search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீதியுலா"

    • ஆனி திருமஞ்சன சிறப்பு வீதியுலா நடைபெற்றது.
    • விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கயிலாய வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது. பின்னர் வீதியுலா மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த சிறப்பு வீதியுலா சிவ தல யாத்திரை குழு திருக்கூட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.



    • கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா நடந்தது.
    • 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அருகே மாத்தூரில் அய்யனார், வடிவுள்ள அம்மன், வடுகநாதர், மதுரை வீரன் கோவிலில் வடிவுள்ள அம்மனுக்கு பால்குடம், காவடி, தேர்வலம் வருதலை முன்னிட்டு அய்யனாருக்கு கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி கடந்த 11-ந் தேதி இரவு எல்லை பிடாரிக்கு காப்பு கட்டுதல், அடுத்தநாள் வடிவுடைய அம்மனுக்கு காப்பு கட்டுதல், 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம், 25-ந்தேதி காலை பால்குடம், காவடி, கரகம், தொட்டி வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து, 26-ந் தேதி வடிவுடையம்மன், வடுகநாதர், மதுரை வீரன் ஆகிய 3 தேரை சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியனும் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். சுண்டக்குடி சுவாமிநாதன் மற்றும் மதியழகன் குழுவினரின் சரித்திர நாடக நிகழ்ச்சியும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் மற்றும் மாத்தூர் மேற்கு கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.

    • பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளில் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.

    இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. தொடர்ந்து, 7-ம் தேதி காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர், 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன்பு உள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராமமக்களும் செய்து வருகின்றனர்.

    • மகாமக குளக்கரையில் 12 சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது.
    • தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருகுளத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் கோவில்களான மங்களாம்பிகை சமேதஆதி கும்பேஸ்வரர்,

    சோமசுந்தரி சமேதவி யாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேதகாசிவிஸ்வநாதர்,

    ஞானாம்பிகா சமேதகாளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப்பெருவிழா வின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர்,

    வாஸ்து சாந்தி என சிறப்பு பரிகார பூஜைகள் இன்று இரவு செய்யப்பட்டு நாளை

    (சனிக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா தொடங்க உள்ளது.

    அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை ,

    சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி , காமதேனு, குதிரை ,கிளி , ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும் , ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது .

    இதேப்போல் குடந்தை கீழ்கோட்டம் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் , சோமகமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர் , ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், மற்றும் கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடிஸ்வரர், சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய கோயில்களில் இருந்து வரும் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் மகாமகத் திருக்குளக் கரையில் 12-சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமகத் தீர்த்தவாரி விழாவும்நடைபெற உள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் மாசிமகப் பெருவிழா, திருத்தேரோட்டம், தெப்போத்ஸவம் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேதஸ்ரீ சக்கரபாணி , அம்புஜவல்லி சமேதஸ்ரீஆதி வராஹ பெருமாள், ருக்மணி,

    சத்யபாமா, செங்கமலத் தாயார் சமேத இராஜகோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) தோப்புத்தெரு இராஜகோபாலசுவாமி (இந்த கோவிலில் மட்டும் கொடியேற்றம் கிடையாது) ஆகிய கோயில்களில் வரும் 26-ந்தேதி காலை கொடியேற்றமும் அதனை தொடர்ந்து மாசிமகப் பெருவிழாவையெட்டி தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன், அனுமந், யானை, புன்னைமரம்,குதிரை ஆகிய வாகனங்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள திருவீதியுலா திருகாட்சியும் நடைபெறும்.

    மாசி மகத்தன்று சக்கரபாணி திருகோவிலில் காலையில் திருத்தேரோட்டமும், ராஜகோபாலசுவாமி, ஆதிவராஹப்பெருமாள் ஆலயங்களில் ரதாரோஹணமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    மாசி மகத்ததன்று மாலை சார்ங்கபாணி திருக்கோயில் குளமான பொற்றாமரை திருக்குளத்தில் உற்சவ நாச்சியார்களுடன் ஆராவமுதப் பெருமாள் எழுந்தருள தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி , மற்றும் கும்பகோணம் உதவி ஆணையர் ராணி (கூ.பொ) கண்காணிப்பாளர்கள் சுதா ,

    பழனிவேல் ஆய்வாளர்கள் தனலட்சுமி , கோகிலதேவி மற்றும் செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சிவசங்கரி, கணேஷ்குமார், மற்றும் அந்தந்த கோயில்களின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மூவரால் பாடல் பெற்ற தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது.
    • மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் அமைந்து ள்ளது.

    மூவரால் பாடல் பெற்ற தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று இரவு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் சிறப்பு திருவீதி உலா காட்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் மற்றும் விநாயகர், சண்டிஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

    தொடர்ந்து திருக்குவளை சகோதரிஞகள் முனைவர் சுந்தரி, சாவித்திரி ஆகியோரின் மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது.

    தவதருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல், கணபதி பூஜையுடன் நடந்த பின்னர் சாமி சன்னதி முன்பு கோவில் ஸ்தலத்தார்கள் கயிலை மலை வேதரத்னம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலையில் அலுவல மேலாளர் விஜயகுமார் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரம் வாசித்தார்.

    பின்னர், சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா சென்று நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது.
    • மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில் ஆண்டு தோறும் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    உற்சவத்தின் 3-ம் நாள் விழாவில் உற்சவர் சக்கரபாணி, சிறப்பு பட்டு வஸ்திரங்கள், விசேஷ ஆபரணங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடி சர்வலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    பின், பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது. பின்னர், மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.

    அவருக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
    • ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரம் நடைபெற்றது.

    இதில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

    பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுடன் கொடி மரம் மற்றும் கோயிலை வலம் வந்து, அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரம்மச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதில் கோவில் குருக்கள்கள் கணேசன், ரவி, மகேஷ், ஆடிட்டர் குருசம்பத், கோவில் கண்காணிப்பாளர் மணி, காசாளர் களியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரம–புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார்.
    • சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது

    இக்கோயிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    இக்கோயிலில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது முடிந்து இருள் வந்துவிட்டபடியால் தனக்கு துணையாக வீரபாகு முதலிய ஒன்று துணை வரும் தங்குவதற்கு இந்திரனை அழைத்து ஒரு கோயில் அமைக்க கூறியதாகவும், மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய ஆலயத்தில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு திருமஞ்சனம் எடுத்துக் கொண்டு இந்திராதி தேவர்–களோடு பிரம–புரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார் என்பதும் குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு கோயிலில் தானே தங்கியதால் இக்கோயில் குமரக்–கோட்டம் என கந்த புராணம் கூறுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது அப்போது சுவாமி அம்பாளுக்கு ஐதீக முறைப்படி சிவாச்சாரி–யார்களால் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது கோயில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், கவுன்சிலர்கள் ஜெயந்தி பாபு, நித்யாபாலமுருகன், தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுக்கை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 4-ந் தேதி நிறைவடைகிறது.

    தினமும் இரு வேலையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    சண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்தல் நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்தல் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதனை காண வரும் பக்தர்களுக்காக பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி, மேலும், மருத்துவ வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.
    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ தலங்களில் 39-வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.

    குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .

    மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    ×