search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்றிதழ்"

    • நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    • முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    தமிழக அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் நூறு வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் 100 வயதை கடந்த 50 ஓய்வூதியர்களில் 1916 -ம் ஆண்டு பிறந்த அதிக வயதுடைய 107 வயதான நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த முதியவர் கோபாலகிருஷ்ணனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம்.

    தென்னரசு நேரில் சந்தித்தார்.

    அவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றை வழங்கிய அமைச்சர் சிறிது நேரம் முதியவரிடம் உரையாடி , முதியவரின் உடல் நலனுக்காக நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

    அனைவரும் நலமாக வாழவேண்டும் எனவும், கருணாநிதி எனக்கு வேண்டப்பட்டவர் என்றும் முதிர்ந்த குரலில் உரையாடிய முதியவரின் காலில் விழுந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் ஆசி பெற்றனர்.

    முதியவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமைச்சர், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்;-

    எங்கிருந்தாலும் தமிழ் மொழியை யாரும் அழிக்க கூடாது, தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்று கூறிய அமைச்சர், இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துருதஸ்டமானது என திருவாரூரில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பரிசீலனை நடந்து வருகிறது என்று கூறினார்.

    • மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மற்றும் மயிலாடு துறை மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு இடைய பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி நடைபெற்றது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த போட்டி நாகை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் நடைபெற்ற போட்டியில், நாகை- மயிலாடுதுறை மாவட்டங்க ளை சேர்ந்த நாகை, கீழ்வேளூர், தரங்கம்பாடி, மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் இருக்கும் இடத்தில் கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    4 நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    • காரைக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைக்கான போட்டிகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர்மன்றதலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார்.

    பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட சிலம் பாட்ட கழக தலைவர் டாக்டர். பிரபு, துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, நமச்சி வாயம், கவுரவ தலைவர் அருள், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஆனந்த்குமார், போட்டிகள் இயக்குனர் நாகராஜன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கும ரேசன், டாக்டர்.திருப்பதி, மகரிஷி பள்ளிக்குழுமம் அஜய் யுக்தேஷ், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், விசாலம் சிட்பண்ட்ஸ் உமா பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் விளையாட தகுதிபெறுவர் என்பது குறிபிடத்தக்கதாகும்.

    • அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைவர் வகித்து பேசினார்.

    வரலாற்றுத் துறைத் தலைவர் கார்குழலி வரவேற்றார்.

    அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கிளாபின் பல்கலைக் கழகச் சமூகவியல் பேராசிரியர் முனைவர் சாலமன் செல்வம் கலந்து கொண்டு பாலினச் சமத்து வமின்மையின் தொடக்கமும் அதன் சமூகத்தாக்கமும் ஒரு வரலாற்று அணுகுமுறை என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.

    பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், மன்னர் சரபோஜி கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் கோவிந்தராஜ், திருச்சி தந்தைப் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சீதாலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    கல்லூரியின் தேர்வு நெறியாளர் மலர்விழி, உள்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் பானுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக முனைவர் பூங்கொடி கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். முனைவர் மீனாட்சி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

    புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தன்னாட்சி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகியவற்றிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.

    • 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொட்டுவிடும் தூரத்தில் இலக்கு என்ற திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சேலம், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 15 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.

    பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, மாவட்ட அளவி லும், மாநில அள விலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    எண்ணிக்கை குறைவு

    விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்த துறையின் கீழ் 38 மேல்நி லைப்பள்ளி மற்றும் ஏக லைவா பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 2200 மாணவ -மாணவிகள் பயின்று சென்று உள்ளனர். இத்தனை மாணவர்கள் பயின்றாலும் உயர்கல்விக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    இதனை தவிர்த்து அனை வரும் உயர்கல்வி பயிலும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நமது மாநி லத்தில் அதிகமாக இருந்தா லும், இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சலுகை

    வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் அவசியம் தேவை. பழங்குடி இன மாணவர்களுக்கு கல்விக்கு பணம் ஒரு தடை யாக இருக்க கூடாது என்ப தற்காகவே, அரசு பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது.

