search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தரகர்கள்"

    • பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளாார்.
    • முறையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப் பித்துள்ள அனைத்து பொது மக்களுக்கும் எவ்வித தாமத மும் இன்றி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :-

    இ சேவை மையத்தில் சான்றிதழ் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் முறையாக ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ சேவை மையத்தில் ஆவணங்களை முறையாக இணையதளங்களில் பதிவு செய்யாததால் எங்களால் தகுந்த ஆவணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட முடியவில்லை. இதன் மூலம் பொது மக்களுக்கு மிகுந்த தாமதம் ஏற்படுகிறது என் பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

    மேலும் இ சேவை மையத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆவணங்களும் முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை ஆராய வேண்டும். முறையான ஆவணங்கள் கீழே கொடுக் கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இ- சேவை மையத்தில் ஆவணத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இ சேவை மையத்தில் முறையாக பதிவு செய்யப் பட்ட விண்ணப்பதாரர் களுக்கு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை 15 நாட்களிலும், முதியோர் உதவித்தொகை சான்றிதழ் பட்டா உட்பிரிவு இனத்திற்கு 30 நாட்களிலும் சான்றிதழ் வழங்கப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அரசு அலுவலர் களை நேரில் சந்தித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏதேனும் இடையூறு கள் இருந்தால் நேரடியாகவோ மொபைல் மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

    • இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
    • பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை முறைப்படுத்தப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 450 மற்றும் டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் அதிகமான வாடகை வசூவிப்பதாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மான்யத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல் (மாவட்ட வட்டார வாரியாக உரிமையாளர் பெயர், முகவரி, எந்திர வகை மற்றும் செல்போன் எண்னுடன்) தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைகு மிகாமல் செலுத்தி பயன்பெறலாம்.

    மேலும், வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும் டயர் எடப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

    ேமலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் வட்டாட்சியர்கள் வேளாண் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை நாகப்பட்டினம் செயற்பொறியாளர் தொலைபேசி எண். 94420 49591, உதவி செயற்பொறியாளர் தொலைபேசி எண் 94432 77456 உதவிப் பொறியாளர் (வே.பொ), தொலைபேசி எண் 94452 40064) ஆகியோறை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் லஞ்சம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வசந்தம்கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்காணிப்பில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இலவச நலத்திட்டங்களை வழங்குவதற்கு தகுதி அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து 100 சதவீதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த செயலை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனவே இதுபோன்ற தவறுகள் இனியும் தொடர்ந்து நடைபெற்றால் பாதிக்கப்படும் பயனாளிகள் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

    ×