என் மலர்
நீங்கள் தேடியது "gymnastics"
- நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார்.
- 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.
103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நேற்று [வியாழக்கிழமை] அவரது உயிர் பிரிந்தது.

1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.
அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
- தீபா கர்மாகர் அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தாண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது கடந்த கால விளையாட்டு அனுபவங்கள் குறித்து தீபா கர்மாகர் பகிர்ந்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தீபா கர்மாகர், "தனது ஆரம்பகால பயிற்சியாளர் ஒருவர் தன்னை எருமை என்று சொல்லி கேலி தொடர்ச்சியாக கேலி செய்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்று என்னை கேலி செய்தவர்களுக்கு நான் பதிலடி கொடுத்தேன். என்னை எருமை என்று கிண்டலடித்து பயிற்சியாளர் நான் பதக்கம் வென்ற பிறகு பூங்கொத்துகளுடன் என்னை வரவேற்க்க விமான நிலையம் வந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
- நீண்ட யோசனைக்குப் பிறகு, ஜிம்னாஸ்டிக்சில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்தேன்.
- ஜிம்னாஸ்டிக்ஸ் எனது வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும்.
டெல்லி:
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
நீண்ட யோசனைக்குப் பிறகு, ஜிம்னாஸ்டிக்சில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்தேன். இந்த முடிவு எனக்கு எளிதானது அல்ல, ஆனால் இது சரியான நேரம். ஜிம்னாஸ்டிக்ஸ் எனது வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும். மேலும் ஒவ்வொரு கணத்திற்கும் உயர்வு, தாழ்வு மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஐந்து வயது தீபா, அவளது தட்டையான பாதங்களால் ஒருபோதும் ஜிம்னாஸ்ட் ஆக முடியாது என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இன்று எனது சாதனைகளை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்றது மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் ப்ரொடுனோவா வால்ட் சிறப்பாக செயல்பட்டது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். இன்று தீபாவை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏனென்றால் அவளுக்கு கனவு காணும் தைரியம் இருந்தது.
எனது கடைசி வெற்றி ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் தாஷ்கண்ட், ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஏனென்றால் நான் என் உடலை மேலும் தள்ள முடியும் என்று உணர்ந்தேன். ஆனால் சில நேரங்களில் நம் உடல் ஓய்வெடுக்கும் நேரம் என்று சொல்கிறது, ஆனால் இதயம் இன்றும் இல்லை.
கடந்த 25 ஆண்டுகளாக என்னை வழிநடத்தி, எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்த எனது பயிற்சியாளர்கள் பிஷ்வேஷ்வர் நந்தி சார் மற்றும் சோமா மேம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் பெற்ற ஆதரவிற்காக, திரிபுரா அரசு, ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், கோஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் மெராகி ஸ்போர்ட் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, எனது நல்ல மற்றும் கெட்ட நாட்களில் எப்போதும் என்னுடன் இருந்த எனது குடும்பத்திற்கு.
நான் ஓய்வு பெறுகிறேன் என்று எழுதினேன். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸுடனான எனது தொடர்பு ஒருபோதும் இழக்கப்படாது. என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு பாதுகாப்பான வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் இந்த விளையாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை, எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு தீபா கர்மாகர் கூறினார்.
- ஜிம்னாஸ்டிக் போட்டியில் சீன வீராங்கனை சோ யாக் வெள்ளி வென்றார்.
- இத்தாலி வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போல் போஸ் கொடுத்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 6 அன்று நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இத்தாலி வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர். சீன வீராங்கனை சோ யாக் வெள்ளி வென்றார்.
வெற்றிக்கு பின்பு வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அப்போது தங்கம், வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கடிப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
அதனைப் பார்த்த சீன வீராங்கனை அதேபோல் க்யூட்டாக பதக்கங்களை கடிப்பது போல் போஸ் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது.
மதுரை
இந்திய பள்ளிகள் விளை யாட்டு குழுமத்தின் சார்பில் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் தேசிய அளவிலான ஜிம் னாஸ்டிக் போட்டிகள் நடக் கிறது. இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கோசாகுளம் சி.இ. ஓ.ஏ. பள்ளி மாணவி பவஸ்ரீ தனது திறமையை வெளிப்ப டுத்தி தேசிய போட்டிக்கு தமிழக அணிக்காக தேர்வு ஆனார்.
இதன் மூலம் அவர் நவம்பர் 3-ந்தேதி டெல்லி யில் நடக்கும் தேசிய போட் டியில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர் வான மாணவியை, சி.இ. ஓ.ஏ. கல்வி குழும நிறுவன தலைவர் ராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத்த லைவர் ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், முதன்மை தலைவர் கவுரி, மற்றும் உடல் கல்வி இயக்கு னர் செல்ல முருகன் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.
அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் (54). பணிபுரிந்தார்.
இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.

அதை தொடர்ந்து டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.
இத் தகவலை பல்கலைக் கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் தெரிவித்துள்ளார்.#LarryNassar #MichiganStateUniversity