search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலயம்"

    • இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

    இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி ,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும்

    புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை

    கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
    • ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களை சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,

    அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    • கவுமாரி - மயில்
    • நரசிம்மி - சிங்கம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    • வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.

    இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.

    அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,

    அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்

    மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.
    • இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    மகாமக ஸ்நானம் செய்வதில் நான்கு நிலைகள் உண்டு.

    முதலாம் வகை:

    மகாமக தீர்த்தவாரி நடைபெறும் நேரத்தில் பங்கேற்பது முதல் வகையாகும்.

    சூரியன் கும்ப ராசியில் இருக்கும் போது அமையும் மாதம் மாசி மாதம்.

    குரு சிம்ம ராசியில் இருக்க வேண்டும்.

    அதற்கு நேர் ஏழாம் வீடான அதாவது சம சப்தம ஸ்தனமான கும்ப ராசியில் சூரியன் இருக்க வேண்டும்.

    சந்திரனும் மக நட்சத்திரமும் கூட வேண்டும்.

    அது பவுர்ணமி நாளாக இருக்க வேண்டும். அதுவே மகாமக நாளாகும்.

    இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் (சுமார் 12 மணி அளவில்) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.

    இரண்டாம் வகை:

    மக நட்சத்திரத்துடன் கூடிய மகாமக நாளில் காலை, இரவு என்ற வேறுபாடின்றித் தீர்த்தமாடுதல் இரண்டாம் வகையாகும்.

    மூன்றாம் வகை:

    மகாமக நாள்அமைந்த மாசி மாதத்தில் உள்ள எல்லா நாட்களிலும் மகா மக தீர்த்தத்தில் நீராடுதல் மூன்றாம் வகை.

    இந்த நாட்களில் நீராடும்போது மகாமக ஸ்நான தான விதிகளை நன்றாகப் பின்பற்ற முடியும்.

    நான்காம் வகை:

    குருவுக்கு 'ஆண்டளப்பான்' என்று ஒரு பெயர் உண்டு.

    ஒரு ராசியில் ஒருவருடம் இருப்பார்.

    அதனை ஒட்டி அமைவது குரு வருடம்.

    நவக்கிரக குரு சிம்ம ராசியில் பிரவேசம் செய்து கன்னி ராசிக்கு செல்லும்வரை அமைந்த காலப்பகுதி மகாமக வருடம் ஆகும்.

    மகாமக ஸ்நான தான விதிமுறைகளை நமக்குச் சவுகரியமான நாளில் குடந்தைக்குச் சென்று

    விதிமுறைகளைப் பின்பற்றி புண்ணிய நீராடலாம்.

    எல்லா நாட்களும் புண்ணிய நாட்களே ஆகும்.

    அவரவர் தம் பிறந்த நட்சத்திரம் முதலான நாட்களில் மகாமகம் குளத்தில் நீராடுவது விசேஷப் பலன்களைத் தரக்கூடியதாகும்.

    • புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.
    • அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

    கும்பகோணம் காசி விசுவநாதர் கோவிலில் தெற்கு நோக்கிக் கோவில் கொண்ட நிலையில் நவகன்னியகள் உள்ளனர்.

    இவர்களை வழிபடுவதும் அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியமாகும்.

    ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னியராகக் காசி விசுவநாதர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

    மகாமக வருஷம் குருவின் சிம்மராசிப் பிரவேசத்தில் தொடங்குகிறது.

    அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

    எனவே அவ்வாண்டில் நவகன்னியருக்குத் தினந்தோறும் தைலக் காப்பு செய்வார்கள்.

    இந்தத் தைலக் காப்புக்கு எண்ணெய் கொடுப்பது புண்ணியம் தரும் செயலாகும்.

    வார நாட்களில் செவ்வாய்க் கிழமைகளில் நவகன்னியரை வழிபடுவது விசேஷமாகப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    மகாமகம் தீர்த்தத்தில் குளிப்பவர் அனைவரும் நவகன்னியர்களை போற்றி வணங்குதல் வேண்டும்.

    தம் பொருளாதார நிலைக்கேற்ப எண்ணையும், மஞ்சளும், சந்தனமும், குங்குமமும், மணம் பொருந்திய மலர்களும் கொண்டு இவர்களைப் பூஜை செய்ய வேண்டும்.

    பால் சாதம் நிவேதிக்க வேண்டும். தட்சிணையுடன் கூடிய தாம்பூலம் தருதல் வேண்டும்.

    வீட்டுக்குச் சென்ற பின்னால் ஒன்பது கன்னியரை நினைத்து ஒன்பது சுமங்கலிகளுக்கு உங்கள் சக்திக்கு ஏற்பத் தாம்பூலம் தந்து வணங்க வேண்டும்.

    நான்கு செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து நவகன்னியரை வழிபட்டால்,

    * புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.

