search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணம்"

    • விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்ம மரணமடைந்துள்ளார்
    • விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து கொலையா ?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா மிரட்டு நிலையை சேர்ந்தவர் குடியரசு மகன் சிதம்பரம் (வயது 39). இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெம்மணி கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.பின்னர் விராலிமலையை அடுத்த வெம்மணி கிராமம் அருகே உள்ள நீர்பழனியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    தற்போது இவர் விரா லிமலை அருண் கார்டன் பகுதியில் வீடு வாட கைக்கு எடுத்து தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை யடுத்து கிராம உதவியாளர் பன்னீர் என்பவர் அருண்கா ர்டனில் உள்ள சிதம்பரம் தங்கியிருந்த வீட்டில் சென்று பார்த்துள்ளார். அப்போது சிதம்பரம் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண் டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரா லிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
    • கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி,

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடு த்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மேலபுதூரில் காருக்குள் டிரைவர் பிணமாக கிடந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி பாலக்கரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் வாழவந்தான் கோட்டையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது காருக்கு திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ராஜா என்கிற எட்வர்டு ஆரோக்கியராஜ் என்பவர் ஆக்டிங் டிரைவர் ஆக இருந்து வந்தார் .சம்பவத்தன்று இவரது காரை எடுத்துக்கொண்டு திருச்சி மேலப்புதூர் பகுதி யில் உள்ள பள்ளி அருகில் நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் காருக்குள் இருந்த ராஜா என்கிற எட்வ ர்டு ஆரோக்கியராஜ் மயங்கி ய நிலையில் பிணமானார்.இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மாயமான முதியவர் குட்டையில் பிணமாக மீட்பு
    • குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டிக்குழிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 75). இவர் மின்சார வாரியத்தில் இளமின் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ெபரியசாமி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் ராஜ்குமார், பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில் கோரியாம்பட்டியில் இருந்து செட்டிக்குழிபள்ளம் செல்லும் சாலையில் கல்லுக்குழி குட்டையில் ஒருவர் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குட்டையில் பிணமாக மிதந்தது பெரியசாமி என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமி குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    • பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் மூதாட்டி பிணம் கிடந்தது
    • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாடான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்பு சாமிகவுண்டர். இவரது மனைவி ராமாயியம்மாள் (வயது 80). இவர்கள் இருவ ரும் மூத்த மகன் தேவசி காமணியுடன் வசித்து வருகி ன்றனர். இந்நிலையில் தேவசிகா மணியின் மகன் தமிழரசு ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணை மறு மணம் செய்ய முடிவு செய்து ள்ளார். இதற்கு ராமாயி யம்மாள் மறுப்பு ெதரிவி த்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய ராமாயி யம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இட ங்களில் தேடி பார்த்தும் ராமாயியம்மாள் கிடை க்கவில்லை. இதையடுத்து பெத்தம்பாளையம் அருகே கருக்குபாளையம கீழ்ப வானி வாய்க்காலில் ராமா யியம்மாள் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் காஞ்சி கோவில் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ராமாயியம்மாள் உடலை மீட்டு அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வை த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராமாயியம்மாள் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    • உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது.
    • இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ெரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். அவர்கள் அளித்த தகவலின் படி ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். 50 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத முதியவர் யார், இவரை யாரோனும் கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா, அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா, ரெயிலில் இருந்து தவழி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கொலை செய்து உடல் வீச்சா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுந்தராபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

    இதுபற்றி அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது தண்டவாளத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 30 வயது மதித்தக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது தலை அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்து காணப்பட்டது. ஒரு கையும் துண்டிக்கப்பட்டு இருந்தது. அந்த நபர் கட்டம் போட்ட கருப்பு கலர் லுங்கி அணிந்திருந்தார்.

    அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான நபர் லுங்கி அணிந்திருந்ததால் அவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.

    ஆனால் உள்ளூரில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் வேறு யாராவது மாயமாகி உள்ளார்களா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • வானதிரையன் கிராமம் கோவில் மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் டிரைவர் பிணம் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
    • கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வானதிரையன் குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் மாலை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த பொக்லைன் எந்திரத்தை டிரைவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்த திருஞானத்தின் மகன் வெங்கடேசன்(வயது 28) ஓட்டி வந்து நிறுத்தியிருந்தார். நேற்று காலை அப்பகுதியில் மண் அள்ளப்பட இருந்தது. இந்நிலையில் அய்யனார் கோவில் மண்டபத்தில் தூக்குப்போட்ட நிலையில் வெங்கடேசன் பிணமாக தொங்கினார். கோவிலுக்கு வந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
    • தகவல் தர ரெயில்வே போலீசார் அறிவிப்பு

    திருச்சி, 

    திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே காஜாபேட்டை பகுதிடியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்கைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபர் மஞ்சள் நிற சட்டையும், சிமெண்ட் கலர் கையிலியும் அணிந்துள்ளார். அவர் வலது கையில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற சீட்டு, பிங்க் கலரில் உள்ளது. இடது கை நெருப்பில் பட்டு சற்று எரிந்த நிலையில் சுருங்கியுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் 9498139826, 9498101978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • திருச்சியில் அழுகிய நிலையில் வீட்டுக்குள் எலக்ட்ரீசியன் பிணம் கிடந்தது
    • பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவன் சகாயராஜ் (வயது 40 )எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரதுபூட்டிய வீட்டுக்குள் இருந்து இன்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சகாயராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சகாயராஜ் தூக்கில் பிணமாக தூங்கி கொண்டிருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.மனைவி கோபித்துச் சென்ற அன்றைய தினமே அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடந்தது
    • கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பததாக வைகநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சதீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில்,இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை முகம் உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் மீன்கள் கடித்ததற்கான அடையாளம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×