    முதல்-அமைச்சர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டம் என்பது பழங்குடி இன மாணவர்க ளுக்கு மிக பெரிய பலன். தாட்கோ மூலமாக நீட் மற்றும் ஜேஇஇ படிப்பிற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவும் தாட்கோ மூலமாக உதவி செய்யப்படு கிறது. இதனை பயன்படுத்தி வெளி நாடுகளுக்கு சென்று படிக்கலாம். கல்வி உதவி தொகையுடன் உயர்கல்விக் கான கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் தேர்ச்சி சத விகிதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் பாடுபட வேண்டும்.

    படிப்பு என்பது அறிவை வளர்க்க மட்டுமல்ல. பொரு ளாதாரத்தை ஈட்டுவதற்கு மட்டுமல்ல. உரிமைகளை பெறுவதற்காகவும் தான். மாணவ, மாணவிகள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும் உயர்கல்வி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆலோசனை

    தொடர்ந்து பல்வேறு துறையில் சாதனை படித்த வர்கள், கல்வியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உயர்கல்விக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில், பழங்குடியி னர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. சிவ லிங்கம், அயோத்தியாபட்ட ணம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
    • இந்த சேவைக்கு கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவுக்கான நேர்காணல், நடைபெற்று வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு, அவிநாசி, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளத்தில் உள்ள சார்நிலை கருவூல அலுவலகங்களில், பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நடைபெற்று வருகிறது.

    கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர், தங்கள் அருகாமையில் உள்ள கருவூலங்களுக்கு சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். ஆதார் கார்டு, பென்ஷனர் அட்டை, வங்கி கணக்கு விவரம், ஏதேனும் ஒரு மொபைல் எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை) கொண்டு சென்று, கைரேகை வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகத்தில் வாழ்நாள் சான்று பதிவுக்காக வரும் பென்ஷனர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட தலைமை கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர் 12,519 பேர் உள்ளனர். இவர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நேர்காணல் நடைபெற்று வருகிறது. தாங்கள் ஓய்வூதியம் பெறும் அருகாமையில் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு காலை, 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணலில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து பென்ஷனர்களும் வருகிற 2024 மார்ச் 31ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, கடந்த ஜூலை 2022 முதல் வீட்டில் இருந்த படியே, தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதற்கான புத்துணர்வு ஒப்பந்தமாக, தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் 2023 இறுதியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஜூலை 2023 முதல் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை போக்கும் விதமாக, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண், மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்த பின் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.கடந்தாண்டு சுமார் 1.75 லட்சம் ஓய்வூதியதார்கள் வீட்டிலிருந்த படியே தங்களின் வாழ்நாள் சான்றிதழை தபால்காரர் வாயிலாக சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    எனவே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே, தங்களது தபால்காரர்களிடம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தமிழ்நாடு 99 சதவீதம் தன்னார்வமுடன் ரத்த தானம் செய்பவர்களில் முதலிடம் வகிக்கின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ இரத்தக் கொடையாளர்களை பாராட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உலக ரத்த கொடையா ளர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி முதல் 2022 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு ரத்த வங்கிகளில் 3 முறை அல்லது அதற்கு மேலும் தன்னார்வமாக ரத்த தானம் வழங்கிய ஆண் கொடையாளர்கள் மற்றும் 2 முறை அல்லது அதற்கு மேலும் தன்னார்வமாக இரத்த தானம் வழங்கிய பெண் கொடையாளர்கள் என மொத்தம் 68 தன்னார்வ ரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

    உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 14 உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மையக்கருத்தினை வெளியிட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டின் மையக்க ருத்தாக "தொடர்ந்து குருதி, பிளாஸ்மா கொடுப்போம் வாழ்வை பகிர்ந்து கொள்வோம்;" என்ற கருத்தினை வெளியிட்டு ள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்திய அளவில் தமிழ்நாடு 99 சதவீதம் தன்னார்வமுடன் ரத்த தானம் செய்பவர்களில் முதலிடம் வகிக்கின்றது. கடலூர் மாவட்டத்தில் ஜனவரி-2022 முதல் டிசம்பர்-2022 வரை ரத்த வங்கிகள் மூலம் மொத்தம் 19,155 யூனிட் ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாரா செலின் பால் , சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். மீரா , மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் , மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் டாக்டர். குமார் , இரத்த மைய மருத்துவ அலுவலர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிக ரத்த தானம்் வழங்கியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    தேவகோட்டை

