search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரக்கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம்; தருமபுர ஆதீனம் பங்கேற்பு
    X

    திருக்கல்யாண விழாவில் தருமபுர ஆதீனம் கலந்து கொண்டார்.

    குமரக்கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம்; தருமபுர ஆதீனம் பங்கேற்பு

    • பிரம–புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார்.
    • சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது

    இக்கோயிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    இக்கோயிலில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது முடிந்து இருள் வந்துவிட்டபடியால் தனக்கு துணையாக வீரபாகு முதலிய ஒன்று துணை வரும் தங்குவதற்கு இந்திரனை அழைத்து ஒரு கோயில் அமைக்க கூறியதாகவும், மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய ஆலயத்தில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு திருமஞ்சனம் எடுத்துக் கொண்டு இந்திராதி தேவர்–களோடு பிரம–புரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார் என்பதும் குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு கோயிலில் தானே தங்கியதால் இக்கோயில் குமரக்–கோட்டம் என கந்த புராணம் கூறுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது அப்போது சுவாமி அம்பாளுக்கு ஐதீக முறைப்படி சிவாச்சாரி–யார்களால் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது கோயில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், கவுன்சிலர்கள் ஜெயந்தி பாபு, நித்யாபாலமுருகன், தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×