    * பருவம் எய்தாதவர்கள் பருவம் எய்தி நல்ல கணவனைப் பெற்று நீடுழி வாழ்வார்கள்.

    * கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் கணவனோடு மனம் ஒத்து வாழ்வார்கள்.

    * பெண்கள் வியாதிகளிலிருந்து நீங்குவார்கள்.

    என்ற பயன்களைச் சொல்கிறது கும்பகோண மகாத்மியம்.

    அருந்ததி, அனசுயை, சாயை, தமயந்தி, சசி, ருக்குமணி ஆகியோர் நவகன்னியரை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் என்கிறது திருக்குடந்தைப் புராணம்.

    கணவனை இழந்த பெண்கள் நவகன்னியரைப் போற்றிப் பரவினால் அடுத்த ஜென்மத்தில் செல்வ வளமும்,

    நல்ல கணவனும் வாய்க்கப் பெற்று நிலைத்த இன்பத்தைப் பெறுவார்கள்.

    இப்படி பல பல பலன்கள் தரும் நவகன்னியருக்கு மகாமக ஆண்டில் இயன்ற நாட்களில் தைலாபிஷேகம் செய்வது ஒரு புண்ணிய செயலாகும்.

    • புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.
    • முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    தன்னை நோக்கி தவம் செய்த நவக்கிரக குருவுக்கு அருள் செய்ய நினைத்த பிரம்மன்,

    தன் கமண்டலத்திலிருந்து வந்த புஷ்கர கங்கையைப் பார்த்து, "நீ குருவுடன் சென்றுவிடு" என்று கட்டளையிட்டார்.

    புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.

    அதோடு குருவுடன் செல்ல கங்கைக்கு விருப்பமும் இல்லை.

    இதையடுத்து பிரம்மன், கங்கை, குரு ஆகிய மூவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு உறுதியானது.

    குரு ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார்.

    ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நதியில் புஷ்கர கங்கை தோன்றி

    குருவுக்கு காட்சி தர வேண்டும் என்ற உடன்படிக்கை ஏற்பட்டது.

    அதற்கு புஷ்கர கங்கை ஒப்புக்கொண்டது.

    இந்த ஏற்பாட்டின்படி,

    குரு மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் கங்கையிலும்,

    குரு ரிஷப ராசியில் இருக்கும் வைகாசி மாதத்தில் நர்மதையிலும்,

    குரு மிதுன ராசியில் இருக்கும் ஆனி மாதத்தில் சரஸ்வதியிலும்,

    குரு கடக ராசியில் இருக்கும் ஆடி மாதத்தில் யமுனையிலும்,

    குரு சிம்ம ராசியில் இருக்கும் ஆவணி மாதத்தில் கோதாவரியிலும்,

    குரு கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணாவிலும்,

    குரு துலாம் ராசியில் இருக்கும் ஐப்பசி மாதத்தில் காவிரியிலும்,

    குரு விருச்சிக ராசியில் இருக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியிலும்,

    குரு தனுசு ராசியில் இருக்கும் மார்கழி மாதத்தில் சிந்துவிலும்,

    குரு மகர ராசியில் இருக்கும் தை மாதத்தில் துங்கபத்ராவிலும்,

    குரு கும்ப ராசியில் இருக்கும் மாசி மாதத்தில் பிரம்மபுத்ராவிலும்,

    குரு மீன ராசியில் இருக்கும் பங்குனி மாதத்தில் பிரநீதாவிலும்,

    புனித நீராடலுக்கு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நாட்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    • குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.
    • இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    தீர்த்தமாடுவது என்றதும் தண்ணீரில் மூழ்கி எழுந்து வருவதுதானே என்று நினைத்து விடக்கூடாது.

    புனித நீராடலுக்கு என்றே சில விதிகள் உள்ளன. இது பற்றி ஆதிகும்பேஸ்வரர் ஆலய குருக்கள் கூறியதாவது:-

    கும்பகோணத்துக்கு புறப்படும் முன்பு ஒவ்வொருவரும் தம் வீட்டில் வழிபாடு செய்தல் வேண்டும்.

    குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.

    இதையடுத்து வீடு முழுவதும் புனித நீரை தெளிக்க வேண்டும்.

    முடிந்தவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம், உடைதானம் செய்ய வேண்டும்.

    அதன்பிறகே கும்பகோணத்துக்கு புறப்பட வேண்டும்.

    இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    வீட்டில் இருந்து கும்பகோணம் எல்லை அடையும் வரை மகாமகம் தொடர்பான இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.

    வேறு பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்தக் கூடாது.

    பக்திபாடல்களை கேட்டபடி பயணிப்பது சிறந்தது.

