search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "university"

    • இதற்கு பட்டியல் அணியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார்ராஜா தலைமை வகித்தார்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவ தேர்வு வினாத்தாளில் ஜாதி பெயரை குறிப்பிட்டு கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு பட்டியல் அணியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார்ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், விவசாய அணி மாநில துணை தலைவர் பண்ணவயல் இளங்கோ, ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
    • என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி ெதாழில்முறை பயிற்சி, பொதுமக்களின் கருத்து ஆகியவற்றை கொண்டு என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் தேசிய அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் இந்தியாவின் பொறியியல் பிரிவில் 35-வது இடத்தையும், அனைத்து பிரிவுகளில் 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பாராட்டினர்.

    • தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது.
    • துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக அளவில் தமிழ்மொழியைப் பரப்பும் நோக்கத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, பொதுமக்களுக்கும், மாணவர்கள் ஆய்விற்கும் இந்த பல்கலைக்கழக ஓசை என்ற இணையவழி வானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர் நீலகண்டன், புலத் தலைவர்க ள் கண்ணன், கவிதா, இளையாப்பிள்ளை, துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், தொழில்நுட்பாளர்கள் செல்வம், அர்ணால்ட்டு மற்றும் கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி இருந்தும் மகாத்மா காந்திக்கு எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது. #MahatmaGandhi #ChairDespite
    புதுடெல்லி:

    நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு பல்கலைக்கழகங்கள் இருக்கை அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி இருக்கிறது. ஆனாலும் இதுவரை எந்த பல்கலைக்கழகத்திலும் மகாத்மா காந்தி பெயரால் இருக்கை அமைக்கப்படவில்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமைதி, அகிம்சை, சுதந்திரப் போராட்ட இயக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகிய பொருள்களில் மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு இருக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி தந்து உள்ளது. இருப்பினும் மகாத்மா காந்தி இருக்கை எந்த பல்கலைக்கழகத்திலும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்த பல்கலைக்கழகத்திடம் இருந்தும் திட்ட முன்வடிவும் பெறப்படவில்லை” என்று கூறினார்.

    அதே நேரத்தில், காந்திய கொள்கை சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் விருப்பம் கொண்டு இருக்கின்றனர். காந்திய கொள்கை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில் ஆய்வு, பி.எச்.டி. ஆய்வு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

    இதற்கு 2017-18 கல்வி ஆண்டில் காந்திய கொள்கை தொடர்பாக 78 பேர் பி.எச்.டி. ஆய்வுக்கு பதிவு செய்து உள்ளனர் என்பதே சான்றாக அமைந்து உள்ளது. #MahatmaGandhi #ChairDespite  #Tamilnews

    பணி நியமனங்களை நிறுத்தி வையுங்கள் - அனைத்து பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு
    புதுடெல்லி:

    இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை எந்த பணி நியமனமும் நடத்த கூடாது என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. #UGC 

    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. 

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பணி நியமனங்களையும் நிறுத்தி வைக்க நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. 
    மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றாக நிற்கும் போதோ, அமர்ந்திருக்கும் போதோ இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என பாகிஸ்தானின் பஹ்ரியா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கராச்சி, லாகூரில் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அந்நாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மாணவர்கள் கன்னியமாக இருக்கவே இந்த இடைவெளி அறிவிக்கப்படுள்ளதாக பஹ்ரியா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலாக பதிலடி கொடுத்து வருகின்றனர். கையில் அளவுகோல் வைத்துக்கொண்டு சுற்ற முடியுமா? என சிலர் கேட்க, பல்கலை வளாகத்தில் ஆங்காங்கே அளவீட்டு கருவிகள் வைக்க வேண்டும் என சிலர் நக்கலாக கருத்து பதிவிட்டுள்ளனர். 
    அமெரிக்காவில் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டது.#LarryNassar #MichiganStateUniversity
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் (54). பணிபுரிந்தார்.

    இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.

    பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் ஜேட் கபூயா, அய்ல்ஸ்டீபன்ஸ், காலசிஸ்மூரே

    அதை தொடர்ந்து டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.

    இத் தகவலை பல்கலைக் கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் தெரிவித்துள்ளார்.#LarryNassar #MichiganStateUniversity
    ×