107 வயது முதியவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழ் வழங்கல்

நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியவரிடம் வழங்கினார்.
ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியவரிடம் வழங்கினார்.
Published on

நாகப்பட்டினம்:

தமிழக அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் நூறு வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் 100 வயதை கடந்த 50 ஓய்வூதியர்களில் 1916 -ம் ஆண்டு பிறந்த அதிக வயதுடைய 107 வயதான நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த முதியவர் கோபாலகிருஷ்ணனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம்.

தென்னரசு நேரில் சந்தித்தார்.

அவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றை வழங்கிய அமைச்சர் சிறிது நேரம் முதியவரிடம் உரையாடி , முதியவரின் உடல் நலனுக்காக நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

அனைவரும் நலமாக வாழவேண்டும் எனவும், கருணாநிதி எனக்கு வேண்டப்பட்டவர் என்றும் முதிர்ந்த குரலில் உரையாடிய முதியவரின் காலில் விழுந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் ஆசி பெற்றனர்.

முதியவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமைச்சர், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்;-

எங்கிருந்தாலும் தமிழ் மொழியை யாரும் அழிக்க கூடாது, தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்று கூறிய அமைச்சர், இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துருதஸ்டமானது என திருவாரூரில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பரிசீலனை நடந்து வருகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com