search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theerthavari"

    • நாளை அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
    • சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமகம் அன்று, தேவநாத சாமி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக செல்வது வழக்கம். அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி தங்க பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு செல்கிறார்.

    பின்னர் காலை 7:30 மணியளவில் கடற்கரையில் தேவநாத சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலுக்கு சாமி செல்கிறது. அங்கு விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, தேவநாத சாமி மாலை 3 மணியளவில் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மீண்டும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாசாமி கோவிலை வந்தடைகிறார்.

    முன்னதாக நாளை காலை தேவநாதசாமி கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சாமி புறப்பட்ட பின்னர், கோவில் நடை சாத்தப்பட்டு, மாலையில் சாமி திரும்ப வந்த பின்னர் கோவில் நடை திறக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர்.
    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ஞானாம் பிகா சமேத காளஹஸ் தீஸ்வரர், சவுந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் யானை, காமதேனு, குதிரை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவில் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 7-ம் நாள் திருக்கல்யாணமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது.

    இதேபோல் குடந்தை கீழக்கோட்டம் பிரஹன் நாயகி சமேத நாகேஸ்வரர், சோம கமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர், ஆனந்த நிதியம்பிகா சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் மற்றும் சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக விழா கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. விழாவை யொட்டி மேற்கண்ட 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் 4 கரைகளில் எழுந்தருளினர்.

    பின்னர், மகாமக குளபடித்துறையில் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் குளத்தின் 4 கரைகளிலும் சுற்றிவந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    முன்னதாக இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் திரண்டு மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடி வழிபட்டனர்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • சில்வர் பீச்சில் தீர்த்தவாரி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விநாயகர், சந்திரசேகர், மனோன்மணி அம்மன், அஸ்த்ரதேவர் ஆகிய உற்சவ மூர்த்திகள் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்கிறது.

    பின்னர் அங்கு கடற்கரையில் காலை 8 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சொந்தமான புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாசிமக மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தருளியதும், சேவார்த்திகளுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் பகுதியில் சாமி வீதிஉலா நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ராஜவீதி உலா முடிந்ததும், இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைய உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • திருக்கொடியொற்றத்துடன் மாசிமகத் தீர்த்தவாரி பெருவிழா தொடங்கியது.
    • ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெறும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருக்குளத்தில் மாசிமகத் விழாவையொட்டி வருகிற 6-ந்தேதி அன்று பகல் 12 - மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் திருக்கோயில்களான அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவி ஸ்வநாதர், ஞானாம்பிகா சமேத காளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப் பெருவிழாவின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, என சிறப்பு பரிகார பூஜைகள் நேற்று இரவு செய்யப்பட்டு இன்று 25-ந்தேதி காலை திருக்கொடியொற்றத்துடன் மாசிமகத் தீர்த்தவாரி பெருவிழா தொடங்கியது.

    அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை, சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி, காமதேனு, குதிரை, கிளி, ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும், ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • பரமபதவாசல் திறக்கப்பட்டு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார்.
    • இன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • இன்று வீணை வாத்தியம் கிடையாது.
    • நாளை இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், 9.45 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 10.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைகிறர். இன்று வீணை வாத்தியம் கிடையாது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல், கணபதி பூஜையுடன் நடந்த பின்னர் சாமி சன்னதி முன்பு கோவில் ஸ்தலத்தார்கள் கயிலை மலை வேதரத்னம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலையில் அலுவல மேலாளர் விஜயகுமார் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரம் வாசித்தார்.

    பின்னர், சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா சென்று நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை யொட்டி தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் நேற்று முன்தினம் சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரிக்கு பின் ஊர்வலமாக கிள்ளை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதையடுத்து அங்கிருந்து நேற்று காலை சாமி ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்மாபேட்டை புலிமேடு தீர்த்தக்குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தம் குளம், அனந்தீஸ்வரன் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம் ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

    இதையடுத்து இரவு நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்த கிணற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    • திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது.
    • தீர்த்தவாரி கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, நேற்று பெருமாள் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க பல்லக்கில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று விஸ்வரூப தரிசனமும், ஆராதனையும் நடைபெறுகிறது. நேற்று காலை செங்கமலத்தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பெருமாள் மற்றும் தாயார் வீதி உலா மாலையில் நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கணு தீர்த்தவாரி, பாரிவேட்டை விழா கோவில் அருகே கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இன்று நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது
    • நாளை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தார். அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுளினார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைந்தார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 11 மணிமுதல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (வெள்ளிக்கிழமை) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    • நாளை நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.
    • 13-ந்தேதி வரை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தடைவார்.

    அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடுவார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுவார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைவார்.

    நம்பெருமாளர் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெறும். பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    இரவு 11 மணிமுதல் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை6 மணிவரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணி முதல் காலை9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (13-ந்தேதி) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

    அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    • சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 9-ம் நாள் நிகழ்ச்சியாக பிரணாம்பிகை-தர்பாரண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிறைவுநாளான நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், பிரம்ம தீர்த்த கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கோபூஜையும் நடத்தப்பட்டு,அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நடராஜர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்வாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம், தீர்த்தவாரி மற்றும் ஊடல் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    ×