search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருக்கை"

    • செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
    • பரிசோதனைக்கு ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்திருந்தனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு பொது பரிசோதனை, ரத்த பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சி, இதயத்துடிப்பு போன்ற பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். இதனால் செவ்வாய்க்கிழமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் கே. வி .ஆர். நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் பரிசோதனைக்கு ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்திருந்தனர். ஆனால் ஆரம்ப சுகாதார வளாகத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நீண்ட நேரமாக கர்ப்பிணி பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

    மேலும் பெண்கள் கூறுகையில், வாரம் தோறும் இங்கு பரிசோதனைக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு போதைய இருக்கை வசதி இல்லை. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கர்ப்பிணிப் பெண்களின் வசதிக்காக கூடுதல் இருக்கை மற்றும் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக 44- வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டான 44 வது வார்டில் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தான் உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் பரிசோதனைக்கு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் .போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என நான் ஏற்கனவே மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன். மீண்டும் இது தொடர்பாக அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி விரைவில் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

    • இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன.
    • இல்லத்தின் முன்பு அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்பு சாவடியில் உள்ள வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மாநகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக வீடற்றோர் தின விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார்.

    வீடற்றோர் தினத்தை முன்னிட்டு அங்குசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வீடற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள முதியவர்கள், ஆதரவற்றவர்களிடம் மேயர் சண் ராமநாதன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உங்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும். ஏதாவது குறைகள் கூறினால் உடனுக்குடன் அது சரி செய்யப்படும்.

    இந்த இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன. மேலும் பூங்கா அமைய உள்ளது.

    இல்லத்தின் முன்பு நீங்கள் அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன.

    வருகிற தீபாவளி பண்டிகை அன்று நான் உங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத கடை- நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சென்னை தொழிலாளர் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டத்தின் படி கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கண்ட சட்டத்தின்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவளங்களிலும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுத்து சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இந்த சட்ட திருத்தத்தை கடைப்பிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சென்னை தொழிலாளர் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வரும் காலங்களில் சிறப்பாய்வின் போது கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி மேற்கொள்ளாத உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன.
    • தொலைதூர பஸ்களில், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள் அவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை.

    திருப்பூர் :

    அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பிற கோட்டங்களில் இருந்தும் அதிகப்படியான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது புதிய பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளுக்கு அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இருக்கைகள், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளின் மேல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் இருக்கை எனஅறிவிப்பு ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

    இருப்பினும் உடுமலை மற்றும் உடுமலை மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான நகர மற்றும் தொலைதூர பஸ்களில், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள் அவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை. ஆண், பெண் பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் அந்த இருக்கைகளில், முதியோர், மாற்றுத்திறனாளிகளை அமர வைக்க டிரைவர், கண்டக்டர்களும் முனைப்பு காட்டுவதில்லை.

    இதனால் பஸ்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். எனவே அந்தந்த கிளை மேலாளர்கள் பஸ்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், எங்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. தொலைதூர பஸ்களில் நின்று கொண்டே பயணிக்க சிரமப்படுகிறோம் என்றனர்.

    • அரசு பஸ்களில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து கொள்கின்றனர்.
    • ஏதேனும் புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    அரசு பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும்.முண்டியடித்து பஸ்சுக்குள் ஏறி நிற்கும் பயணிகள் சீட் கிடைக்காவிடினும், நெரிசலில் சிக்கியவாறு பயணிக்கின்றனர். அதேசமயம் சில ஆண்கள், பெண்களுக்கான சீட்டில் 'ஹாயாக' அமர்ந்து பயணிப்பதும், முன்புற படிக்கட்டில் நின்று கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர்.இதனால் பெண்கள், பஸ்சில் ஏறி, இறங்குவதை சிரமமாக கருதுகின்றனர்.எனவேபெண்களுக்கான சீட்டில் ஆண்கள் அமர்ந்து ஏதேனும் புகார் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த சில கண்டக்டர்கள் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.ஆண்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினால் பிரச்னை ஏற்படுகிறது. பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள் அமரக்கூடாது என்பதை, அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டும் வருகிறது.ஆண்களை எழச்செய்து பெண்களை அமரச்செய்யவே முற்படுகிறோம் என்றனர்.

    • பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது.

    திருப்பூர்,

    இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மாநிலத்தில் அடர்ந்த மற்றும் சாலை வசதி இல்லாத மலைப் பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதி மக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் தொழில் நகரம் என்பதால் அருகாமையில் உள்ள ஈரோடு, கோவை, கரூர், சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வசதிக்காக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு காலையில் வேலைக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் பயணித்து ஏராளமானோர் தங்கள் பணியிடங்களை சென்றடைகின்றனர். தற்போது கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து கொரோனாக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில்கள் இதுவரையிலும் இயக்கப்படாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பல பேருந்துகளும் கடந்த 2018 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பி.எஸ்.4 ரக பேருந்துகளாகும். இவற்றின் இருக்கைகள் மிக சொகுசாக அமைக்கப்பட்டு பயணிகள் சுகமாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு தானியங்கி கதவுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த வகை பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது. பேருந்துகளில் உள்ள இருக்கைகளை சில மர்ம நபர்கள் கூரிய முனை கொண்ட பிளேடு அல்லது பாக்கெட் கத்தி போன்ற பொருட்களால் கிழித்து நாசப்படுத்தி வருகின்றனர். இச்செயல் கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை பேருந்துகளிலும் நடேந்தேறியுள்ளது. இவ்வாறு கிழிக்கப்படும் இருக்கைகளில் உள்ள ஸ்பான்ச்சையும் சிலர் பிய்த்து எறிவதால் ஒரு கட்டத்தில் அந்த இருக்கையில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து திருப்பூர் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,தொடர்ச்சியாக இருக்கைகள் நாசப்படுத்தும் மர்ம நபர்களால், சேதத்துக்கு தகுந்தாற்போல் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக ஓட்டுநர் ,நடத்துனர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.மேலும் பேருந்து பாதுகாப்பு மற்றும் இது போன்ற குற்றச்செயல்களை கண்காணிக்க அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்களை தடுக்கலாம் என்றனர்.

    ×