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தேவகோட்டை வட்டாரத்தில் அதிகளவில் ரத்தம் வழங்கிய ரத்த கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரத்த ெகாடையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் சாவித்திரி, பாலமுருகன், கல்லூரி மாணவர்கள் சூர்யா, கமலேசுவரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் ஷாம் சேசுரான், திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆலோசகர் அழகு ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது
    • சான்றிதழ்களை எஸ்.பி. வழங்கினார்

    அரியலூர்,

    போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி ஓவியப் போட்டிஉள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    • முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
    • விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி முத்துப்பேட்டையில் இன்று காலை காவல்துறை மற்றும் த.மு.மு.க. ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மினி மாரத்தானை முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவிலூர் பைபாஸ் தனியார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் மன்னார்குடி சாலை, ஆண்கள் பள்ளி, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

    இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முடிவில் போட்டியில் வென்ற முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதில் அல்மஹா அறக்கட்டளை நிறுவன ஹைதர் அலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், த.மு.மு.க. மாநில நிர்வாகி வக்கீல் தீன் முகம்மது, நகர தலைவர் அலிம், மன்சூர், காமிம், நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளாார்.
    • முறையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப் பித்துள்ள அனைத்து பொது மக்களுக்கும் எவ்வித தாமத மும் இன்றி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :-

    இ சேவை மையத்தில் சான்றிதழ் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் முறையாக ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ சேவை மையத்தில் ஆவணங்களை முறையாக இணையதளங்களில் பதிவு செய்யாததால் எங்களால் தகுந்த ஆவணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட முடியவில்லை. இதன் மூலம் பொது மக்களுக்கு மிகுந்த தாமதம் ஏற்படுகிறது என் பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

    மேலும் இ சேவை மையத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆவணங்களும் முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை ஆராய வேண்டும். முறையான ஆவணங்கள் கீழே கொடுக் கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இ- சேவை மையத்தில் ஆவணத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இ சேவை மையத்தில் முறையாக பதிவு செய்யப் பட்ட விண்ணப்பதாரர் களுக்கு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை 15 நாட்களிலும், முதியோர் உதவித்தொகை சான்றிதழ் பட்டா உட்பிரிவு இனத்திற்கு 30 நாட்களிலும் சான்றிதழ் வழங்கப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அரசு அலுவலர் களை நேரில் சந்தித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏதேனும் இடையூறு கள் இருந்தால் நேரடியாகவோ மொபைல் மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

    • காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
    • காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை சேர்ந்த துரைசாமி மனைவி சாந்தி. இவர் அதே பகுதியைச் காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார். இதில் காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார். அதுமட்டுமின்றி, வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து, 2019 மார்ச் 13 அன்று காளிமுத்துக்கும், 2021 மார்ச் 18–-ல் தங்கம்மாளுக்கும் தானே வாரிசு என போலியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த தங்கம்மாளின் மகனான வாழப்பாடியில் வசித்து வரும் சேகர் என்பவர், சாந்தி, தனது தாயார் பெயரில் போலியாக வாங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, ஆத்துார் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்துார் கோட்டாட்சியர் சரண்யா, சாந்தி போலியாக பெற்ற 2 வாரிசு சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, தனது தாய் தங்கம்மாள் பெயரில் போலி வாரிசு சான்றிதழ் பெற்று, தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் சாந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏத்தாப்பூர் போலீசில் சேகர் புகார் தெரிவித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்துார் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    மனுவை விசாரணை செய்த ஆத்துார் நடுவர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, போலி வாரிசு சான்றிதழ் பெற்ற சாந்தி மற்றும் பொய் சாட்சியளித்த சாந்தியின் மகன் ராஜேந்திரன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பரமணி. பாப்பா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட ஏத்தாப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் சாந்தி, ராஜேந்திரன், சுப்பரமணி மற்றும் பாப்பா ஆகிய 4 பேர் மீதும், 3 பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×