search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theerthavari"

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
    • பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • நேற்று இரவு கொடியிறக்கம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி 9-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகப் புறப்பட்டு கபிலதீர்த்தத்தில் உள்ள ஆழ்வார் தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. கபிலத்தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து தேவஸ்தான நிர்வாக கட்டிடம் எதிரே உள்ள பி.ஆர். தோட்டத்துக்கு உற்சவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 5 மணிக்கு பி.ஆர்.தோட்டத்தில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு கோவிந்தராஜசாமி கோவிலை அடைந்தனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.40 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • சாமி, அம்பாள் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.
    • சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பாபநாசம் உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.

    ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. பத்தாம் திருநாளான நேற்று சித்திரை விசுவை முன்னிட்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமி, அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா வந்தனர்.

    பகல் ஒரு மணிக்கு கோவில் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு தெப்ப உற்சவம் நடந்தது.

    அதிகாலை சாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.

    சித்திரை விசு சிறப்பு ஆராதனை, தீர்த்தவாரி, தெப்பத் திருவிழா மற்றும் திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதையொடடி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இரவு புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
    • பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜை நடைபெற்று அதன் பின்னர் சுவாமி தரிசனம் தொடங்க உள்ளது. மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் அஸ்திர தேவர் மற்றும் அங்குச தேவருக்கு தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன்பு புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும். இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை குடிதண்ணீர், உணவு, சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் வீதியை சுற்றி வந்து சண்முகநாதபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • திரளான பக்தர்கள் கோவில் கிணற்றில் புனித நீராடினர்.
    • இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த நாளில் கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும்.

    இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஆண்டில் பங்குனி அசுவதி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்கள் இந்த கோவில் கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.

    நேற்று பங்குனி அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்மபுரீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கணேச குருக்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேரோட்டம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 19-ந்தேதி ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாட்கள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவெள்ளறை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு தினமும் பெருமாள்-தாயார் மண்டகப்படிகளுக்கு சென்று வருகின்றனர். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருவெள்ளறை கோவில் உற்சவர்கள் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லித்தாயாருடன் தீர்த்தவாரிக்காக நேற்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளினார். இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு பங்கஜவல்லித்தாயார் சமேத செந்தாமரைக்கண்ணன் சுவாமி பல்லக்கில் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு நேற்று காலை 10 மணியளவில் பெருமாள், தாயார் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் இரவு வரை பக்தர்களுக்கு தாயார்-பெருமாள் காட்சியளித்தனர். நள்ளிரவுக்குமேல் அங்கிருந்து மீண்டும் திருவெள்ளறை புறப்பட்டனர்.

    உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளாக இன்று(திங்கட்கிழமை) இரவு கருட வாகனத்திலும், 15-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 16-ந் தேதி பூந்தேரிலும் சுவாமி வீதி உலா வருகிறார். 17-ந்தேதி குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி காலை நடைபெற உள்ளது. அன்று இரவு சப்தாவரணம் நடக்கிறது. மறுநாள் 19-ந் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் திருவெள்ளறை கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இன்று சாமிக்கு மகுடாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பு மிக்கது.

    அதன்படி தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசிமகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    மாசிமகம் நட்சத்திர தினமான நேற்று மாசிமக உற்சவ விழா திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்தவாரிக்கு சென்றார். சாமி செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் போன்றவை வழங்கப்பட்டது.

    அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்த போது அருணாசலேஸ்வரரே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டு தோறும் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கரையில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாகும்.

    அதன்படி நேற்று கவுதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர்.

    மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்களும் கவுதம நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்க தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான த.வேணுகோபால், துணைத்தலைவர் அ.அ.ராஜமாணிக்கம், செயலாளர் ரா.காளிதாஸ், துணை செயலாளர் நா.லட்சுமணன், பொருளாளர் மா.பன்னீர்செல்வம், சட்ட ஆலோசகர் நா.இளங்கோவன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் மாலை 6 மணிக்கு மேல் சாமிக்கு மகுடாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    • சாமி சிலைகளை எடுத்து வந்த பக்தர்களும் புனித நீராடினார்கள்.
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் சாமி சிலைக்கு நாளை தீர்த்தவாரி நடக்கிறது.

    மாசி மகத்தையொட்டி சென்னையில் கோவில்களில் இருக்கும் உற்சவர் சிலைகளை மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    திருவிழா நடக்கும் கோவில்களில் இறுதி நாளில் மகம் நட்சத்திரத்தில் கடலில் சாமி உற்சவர் சிலைகளுக்கு தீர்த்தவாரி செய்து சந்திரனை பார்த்து தீர்த்தவாரி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டேன் என்று கூறி உற்சவர் விடைபெறுதலே தீர்த்தவாரி ஆகும்.

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை கோவில் சிலைகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெரினா கடற்கரை யில் கோலாகலமாக தீர்த்தவாரி நடந்தது.

    பூந்தமல்லி, பட்டாபிராம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், சூளை திரவுபதி அம்மன் கோவில், வினை தீர்க்கும் விநாயகர் கோவில், பெரம்பூர் அகரம் முருகன் கோவில், புதுப்பேட்டை கொள்ளாபுரி அம்மன் கோவில், பாலசுப்பரமணிய சுவாமி கோவில், தின்ன கடையம்மன் கோவில், சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் வராகி கோவில் உள்ளிட்ட 50 கோவில்களில் இருந்து உற்சவர் சாமி சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    கடற்கரை சென்றதும் அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி செய்தனர். பின்னர் சாமி சிலைகளை எடுத்து வந்த பக்தர்களும் புனித நீராடினார்கள். அதன் பிறகு அங்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    50 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் கடற்கரை சர்வீஸ் சாலையில் வரிசையாக நின்றன. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பெருமாள் கோவில்களில் உள்ள சிலைகளை நடனமாடி எடுத்து வந்தனர். பின்னர் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் சாமி சிலைக்கு நாளை (7-ந்தேதி) தீர்த்தவாரி நடக்கிறது.

    • நாளை அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
    • சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமகம் அன்று, தேவநாத சாமி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக செல்வது வழக்கம். அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி தங்க பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு செல்கிறார்.

    பின்னர் காலை 7:30 மணியளவில் கடற்கரையில் தேவநாத சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலுக்கு சாமி செல்கிறது. அங்கு விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, தேவநாத சாமி மாலை 3 மணியளவில் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மீண்டும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாசாமி கோவிலை வந்தடைகிறார்.

    முன்னதாக நாளை காலை தேவநாதசாமி கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சாமி புறப்பட்ட பின்னர், கோவில் நடை சாத்தப்பட்டு, மாலையில் சாமி திரும்ப வந்த பின்னர் கோவில் நடை திறக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், அக்னி மற்றும் சூரியன் என்ற பெயர்களில் குழந்தை உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த குளங்களில் நீராடி சிவனை வழிபட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நேற்று ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற இந்த கோவிலில் அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது.

    இதையொட்டி அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வரதராஜ பெருமாள் மேல் பல்லக்கில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து மீண்டும் கோவிலை அடைந்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி கண்டார். அப்போது குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்
    ×