search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஞ்சி விலை உயர்வு"

    • கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வரும் காரணத்தினால் இஞ்சி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • தொடர் மழை காரணமாக அடிப்படைத் தேவையான காய்கறி விலை அதிகளவில் உயர்ந்து விற்பனை செய்யப் பட்டு வருகின்றது.

    தருமபுரி,

    இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறி வாங்குவது அனைவருக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரூபாய் 80, 85 ஆகிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்ற விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்கறி விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவ தோடு, குறைந்த அளவில் காய்கறி வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில்லரை கடையில் 280 ரூபாய்க்கும், மொத்த காய்கறி விற்பனை கடையில் 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மேலும் சாம்பார் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 ரூபாய் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கும், தக்காளி விலை 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இதில் தற்போது ஆறுதலாக 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இது குறித்து தருமபுரி வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வரும் காரணத்தினால் இஞ்சி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சில வருடங்களில் இஞ்சி விலை 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படாத நிலையில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மேலும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக அடிப்படைத் தேவையான காய்கறி விலை அதிகளவில் உயர்ந்து விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அவதி அடைந்து வருகிறோம் என்றார்.

    • நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
    • மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.

    இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.

    இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

    இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×