search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic congestion"

    • வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் பல்வேறு விதமான தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு விதமான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நகரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. ஆனால் பிரதான சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் அதற்கு காரணமாகும். குறிப்பாக சத்திரம் வீதியில் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படுகிறது. அதே போன்று வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இது போன்ற பல்வேறு காரணங்களால் உடுமலை பகுதி பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.மேலும் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகரப் பகுதிக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகரப் பகுதிக்குள் பிரதான சாலைகளில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் கனரக வாகனங்களை பகல் நேரத்தில் பிரதான சாலைகளில் நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
    • பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சரிவர திட்டமிடாமல் கட்டப்பட்டதன் விளைவாக பெருமாள் கோவில் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெருமாள் கோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து திரும்பும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தனியார் ஸ்வீட்ஸ் கடை எதிரில் பாலத்துக்கு கீழ் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம்.

    மேலும் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பதாகை வைத்துள்ளது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    வேலூர்:

    வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இதில் மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட பகுதி கள், பழைய நகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகு திகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த நிலையில் சாலைகள் குண் டும், குழியுமாக உள்ளன.

    இதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகி தப்பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட் டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டத்தின் பிரதான குழாய் இணைப்பு ஆற்காடு சாலையில் வருவதால் ஆற்காடு சாலையிலும் பாதாள சாக்கடை திட் டப்பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங் கும் பணியும் நடந்தது.

    இப்பணிகளால் சைதாப்பேட்டை முரு கன் கோவில் தொடங்கி சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் நெடுஞ்சாலை இணைப்பு வரை போக் குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது.

    இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முருகன் கோவில் அருகில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    சாலையில் வரும் வாகனங்கள் எதிர் எதிரே வருவதால் காகிதப்பட்டறையில் ஆற்காடு சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனைத் தவிர்க்க இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • கடந்த 2 நாட்களாக சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    • செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதனை சரிசெய்ய போலீசார் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையில் மிக முக்கிய பகுதியாக செங்கோட்டை நகராட்சி விளங்கி வருகிறது. இந்த வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை ஆயிரக்க ணக்கான வாகனங்களில் இரவு, பகலாக சென்று வருகிறது.

    போக்குவரத்து நெரிசல்

    கடந்த சில மாதங்களாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்-சாண்ட் மணல், ஜல்லி கற்கள் என அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 2 மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைகிறது.

    இதனை சரிசெய்ய போலீசார் போராடி வரும் நிலையில் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகளை சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் சந்திக்கும் இடமாகவும், மேன்சன், பெயிண்டிங், ஒப்பந்ததாரர்கள் கூடும் இடமாகவும் உள்ளது.
    • வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் அதிக அளவில் ஓரே இடத்தில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

    உடுமலை:

    உடுமலை தனியார் சினிமா தியேட்டர் கார்னர் பகுதியில் வணிக வளாகங்கள் மற்றும் மத்திய பஸ் நிலையம் அருகில் அமைந்திருப்பதால் எப்போதும் அந்த பகுதி மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். தினமும் அதிகப்படியான பொதுமக்கள் கூடும் இடமாக உள்ளது. இந்த நிலையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் சந்திக்கும் இடமாகவும், மேன்சன், பெயிண்டிங், ஒப்பந்ததாரர்கள் கூடும் இடமாகவும் உள்ளது. மாலை நேரங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் இடமாகவும் மாறி உள்ளதால் சனிக்கிழமை அன்று வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் அருகில் உள்ள சினிமா தியேட்டரில் புதிய படம் ஒன்று திரையிடபட்டுள்ளதால் நேற்று கூட்டம் அதிக அளவு வந்த காரணத்தால் இப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் அதிக அளவில் ஓரே இடத்தில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆகையால் சனி , ஞாயிறு சினிமா தியேட்டர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது.
    • பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை.

    வீரபாண்டி :

    திருப்பூர் பல்லடம் ரோட்டில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிச லால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தினந்தோறும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த நால் ரோட்டில் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. இங்கு சிக்னல் அமைத்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை . எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மூடப்படாமல் இருப்பதால், பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இன்றியும், சிக்னல் செயல்படாமல் இருப்பதாலும் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து சிக்னலை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் . ஒரு மாதத்துக்கு மேலாகியும் மூடப்படாமல் உள்ள எரிவாயு குழாய் பதிக்க தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும். பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்க வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமித்து, வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
    • இந்த பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமானதாக ஈரோடு ஈ.வி.என். சாலையில் கடந்த சில மாதங்களாக மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை விளங்கி வருகிறது. இந்த சாலையில் தான் அரசு தலைமை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றது.