    கும்பகோணத்துக்குள் நுழையும் முன்பு அஷ்டாதச தலங்கள் எனப்படும் 18 கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த 18 ஆலயங்கள் உள்ள ஊர்கள் வருமாறு:-

    1. திருவிடை மருதூர்,

    2. திரிபுவனம்,

    3. அம்மாசத்திரம்,

    4. திருநாகேஸ்வரம்,

    5. அய்யாவடி,

    6. சிவபுரம்,

    7. சாக்கோட்டை,

    8. மருதாநல்லூர்,

    9. பட்டீஸ்வரம்,

    10. திரிசக்திபுரம்,

    11. தாராசுரம்,

    12. திருவலஞ்சுழி,

    13. சுவாமிமலை,

    14. திருஇன்னம்பூர்,

    15. திருப்புறம் பயம்,

    16. கொட்டையூர்,

    17. கருப்பூர்,

    18. பாணாதுறை.

    • நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.
    • தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் நம் முன்னோர்கள் மிகுந்த மரியாதை கொடுத்தனர்.

    நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.

    தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளை மையமாக வைத்தே எல்லா விழாக்களையும் அமைத்தனர்.

    ''நீரின்றி அமையாது உலகு'' என்பதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நதிகள், நீர்நிலைகளில் நீராடுவது மிகுந்த பலன் தரும் என்று நம்பினார்கள்.

    அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் போன்ற விழாக்களில் தீர்த்தமாடினால் மூன்று பிறவிகளின் பாவம் அகன்று விடும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் குடந்தையில் நீராட குலம் தழைக்கும் என்றனர்.

    சிறப்பு வாய்ந்த குடந்தை மகாமகம் குளத்தில் நீராடினால் அந்த பலனை பெற முடியும்.

    12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    மகாமகம் தினத்தன்று

    ஆதிகும்பேஸ்வரர்,

    காசி விசுவநாதர்,

    அபி முகேஸ்வரர்,

    கவுதமேஸ்வரர்,

    ஏகாம் பரேஸ்வரர்,

    நாகேஸ்வரர்,

    சோமேஸ்வரர்,

    ஆதிகம்பட்ட விசுவநாதர்,

    கோடீஸ்வரர்,

    காளஹஸ்தீஸ்வரர்,

    பாணபுரீஸ்வரர்,

    அமிர்தகவசநாதர்

    ஆகிய 12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    நவக்கிரக தலங்கள்

    கும்ப கோணத்தில் உள்ள சிவாலயங்களில் 8 ஆலயங்கள் நவக்கிரகங்களுக்குரிய தலங்களாக உள்ளன.

    அந்த தலங்கள் விவரம் வருமாறு:

    சூரியன் - நாகேஸ்வரர் கோவில்

    சந்திரன் - ஆதிகும்பேஸ்வரர் கோவில்

    செவ்வாய் - பாணபுரீஸ்வரர் கோவில்

    புதன் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    வியாழன் - சோமேஸ்வரர் ஆலயம்

    சுக்கிரன் - காசி, விசுவநாதர் ஆலயம்

    சனி - அபிமுகேஸ்வரர் கோவில்

    ராகு, கேது - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

    • துலாம் - அபிமுகேஸ்வரர் கோவில்
    • கும்பம் - ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்

    கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களில் 12 ஆலயங்கள் ராசி கோவில்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    அந்த கோவில்கள் விபரம் வருமாறு

    மேஷம் - வரதராஜபெருமாள் ஆலயம்

    ரிஷபம் - சாரங்கபாணி கோவில்

    மிதுனம் - சக்கரபாணி ஆலயம்

    கடகம் - காளஹஸ்தீஸ்வரர் கோவில்

    சிம்மம் - பாணபுரீஸ்வரர் ஆலயம்

    கன்னி - காசி விசுவநாதர் கோவில்

    துலாம் - அபிமுகேஸ்வரர் கோவில்

    விருச்சிகம் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    தனுசு - நாகேஸ்வரர் கோவில்

    மகரம் - சோமேஸ்வரர் ஆலயம்

    கும்பம் - ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்

    மீனம் - பிரம்மன் வேத நாராயண பெருமாள் கோவில்

    • வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.
    • தன்னை அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

    பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் தூது புறப்பட்டார் கிருஷ்ணர்.

    கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்துண்டார்.

    முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன்.

    அவையில் இருந்தவர்களிடம், "யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்காமல்,

    அவரை அவமதிக்க வேண்டும்," என்று உத்தரவிட்டான்.

    ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி,

    தன்னை அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

    துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், "கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?" என்று கேட்டான்.

    வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.

    ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்துவிட்டான்.

    நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார்.

    ஆனால், விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவரை அவமதித்தான்.

    "தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவி செய்ய எனக்கு மனமில்லை!"

    என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்துவிட்டார்.

    நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனுக்கு உதவினால்,

    பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால்,

    துரியோதனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி,

    அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்தது கிரிஷ்ணரின் தந்திரம் ஆகும்.

    ×