search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் தங்க கருடசேவை
    X

    தங்க கருட சேவை நடந்தது.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் தங்க கருடசேவை

    • பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளில் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.

    இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. தொடர்ந்து, 7-ம் தேதி காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர், 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன்பு உள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராமமக்களும் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×