search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diasbled people"

    • கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன.
    • தொலைதூர பஸ்களில், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள் அவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை.

    திருப்பூர் :

    அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பிற கோட்டங்களில் இருந்தும் அதிகப்படியான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது புதிய பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளுக்கு அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இருக்கைகள், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளின் மேல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் இருக்கை எனஅறிவிப்பு ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

    இருப்பினும் உடுமலை மற்றும் உடுமலை மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான நகர மற்றும் தொலைதூர பஸ்களில், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள் அவர்களுக்கு முறையாக ஒதுக்கப்படுவதில்லை. ஆண், பெண் பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் அந்த இருக்கைகளில், முதியோர், மாற்றுத்திறனாளிகளை அமர வைக்க டிரைவர், கண்டக்டர்களும் முனைப்பு காட்டுவதில்லை.

    இதனால் பஸ்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். எனவே அந்தந்த கிளை மேலாளர்கள் பஸ்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், எங்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. தொலைதூர பஸ்களில் நின்று கொண்டே பயணிக்க சிரமப்படுகிறோம் என்றனர்.

    ×