search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hitler"

    • பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

    வரும் மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் இட ஒதுக்கீட்டையும் தன் மானத்தையும் காப்பாற்ற நடத்தப்படும் தேர்தல் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அகிலேஷ் பேசினார். அதில், ஒருபுறம், அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் உள்ளனர், மறுபுறம், அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் மக்கள் உள்ளனர்.

    2014 - இல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024 - இல் வெளியேறுவார்கள். ஹிட்லர் கூட 10 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார், அது போல மோடியின் ஆட்சியும் 10 ஆண்டுகளுடன் நிறைவுறும்.

    பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சட்டரீதியான உத்தரவாதம் இருக்க வேண்டும். விவசாயிகளும், விவசாயமும் அழிந்தால், பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'.
    • இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.


    ஹிட்லர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஹிட்லர்' படத்தின் முதல் பாடலான 'டப்பாசு' பாடல் நாளை (ஜனவரி 25) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    • நடிகர் விஜய் ஆண்டனி 'ஹிட்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.


    'ஹிட்லர்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, இயக்குனர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார்.


    ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கவுதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துகள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் இயக்குனர் முரளி அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என்றார்.

    • விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்'என்ற குறிப்புடன் தொடங்கும் இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு  விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இந்த கடிகாரம் ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது.
    • அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.

    வாஷிங்டன் :

    அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும். அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள்.

    ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

    • அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் மந்திரி சுபோத் காந்த் சஹாய் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஜந்தர் மந்தரில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சஹாய் கலந்து கொண்டார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். பிரதமர் மோடியும் ஹிட்லரைப் போலதான் இறப்பார் என தெரிவித்தார்.

    அவரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் மோடிமீது அன்பு வைத்திருப்பதால் தொடர்ச்சியாக அவரை வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்!
    • ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒருமுறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!

    சென்னை:

    உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ள சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல, சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை. தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்!

    நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை இடிக்கிறீர்கள்! வீடுகளை இடிக்கலாம். வழக்குகளைத் தொடுக்கலாம். மக்களை ஒடுக்கலாம்.

    ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியை, ஹிட்லருடன் ஒப்பிட்டு நடிகை ரம்யா டுவிட்டரில் கருத்து கேட்டு இருந்தார். ‘போட்டோஷாப்பில்’ திருத்தம் செய்த ஹிட்லர் படத்துடன் மோடியை ஒப்பிட்டதாக பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ActressRamya #PMModi #Hitler
    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக இருப்பவர் நடிகை ரம்யா. இவர் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.

    இவர் சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, டுவிட்டரில் அவர் பதிவிடும் சில தகவல்கள் அவ்வப்போது பெரும் விவாத பொருளாக மாறி விடுகின்றன.

    இந்த நிலையில், நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், ‘சர்வாதிகாரியான’ ஹிட்லர் சிறுமி ஒருவரின் காதை திருகுவது போன்ற படமும், பிரதமர் நரேந்திர மோடி சிறுவன் ஒருவனின் காதை திருகுவது போன்ற படமும் இடம் பெற்று இருந்தது. மேலும், ‘உங்களின் கருத்துகள் என்ன?’ என்று அவர் மக்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    நடிகை ரம்யாவின் இந்த டுவிட்டர் செய்தி ‘சர்வாதிகாரி’ ஹிட்லரும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே குணம் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மேலும், நடிகை ரம்யா பதிவிட்ட ஹிட்லரின் படம் ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.



    அதாவது ஹிட்லரின் கைகள், சிறுமியின் தோள் மீது இருக்கும் படத்தை ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்து ஹிட்லரின் கைகள் சிறுமியின் காதுகளை திருகுவது போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உண்மையான படத்தையும் வெளியிட்டனர்.

    மேலும், நடிகை ரம்யாவின் டுவிட்டர் பதிவுக்கு கன்னட காமெடி நடிகர் ‘புல்லட் பிரகாஷ்’ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் புல்லட் பிரகாஷ் கூறியிருப்பதாவது-

    ‘ரம்யா மேடம் (பத்மாவதி), இந்த குழந்தையை போல் நீங்கள் இருந்த போது உங்களது தந்தை உங்கள் காதை திருகி இருந்தால் நீங்கள் 2 தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். நரேந்திர மோடி பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. நாளை வீடியோ மூலம் பதில் அளிக்கிறேன்’.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ராகுல்காந்தி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடிகை ரம்யா ஆகியோரின் படங்களை பிறருடன் ஒப்பிட்டு தவறான முறையிலும் கருத்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #ActressRamya #PMModi #Hitler
    ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க பிரதமர் மோடி, ஹிட்லரை போல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #MDMK #Vaiko #PMModi
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அம்பேத்கார் நினைவு நாளையொட்டி தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். பாராளுமன்றத்துக்கு தீ வைத்து விட்டு ஹிட்லர், கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டார்.


    அது போல பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த அளவுக்கும் செல்வார். மத்திய பிரதேச மாநில தேர்தலில் பா.ஜ.க.வினர் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    வடமாநிலங்களில் ஓட்டு போட பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இதனை பா.ஜ.க.வினர் ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

    அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியது யார்? அது கவர்னராக இருந்தால், அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால் அது பச்சை துரோகம். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

    இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமனின் மறைவு வேதனை தருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் உயிர் பாதுகாவலனை இழந்து தவிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #PMModi
    ஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிறிசேனாவை ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். #RanilWickremesinghe #Sirisena #Hitler
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.

    ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.



    இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார். #RanilWickremesinghe #Sirisena #Hitler

    ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு செய்ததை இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்ய நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge
    மும்பை:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே மும்பையின் பண்ட்ரா பகுதியில் இன்று நடைபெற்ற அக்கட்சி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்த நாட்டை சீரழித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள அமைப்புகளை அழித்து வந்ததைப்போல் இந்தியாவின் அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் எண்ணத்துக்கு காங்கிரஸ் இடமளிக்காது என்று கூறினார்.

    இந்திய அரசியலமைப்பு என்பது இரு குறிப்பிட்ட மதம், சாதி, சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றது. 

    இவர்களின் நான்காண்டு ஆட்சியில் சரியான பாதையில் 4 அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.

    தொடர்ந்து ஊடகங்களை நசுக்குவதால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேச்சுரிமையும், கருத்துரிமையும் அழிக்கப்பட்டது. நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சிக்கிறது. 

    ஜெர்மனியின் சர்வாதிகாரி அந்நாட்டுக்கு என்ன செய்தாரோ, அதை இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என மோடி நினைக்கிறார். தற்போது அரசியலமைப்பு சட்டம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தினார். #Hitler #Modi  #HitlerdidtoGermany #MallikarjunKharge
    ×