிபட்டு செல்கிறார்கள்.

    அதென்ன.. புதுவித வழிபாடாக உள்ளதே? என்று கேட்கிறீர்களா.!

    ஆம்! கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.

    இதனால் கற்களை எப்படி பக்தர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தார்களோ, அதுபோல் புது வீடு கட்டி குடியேறுவார்கள் என்று இன்றளவும் பக்த கோடிகளால் நம்பப்பட்டு வருகிறது.

    மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.

    இங்கு முருகப் பெருமானை மனமுருக வேண்டி படிக்கட்டுகளில் கற்களை அடுக்கி வைத்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இதனால் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து முருகப்பெருமான் நிவர்த்தி செய்கிறார்.

    விரைவிலேயே பக்தர்கள் வேண்டிய வரங்களை அளித்து அவர்களின் வாழ்க்கையில் செல்வத்தை வாரி வழங்குகிறார் என்பது ஐதீகம்.

    • நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    இயற்கையழகுமிகு மலைகளுக்கிடையில் இதயம் போல காட்சியளிக்கும் அழகிய மலைக்கோவிலாம் மருதமலை இதயத்தை ஈர்க்கிறது.

    பேரெழில் வாய்ந்த முருகப்பெருமானின் பேரழகைக் கச்சியப்ப முனிவர்,

    'ஆயிரங்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு எழுந்த மேயின எனினும் செவ்வேள் விமலமாற் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்கு ஆற்றாது என்றிடில் இணைய தொல்லோன் மாயிருவடிவிற்கெல்லாம் உவமையார் விடுக்க வல்லார்',

    என்று பாடுவார்.

    அதே போல் இத்திருக் கோவிலில் மருதமலையான், சிரசில் கண்டிகையுடனும், பின் பக்கம் குடுமியுடனும், கோவணங்கொண்டு, வலது திருக்கரத்தில் ஞானத்தண்டேந்தி,

    இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து உண்மையறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.
    • இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.

    நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன.

    இதனை திருநாவுக்கரசர், 'சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' என்கிறார்.

    இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    அவை....மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.

    • கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
    • அமெரிக்கா, மலேசியா, நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற தலங்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.

    முருகனை மனமுறுகி வேண்டினால் வேண்டும் வரத்தை தந்தருளுவார் என்பதால் தமிழகம் மட்டுமின்றி

    அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இக்கோவிலில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து

    கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தாலும்

    சஷ்டி தோறும் விரதம் இருந்து மருதாசல மூர்த்தியை வழிபட்டாலும் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஐதீகமாகும்.

    • மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.
    • இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    பதினெட்டாம்படி கடந்து மேல் சென்றால் மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.

    இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    முருகனடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன்னையும், பொருளையும் உண்டியலில் போட,

    இதை கண்ட மூன்று கள்வர்கள் ஒருநாள் இரவில் உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் களவாடி மலைச்சரிவு வழியாக சென்றனர்.

    முருகப்பெருமான் குதிரை வீரனைப்போல சென்று அவர்களைப் பிடித்து, "நீவிர் கற்சிலைகளாகக் கடவீர்" எனச் சபித்ததால் அம்மூன்று கள்வர்களும் கற்சிலைகளாக நிற்பதாகச் செவி வழிச் செய்தி கூறுகின்றது.

    • முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.
    • அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது.

    இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பாம்பாட்டி சித்தரை வணங்கி தியானம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது.

    அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    பாம்பாட்டி சித்தருக்கும் கோவிலுக்கும் ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உள்ளது.

    அதன் வழியாக தான் சித்தர் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை தினமும், காலை , மாலை நேரத்தில் தரிசித்து வருவதாக நம்பப்படுகிறது.

    முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.

    இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதாக சொல்லப்படுகிறது.

    தற்போது பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளித்து வருகிறார்கள்.

    பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

    இந்த சித்தரை வழி பட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையான பெறுவர்.

    இங்கு தியானம் செய்வது மன அமைதியை தரும்.

    • முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.
    • பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

    பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

    இறைவனை இடைவிடாது நினைத்து நினைத்து அகக்கண்ணால் கண்டு ஆத்ம சக்தியால் செயற்கரிய செயல்களை செய்து மருத்துவம், ஜோதிடம், இரச வாதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்களை சித்தர்கள் என்பார்கள்.

    பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் காடுகளில் காணப்பட்ட பாம்புகளை பிடித்து ஆட்டியும், தன் சொல்படி நடக்க செய்தும் வந்தார்.

    ஒருமுறை "நவரத்னம்" என்னும் பாம்பை ஆட்ட முயற்சித்த போது சட்டை முனிவரை சந்தித்து யோக நெறியில் சமாதி கூடும் நிலை பெற்றாராம்.

    பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம்.

    இவ்வாறு பல சித்துகளை செய்த இவர் இந்த பாம்பை ஆட்டுவித்ததால் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

    முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.

    ஒரு காலத்தில் உயரமான குன்று உருண்டோடி வர சித்தர் தம் அருட் சக்தியால் பாறையின் முகட்டிலேயே நிற்கும்படி செய்தார் என்பர்.

    • இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது
    • அடிவாரத்தில் படிகளின் வழியாக செல்லும் வழியில் இந்த சன்னதி அமைந்துள்ளது.

    மருதமலை முருகன் கோவிலில் இடும்பன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

    அடிவாரத்தில் படிகளின் வழியாக செல்லும் வழியில் இந்த சன்னதி அமைந்துள்ளது.

    இங்கு காவடியை சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பெரிய உருண்டை வடிவமான பெரிய பாறையில் காவடியை சுமந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் இடும்பன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இடும்பனை வணங்கி செல்கிறார்கள்.

    மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி ஏராளமான பெண்கள் இன்றும் வழிபட்டு செல்கிறார்கள்.

    • இந்த விநாயகரின் விக்ரகம் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது.
    • விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது.

    மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த விநாயகரின் விக்ரகம் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது.

    பிற தலங்களில் காண்பதற்கு அரிதாகும்.

    விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.

    தான் தோன்றி விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது.

    சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம்படிக்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.

    • அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும்.
    • அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது.

    முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் மருதமலை பகுதிக்கு வந்தார்.

    அதிக தாகத்தாலும் களைப்பாலும் துன்புற்று மருத மரத்தின் அடியில் இளைப்பாறினார்.

    அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது.

    இந்த அதிசயம் கண்ட சித்தர் மகிழ்ச்சி அடைந்தார்.

    முருகனின் திருவருளே அதற்கு காரணம் என்று மகிழ்ந்த சித்தர் முருகப் பெருமானை "மருதம்+ சலம்(நீர்) ஆகியவற்றின் தலைவா" என வாழ்த்தி பாடினார்.

    அதுவே காலப் போக்கில் மருதாசலபதி என மருவி அழைக்கப்படுகிறது என்பர்.

    அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும்.

    எனவே மருத மரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாசலம் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கருதலாம்.

    எனவே கி.பி.12&ம் நூற்றாண்டில் மருதமலை கோவில் அமைக்கப்பட்டது என்றும் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளுள் ஒன்றான ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது என்றும் அறியலாம்.

    பேரூர் புராணம், காஞ்சி புராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

    ×