search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜருக்கு தீர்த்தவாரி
    X

    தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜருக்கு தீர்த்தவாரி

    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை யொட்டி தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் நேற்று முன்தினம் சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரிக்கு பின் ஊர்வலமாக கிள்ளை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதையடுத்து அங்கிருந்து நேற்று காலை சாமி ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்மாபேட்டை புலிமேடு தீர்த்தக்குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தம் குளம், அனந்தீஸ்வரன் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம் ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

    இதையடுத்து இரவு நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்த கிணற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×