    இந்த சாலையில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது பகலில் நடக்கும் இந்த பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நேரத்தில் இந்த திட்டப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நிற்கின்றனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் மேலும் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

    தற்போது நமது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் ஈ.வி.என் சாலையில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வது எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

    வெயிலின் தாக்கத்தால் எங்களால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. நாங்கள் சோர்வு அடைந்து விடுகிறோம். பகல் நேரத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதற்கு பதிலாக இரவு நேரத்தில் பணிகள் மேற்கொண்டால் எந்த ஒரு இடையூறும் இருக்காது. இதற்கு வாய்ப்பில்லை என்றால் போக்குவரத்தை சரி செய்ய இங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை
    • நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகரின் பிரதான பகுதியான காந்தி ரோட்டின் இருபக்கமும் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சாலையின் இருபக்கமும் உள்ள மின் கம்பங்களால் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் மின் வாரியத்தினர் ஜோதி நகர் முதல் தாலுகா அலுவலகம் வரை சாலையின் ஓரத்தில் இருந்த கம்பங்களை 10 அடி தூரத்தில் அகற்றி சாலையின் ஓரத்தில் நட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை நெடுஞ்சா லைத் துறையினர் பொக்லைன் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    இதனால் மின் கம்பங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தொலை தொடர்பு கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பது போல் காட்சியளிக்கிறது.

    • பெதப்பம்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு பெதப்பம்பட்டியில் உள்ளது.குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள், நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக கடைகள், இப்பகுதியில் அமைந்துள்ளன.பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள் நால்ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அப்போது தாராபுரம் உட்பட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் விலகிச்செல்ல இடம் இருப்பதில்லை. இதே நிலை உடுமலை, செஞ்சேரிமலை, குடிமங்கலம் உட்பட வழித்தட பஸ்கள் நிற்கும் போதும் ஏற்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நால்ரோட்டில் நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த நிழற்கூரையும் அப்புறப்படுத்தப்பட்டு இடவசதி ஏற்படுத்தப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லை. மழை மற்றும் வெயில் காலங்களில் கடைகளின் முன்புள்ள இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

    அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட கல்வி நிறுவனங்கள் இருப்பதால் நால்ரோட்டில் எப்போதும் மாணவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இவர்கள் பஸ்சுக்காக காத்திருக்க போராட வேண்டியுள்ளது.குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன், பெதப்பம்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பஸ் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து கருத்துரு அனுப்ப ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.அதிகாரிகள் தரப்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நால்ரோட்டில் நெரிசலும், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.எனவே நெரிசலை கட்டுப்படுத்த பஸ் நிலையம் அமைப்பதுடன், தற்சமயம் போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முக்கோணம்

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (எண்:209)ல் முக்கோணம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆனைமலை ரோடு சேர்கிறது.வாளவாடி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உடுமலை மற்றும் பொள்ளாச்சிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன.

    அப்போது பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியிலிருந்து அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலையில், வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் சந்திப்பு பகுதியில் திணறுகின்றன.

    உடுமலை பகுதியிலிருந்து இயக்கப்படும் பஸ்கள், முக்கோணம் பஸ் நிறுத்தத்தில், தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறத்திலும், பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள் வலது புறத்திலும் நிறுத்தப்படுகின்றன.குறுகலான வளைவு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பஸ்கள் நிறுத்தப்படும் போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குறுகலான பாலமும் நெரிசலை அதிகரிக்கிறது.இவ்வாறு தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வரும் வாகனங்களுக்கு முக்கோணம் பகுதி அபாய பகுதியாக மாறியுள்ளது.

    ஆனைமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்களும், அங்கு நிறுத்தப்படும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, முக்கோணம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இதனால் ஆனைமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எளிதாக தேசிய நெடுஞ்சாலையுடன் இணைய முடியும். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களும் வேகத்தை குறைத்து விபத்தை குறைக்க ரவுண்டானா உதவும்.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது நான்கு வழிச்சாலைக்கான பணிகளும் அப்பகுதியில் நடப்பதால் சிக்கல் அதிகரித்துள்ளது. விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைநகராக உள்ளது. இங்கு வயலப்பாடி, அகரம் பாடர், பெறுமுளை, சிறுமுளை, இ.கிரனூர், ஆவினங்குடி, பட்டூர், இடைச்செருவாய், கீழச்செருவாய் போன்ற கிராமங்கள் உள்ளது.இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்ல தினமும் திட்டக்குடிக்கு வந்து செல்வர். இது தவிர திட்டக்குடியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.

    மேலும், திட்டக்குடி நகராட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிக்கும் ஏராளமான பொது மக்கள் பல்வேறு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வருகின்றனர். இது தவிர முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான பொதுமக்கள் திட்டக்குடிக்கு வருகை தருகின்றனர்இதனால் திட்டக்குடி நகரம் தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் குறிப்பாக திட்டக்குடி, ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், கரும்பு டிராக்டர்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடும் அரசு பஸ் தினமும் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகவே பஸ் நிலையம் வருகிறது.

    திட்டக்குடியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் பிரிவை தனியாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை அமைக்காமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் காலங்கடத்தி வருகிறது.

    எனவே திட்டக்குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரை வைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளில் கோரிக்கையாக உள்ளது.

    • மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
    • போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×