search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்கெட்"

    • வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கு செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் ஒரு பகுதி வியாபாரிகள் திட்டங்குளம் பகுதியில் தனியாக இடம் வாங்கி 33 கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு மகாராஜன் என்ற வியாபாரி கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கு தக்காளி வாங்குவதற்காக குவாலிஸ் ராஜா என்ற நபர் வந்துள்ளார். தக்காளி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவரோ ரூ.10-க்கு ஒரு கிலோ தருமாறு கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்து சென்ற ராஜா, தனது நண்பர்கள் சிலரை அழைத்து வந்து மகாராஜனை பதிலுக்கு தாக்கி உள்ளார்.

    இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • சிறிய வெங்காயம் ரூ.160 ஆக அதிகரிப்பு
    • 2 வாரங்களாக இஞ்சி விலை ஒரு கிலோ ரூ.300-க்கு கிடுகிடுவன உயர்ந்து.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மார்க் கெட்டுகளுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மேலும் திண்டுக்கல், மேட்டுப்பாளையம், ஒசூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து குறைந்ததையடுத்து விலை தாறு மாறாக உயர்ந்தது. இது வரை இல்லாத அளவில் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை யானது.

    கடந்த வாரம் கிலோ ரூ.130-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தக்காளி யின் விலை நேற்று ரூ.100 ஆக குறைந்தது. இந்த நிலையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்கப் பட்டு வருகிறது. 28 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.4000-க்கு விற்ப னையா னது. சிறிய வெங் காயத்தின் விளை யும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல் கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்கா யம் 3 மடங்கு விலை உயர்ந்து இன்று ரூ.150-க்கு விற்கப்பட்டது. இதேபோல் பூடு விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது. வெண்டைக்காய் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.80-க்கு விற்கப்பட்டது. மிளகாய், பீன்ஸ் விலையும் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக இஞ்சி விலை கிடுகிடுவன உயர்ந்தது. தற்பொழுது ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு:-

    நாட்டு கத்த ரிக்காய் ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.65, வெண்டைக்காய் ரூ.80, தக்காளி ரூ.130, பூடு ரூ.160, உருளைக்கிழங்கு ரூ.30, பல்லாரி ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.70, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.110, மிளகாய் ரூ.130, புடலங்காய் ரூ.50, பாகற்காய் ரூ.30, இளவங்காய் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது.

    தக்காளி விலை மீண்டும் உயர்ந் துள்ளதையடுத்து இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி யின் பயன்பாட்டை நாளுக்கு நாள் குறைத்து வருகிறார்கள். பீன்ஸ், கேரட் விலை உயர்ந்ததை யடுத்து குறைவான அளவில் பொது மக்கள் காய்கறி களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகை யில் காய்கறிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தற்பொழுது திருமண சீசன் மற்றும் மக்கள் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் காய்கறி விலை இதே நிலை நீடிக்கும் அதன்பிறகு குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    • 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

    இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. 

    • நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
    • மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.

    இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.

    இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

    இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தொண்டி மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்தது
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நம்புதாளை, சோழியக்குடி ஆகிய கடல் பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகுகளில் பிடித்து வரும் மீன்களை ஏலம் விட்டு வெளியூர்களுக்கு வியாபாரிகள் விற்க-வாங்கிச் செல்வது வழக்கம். 

    இந்த நிலையில் விசைப்படகுகள் மீன்பிடி  தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஆழ்கடலில் பிடிக்கப்படும் இறால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை. 

    சில நாட்களாக சோழா எனப்படும் காற்று வீசுவதால் இயற்கையாக கடலில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். மேலும் அமாவாசை நாட்களில் கடல் உள் வாங்குதும் உண்டு. 

    அதன்படி தொண்டி கடல் பகுதியில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் படகுகள் தரை தட்டி நின்றன. கரைப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. 

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதன் காரணமாக தொண்டி மார்க்கெட்டுக்கு வழக்கம்போல் வரும் மீன்கள் விற்பனைக்கு வராமல் மீன் வரத்து மிக குறைவாகவே காணப்பட்டது. கோடை விடுமுறையில் அசைவப்பிரியர்கள்   விரும்பிய கடல் உணவுப்பொ ருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் வியாபாரிகள் சொல்லும் விலைக்கே வாங்கிச்செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
    ×