search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மெலட்டூர் கற்பக மகாமாரியம்மன் கோவில் வசந்த உற்சவ விழா
    X

    மெலட்டூர் கற்பக மகாமாரியம்மன் கோவில் வசந்த உற்சவ விழா

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட மெலட்டூர் சோமாசித்தெருவில் எழுந்தருளியிருக்கும் கற்பக மகாமாரியம்மன் கோவில் 37-ம் ஆண்டு வசந்த உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி காலை விக்னேஷ்வர பூஜையும், அதனை தொடர்ந்து வெட்டாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், புஷ்ப காவடி, அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.

    இரவு நாதஸ்வர இசையுடன் முத்து பல்லக்கில் கற்பக மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், தொடர்ந்து விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×