search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vasantha urchavam"

    • இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    • பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது.

    முதல் நாளான நேற்று கோவிலில் அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் சுவாமி அம்பாளுடன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினர்.

    இதனை தொடர்ந்து அண்ணாமலையார் மகிழ மரத்தை 10 முறை தொடர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பொம்மை பூ போடும் வைபவம்

    அப்போது பாவை பொம்மை பூ போடும் வைபவம் நடந்தது.

    அண்ணாமலை யாரையும் உண்ணாமுலை அம்மனையும் சந்தோசப்படுத்தும் விதத்தில் பாவை வடிவிலான பொம்மை ஒவ்வொரு சுற்று முடிவிலும் பூ கொட்டியது.

    இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகின்ற 4-ந் தேதி வரை அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் இரவு நேரங்களில் மூன்றாம் பிரகாரத்தில் 10 முறை வலம் வரும் உற்சவம் நடக்கிறது.

    • இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
    • 4-ந் தேதி மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

    விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தக்காலிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மங்கள வாத்தியங்கள் முழங்க நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருள பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • மே 5-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடக்கிறது.
    • ஆர்ஜித சேவைகள் மே 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரத்து.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வசந்தோற்சவம் நடக்கிறது. இதற்காக மே மாதம் 2-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 3-ந்தேதி மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    விழாவின் ஒரு பகுதியாக மே மாதம் 5-ந்தேதி காலை 9.10 மணிக்கு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. வசந்தோற்சவத்தின் 3 நாட்களும் கோவில் அருகில் உள்ள சுக்கரவாரித் தோட்டத்தில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் பத்மாவதி தாயார் ஊர்வலமும் நடக்கிறது.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் மே மாதம் 3-ந்தேதி கல்யாணோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, அஷ்டோத்தர சதகலசாபிஷேகம், மே மாதம் 5-ந்தேதி லட்சுமி பூஜை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மே மாதம் 2-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மே 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • மே 4-ந்தேதி இரவு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, அன்று மாலை 4 மணி முதல் மாலை 5.25 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மூகூர்த்தம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 25-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு சுவாமிக்கு மண்டகபடி, வீதிஉலா நடை பெறும்.

    விழாவின் நிறைவாக, மே 4-ந்தேதி காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடக்கிறது.

    மேலும் அன்று நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார்.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் 3 நாட்கள் நடந்தன. முதல் நாள் மற்றும் 2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம், வசந்த உற்சவ ஆஸ்தானம் நடந்தது.

    3-வது நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர் சமேத ஆஞ்சநேயர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து வெளியே வந்து நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு உற்சவர்களுக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவையால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நெய் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிறைவாக வசந்தோற்சவ ஆஸ்தானம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இத்துடன் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    வசந்தோற்சவத்தில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோவிலில் வசந்தோற்சவம் தொடங்கியது.
    • மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு ‘வசந்தோற்சவம்’ எனப் பெயர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு 'வசந்தோற்சவம்' எனப் பெயர். சூரியனின் உஷ்ணத்தில் இருந்து இறைவனை தணிக்கும் விழா என்பதால், இது உபசமானோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த விழாவில் மணம் வீசும் மலர்களுடன் பலவகை இனிப்பான பழங்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த விழாக்களுக்காக ஒரு கவர்ச்சியான மண்டபமும் வடிவமைக்கப்படும். அது வசந்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

    வசந்த மண்டபத்தில் 250 கிலோ வெட்டிவேர், 500 கிலோ பாரம்பரிய பூக்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் போன்றவற்றால் பக்தர்களை கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பல்வேறு வகையான மரம் மற்றும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு, நரி, மலைப்பாம்பு, நல்ல பாம்பு, மயில், அன்னப்பறவை, வாத்து, மைனா, கிளி போன்ற உருவப்பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த மண்டபம் சேஷாசலம் வனத்தை ஒத்ததாக இருந்தது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    முன்னதாக விஸ்வக்சேனாராதனா, புண்யாஹவச்சனம், நவ கலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. அதைத்தொடர்ந்து சத்ர சாமர வியாஜன், தர்பணாதி நைவேத்தியம், முக சுத்தி, தூப பிரசாதம் வழங்கப்பட்டது. சங்கதாராவுடன், சக்ரதாரா, சஹஸ்ரதாரா, மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    வசந்தோற்சவத்தில் பங்கேற்ற வேத பண்டிதர்கள் ஸ்நாபன திருமஞ்சனத்தின்போது தைத்தரிய உபநிடதம், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்யப் பிரபந்தத்தின் பாசுரங்களை ஓதினர்.

    ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சாமிக்கும், தாயார்களுக்கும் பல்வேறு வகையான உத்தமஜாதி மலர் மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர். இறுதியில் சாமியும், தாயார்களும் வசந்த மண்டபத்தில் இருந்து மாலை புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

    வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    • ஆர்ஜித சேவைகள் நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தினமும் மாலை ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    2-வது நாளான 4-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு ெசல்கிறார்கள். அங்கு வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள்.

    3-வது நாளான 5-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, கிருஷ்ணர் வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை கோவிலுக்கு திரும்புவார்கள்.

    வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. வசந்தோற்சவம் நடக்கும் மண்டபம் காணிக்கையாளர்களின் உதவியோடு பல்வேறு பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்யேக பழங்கள், உலர் பழங்கள், மலர்கள் தருவிக்கப்பட உள்ளன.

    வசந்தோற்சவத்தையொட்டி கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை நாளை முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • வசந்த உற்சவ விழா ஏப்ரல் 3 முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது.

    கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவடைவது வழக்கம் அதன்படி 3-ந்தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை சென்றடைகின்றனர். பின்னர் பூஜைகள் முடிந்து மாலை கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    4-ந்தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் 4 மாட விதிகளில் தங்க தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஏழுமலையான், சீதாராமர் லஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி, கிருஷ்ணர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.

    வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், சாதம் ஆகியவை மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 முதல் 6-30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது.

    வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதியில் நேற்று 63, 507 பேர் தரிசனம் செய்தனர்.29,205 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    • 3-ந்தேதி முதல் 5-ந்தேதி சேவைகள் வரை ரத்து செயயப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. பின்னர் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு கோவிலுக்கு திரும்புகின்றனர்.

    இரண்டாம் நாளான 4-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாடவீதிகளில் உலா நடக்கிறது. பின்னர், வசந்த மண்டபத்தில் அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.

    கடைசி நாளான 5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி, சீதாராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள், ருக்மணியுடன் வசந்த உற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலை வலம் வருவார்கள்.

    இதை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறும்.

    வசந்த உற்சவத்தை முன்னிட்டு அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ரத்து செயயப்பட்டுள்ளது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட மெலட்டூர் சோமாசித்தெருவில் எழுந்தருளியிருக்கும் கற்பக மகாமாரியம்மன் கோவில் 37-ம் ஆண்டு வசந்த உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி காலை விக்னேஷ்வர பூஜையும், அதனை தொடர்ந்து வெட்டாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், புஷ்ப காவடி, அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.

    இரவு நாதஸ்வர இசையுடன் முத்து பல்லக்கில் கற்பக மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், தொடர்ந்து விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு விழாவான நேற்று உற்சவ மூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு கலச ஸ்தாபனம் செய்து கணபதி பூஜை, புண்ணியாவதனம், வருண பூஜை செய்தனர். கலசத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்து ஹாரத்தி சமர்ப்பித்து வசந்த உற்சவம் நடத்தப்பட்டது.

    அதன்பிறகு உற்சவர்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தீப, தூப, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி சிவன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலூ, கோவல் துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாரெட்டி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 24-ந்தேதி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், தீமிதி விழா நடக்கிறது.
    • 25-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.

    காளசமுத்திரம் கோவிலில் நடந்த அக்னி வசந்த விழாவையொட்டி நடந்த தபசுமரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

    மேலும் நாடக மன்ற குழுவினரின் மகாபாரத நாடகங்களும் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக கோவில் முன்பு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடக நடிகர் ஒருவர் அர்ச்சுனன் வேடமணிந்து தபசு மரம் ஏறி ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியை நடித்தார். தவத்தை கலைக்க சிவனும் பார்வதியும் வேடன் வேடத்தியாக வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி திருமணமாகி குழந்தை வரம் வேண்டி பெண்கள் வணங்கினர். மேலும் தபசு மரத்தின் மேலிருந்து பூ, பழம், உள்பட பல்வேறு பிரசாதங்கள் அப்போது வீசப்பட்டன. ஏராளமான பக்தர்கள் இதில் வழிபட்டனர். வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. மறுநாள் தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×