search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    எவ்வாறு தீர்த்தமாட வேண்டும்?
    X

    எவ்வாறு தீர்த்தமாட வேண்டும்?

    • குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.
    • இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    தீர்த்தமாடுவது என்றதும் தண்ணீரில் மூழ்கி எழுந்து வருவதுதானே என்று நினைத்து விடக்கூடாது.

    புனித நீராடலுக்கு என்றே சில விதிகள் உள்ளன. இது பற்றி ஆதிகும்பேஸ்வரர் ஆலய குருக்கள் கூறியதாவது:-

    கும்பகோணத்துக்கு புறப்படும் முன்பு ஒவ்வொருவரும் தம் வீட்டில் வழிபாடு செய்தல் வேண்டும்.

    குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.

    இதையடுத்து வீடு முழுவதும் புனித நீரை தெளிக்க வேண்டும்.

    முடிந்தவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம், உடைதானம் செய்ய வேண்டும்.

    அதன்பிறகே கும்பகோணத்துக்கு புறப்பட வேண்டும்.

    இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    வீட்டில் இருந்து கும்பகோணம் எல்லை அடையும் வரை மகாமகம் தொடர்பான இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.

    வேறு பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்தக் கூடாது.

    பக்திபாடல்களை கேட்டபடி பயணிப்பது சிறந்தது.

    கும்பகோணத்துக்குள் நுழையும் முன்பு அஷ்டாதச தலங்கள் எனப்படும் 18 கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த 18 ஆலயங்கள் உள்ள ஊர்கள் வருமாறு:-

    1. திருவிடை மருதூர்,

    2. திரிபுவனம்,

    3. அம்மாசத்திரம்,

    4. திருநாகேஸ்வரம்,

    5. அய்யாவடி,

    6. சிவபுரம்,

    7. சாக்கோட்டை,

    8. மருதாநல்லூர்,

    9. பட்டீஸ்வரம்,

    10. திரிசக்திபுரம்,

    11. தாராசுரம்,

    12. திருவலஞ்சுழி,

    13. சுவாமிமலை,

    14. திருஇன்னம்பூர்,

    15. திருப்புறம் பயம்,

    16. கொட்டையூர்,

    17. கருப்பூர்,

    18. பாணாதுறை.

    Next Story
    ×